Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

உறங்கிக் கிடப்போமா? அன்றேல் உரிமைக்காய் எழுவோமா?

தேயிலை உற்பத்தியானது இந்த நாட்டின் தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றது என்பதை எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இந்த தேயிலை உற்பத்தியின் பின்னணியில் இருப்பது யார்? அவர்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கிறது? அவர்களின் சமூக, அரசியல் நிலவரங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. என்பது பற்றி ஆட்சியாளர்களோ அல்லது தோட்டக்கம்பனிகளோ கண்டுகொள்ளாது இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

Read more ...

"சீபா" இல்லை "இட்கா" - யானைகள் போதாதென்று மாடுகள்

கடுமையான எதிர்ப்பிற்கும் குழப்பத்திற்கும் காரணமான சீபா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட மாட்டாதெனவும், அதற்குப் பதிலாக இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையில் ‘இட்கா’ (ETCA) என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய - இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அரசாங்கம் உத்தியோக ரீதியில் அறிவித்திருக்கின்றது.

2015 செப்டம்பர் 14ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. இந்தப் பயணத்தின் போது சீபா ஒப்பந்தத்தை வேறு பெயரில் ஒப்பமிட இந்தியாவுடன் இணங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

Read more ...

போராட்டம் பத்திரிகை (மாசி 2016) வெளிவந்து விட்டது!

இந்த பத்திரிகை கீழ் வரும் ஆக்கங்களை தாங்கி வெளிவந்துள்ளது.

1. புதிய அரசியலமைப்பில் இனிப்பு தடவிய விஷம்

2. அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!

3. ஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்:

"இதற்கு நல்ல உதாரணம், மத்தியகிழக்கு நெருக்கடியாகும். 1948ல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட நாள் முதல், பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதல் கடந்த 67 வருடங்களாக தொடருகிறது. இதுவரை ஐ.நா.பொதுச் சபையால் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் அமெரிக்காவின் “வீட்டோ” அதிகாரத்தினால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது. பல இலட்சம் பாலஸ்தீனியர்கள் கடந்த 67 வருடங்களாக பிறந்த மண்ணிலும் உலக நாடுகளிலும் அகதிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."

Read more ...