சர்வதேச மனித உரிமை தினமான நாளை கொழும்பில் சமவுரிமை இயக்கம் போராட்டத்திற்கு அழைப்பு
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
09 Dec 2015
- Hits: 1190
நாளை டிசம்பர் 10ம் திகதி, சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கொழும்பில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், பாராமுகங்களை எதிர்த்து மாபெரும் ஆர்பாட்டத்திற்கு சமவுரிமை இயக்கம் அழைப்பினை விடுத்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களான; கடத்தல், மற்றும் சரணடைந்து காணாமல் ஆக்கல், வன்னி யுத்தத்தில் மக்களை கொத்து கொத்தாக படுகொலை செய்தது முதல் பத்திரிகையாளர்கள், மனித உரிமையாளர்கள் கடத்தல், காணாமல் ஆக்கல் படுகொலைகள் என இன-மத-மொழி வேறுபாடுகள் இன்றி பல் வேறு மனித உரிமைகள் மீறப்பட்டன.
சமவுரிமை இயக்கத்தின் நோர்வே போராட்டம் (படங்கள்)
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
05 Dec 2015
- Hits: 866
நேற்றைய தினம் 03.12.15 அன்று ”சம உாிமை இயக்கத்தின்” நோா்வே கிளையினரால்; இலங்கை கொடுஞ்சிறைகளில் பல வருடக்கணக்காக எந்த நீதி விசாரணைகளுமற்று சர்வதேச மனித உரிமைகளிற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி நோர்வே பாராளுமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்ட கண்டன போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் நோர்வே கிளை ஒழுங்கு செய்திருந்தது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத்திற்கு அழைப்பு
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
29 Nov 2015
- Hits: 2774
இலங்கை கொடுஞ்சிறைகளில் பல வருடக்கணக்காக எந்த நீதி விசாரணைகளுமற்று சர்வதேச மனித உரிமைகளிற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, அனைத்து அரசியல் கைதிகளையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நோர்வேயில் இடம்பெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட கண்டன போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் நோர்வே கிளை ஒழுங்கு செய்திருக்கின்றது.
இப்போதாவது காணாமல்போன சகலரினதும் தகவல்களை வெளியிடு!
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
26 Nov 2015
- Hits: 808
இற்றைக்கு 11 மாதங்களுக்கு முன்பு ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை கவிழ்க்கப்படும்போது எமது நாட்டில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் காணாமல் போயிருந்தனர். தமது பிள்ளை- அல்லது கணவர்- அல்லது மனைவி, தாய், தந்தை பற்றிய தகவல்களைத் தேடி இராணுவ முகாம்களுக்கு அலைந்து திரிந்து கதறியழும் மனிதர்களின், பெண்களின் கண்ணீரால் இந்த வடக்கு தீபகற்பம் நிரைந்து வழியுமளவிற்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.
தேடிச்சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு கிடைத்த பதில்
"அப்படி ஒருவரை நாங்கள் கைது செய்யவில்லை" என்பதுதான்.
காணாமல் போனவர்களின் தகவல்களை உடன் வெளியிடு! யாழில் ஆர்ப்பாட்டம்
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
28 Nov 2015
- Hits: 996
காணாமல் போனவர்களின் தகவல்களை உடன் வெளியிடுமாறு கோரி சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் காலை 9.30 மணியளவில் கொட்டும் மழைக்கும் மத்தியில் ஆர்ப்பாட்ட போராட்டம் ஆரம்பமானது.
கடந்த காலங்களில் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் செய்யப்பட்டோர் ஆகியோரின் தகவல்களை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
02 Nov 2015
- Hits: 1128
யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்டன. இன்றுவரை, யுத்தத்திற்கு பலியாகிய மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. காணாமல் போனவர்கள் சம்பந்தமான பிரச்சினை, இடம் பெயர்ந்தவர்களின் பிரச்சினை, சொத்துக்களை இழந்த மக்களின் பிரச்சினை போன்றவற்றை தவிர அடக்குமுறை சட்டங்கள் மற்றும் அடக்குமுறை இயந்திரங்கள் தொடர்ந்தும் செயற்படுவதால் ஏற்பட்ட பிரச்சினைகள் அப்படியே உள்ளன. அவற்றில் அரசியல் கைதிகளை பற்றிய பிரச்சினை முக்கியமான ஒன்று. அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத நடவடிக்கையிலும் சமீபத்தில் ஈடுபட்டனர். அதே நேரம், அரசியல் கட்சிகள், வேறு அமைப்புகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வருகின்றனர். சம உரிமை இயக்கம் கடந்த சில காலங்களாக இது சம்பந்தமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யாது, சிலருக்கு மாத்திரம் பிணை வழங்க தாம் தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் கடந்த வாரம் கூறியது.
கடத்தப்பட்டுக் காணாமல் போனோரை விடுவிக்கக்கோரி யாழில் சமவுரிமை இயக்கம் போராட்டம்
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
26 Nov 2015
- Hits: 1041
“காணாமல் போனவர்களின் தகவல்களை உடன் வெளியிடு”
வட-கிழக்கு உட்பட 5000 இக்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு, அல்லது திட்டமிட்ட முறையில் காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, வைகாசி 2009 இல் முள்ளிவாய்காலில் தமிழ் மக்களின் இரத்தம் ஆறாய் ஓட, கூக்குரல்களுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலருக்கு என்ன நடந்ததென்று அரசைத் தவிர ஒருவருக்கும் தெரியாது. இன்றுவரை. தற்போது எவரும் காணாமற் போகச் செய்யப்பட்டோர், கடத்தப்பட்டோர் பற்றி கதைப்பதும் இல்லை. இவர்களின் குடும்பங்களின் நிலை பற்றி அக்கறை கொள்வதுமில்லை. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாம் தான் எனக் கூறிக் கொள்வோர், மைத்திரி-ரணில் அரசைக் காக்கும் விதத்தில் கள்ள மௌனம் காக்கின்றனர்.
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்! – யாழ் கருத்தரங்கம் (படங்கள்)
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
05 Nov 2015
- Hits: 937
சமவுரிமை இயக்கத்தினரால் நேற்று மாலை 3:30 மணியளவில் யாழ் நூலகத்தில் அமைந்துள்ள உணவுச்சாலை கேட்போர் கூடத்தில்; அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கம் இடம்பெற்றது.
சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சந்திரகுமார் கபிலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ரவீந்திர முதலிகே, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி நிவாஸ், சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், சமவுரிமை இயக்க செயற்பாட்டாளர்கள் யூட் சில்வா புள்ளே, தர்மலிங்கம் கிருபாகரன், பூபாலபிள்ளை சந்திரகுமரன் உட்பட அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியளார்கள் என பலர் கலந்து கொண்டனர்.