Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கண் கெட்டவர்களின் பார்வைகள்..!

இந்த சனங்களுக்கு கண்கெட்டுப் போச்சு. எல்லாத்துக்கும் ஏதாவது குறை கூறிக்கொண்டே இருக்குதுகள், இந்த முற்போக்குகள்..! நாங்கள் மாற மாட்டம், இப்படியே தான் இருப்பம் எண்டுதுகள் பிற்போக்குகள்..!

 

உதுகள் என்னத்தையாவது கத்தட்டும், நான் களவெடுப்பேன்.., நான் கற்பழிப்பன்.., நான் கொலை செய்வன்.., எண்டு அடம் பிடிக்குதுகள் புறம்போக்குகள். எல்லாத்துக்கும் பைத்தியம் பிடிச்சுப் போச்சு.

முப்பது வருசமாய் அவை சொல்லுறதை தான் செய்யோணும்.., அவை சொல்லுறதை தான் சொல்லோணும்.., எல்லாம் அவை சொல்லுற படிதான் கேக்கோணும். தமிழ் அரசியல்வாதிகள் ,அரசஅதிகாரிகள் கூட அவை சொன்னபடிதான் எல்லாம் செய்தவை. அப்பப்பா..! சனங்கள் இப்பதான் நிம்மதியாய் இருக்கு. மகிந்தா ஐயா இராணுவத்தாலை எல்லாத்தையும் அடக்கிப் போட்டார். உந்த அரசியல்வாதிகளாலை ஒண்டும் ஏலாது. இராணுவம் இல்லை எண்டால் எல்லாம் போச்சு. சிங்கள இராணுவம் தான் சட்டத்தையும் ஒழுங்கையும் அப்படியே பிடிச்சு வைச்சிருக்கு.


பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் எண்டு கத்தினம், அப்படி பெரிசா என்ன நடந்து போச்சு..? ஒரு நாளைக்கு ஒண்டு ரெண்டு வன்முறை நடக்குது..!  ஏன்.., அவையும் பெம்பிளைப் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போய் சண்டை பிடிக்க விட்டவை தானே..! அதை விடப் பெரிசா இப்ப என்ன நடந்து போச்சு..? அவை சண்டை பிடிக்கப் போனதாலை தானே இத்தனை பெண்களும் அனாதையாயும், விதவையாயும் ஆனவை. எல்லாரையும் உடனே வாழவை எண்டா மகிந்தா ஐயா என்ன செய்யுறது? அவரும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் வாக்கு குடுத்திட்டார். சொன்னதை செய்யாட்டி அவங்க என்ன நினைப்பாங்க. அவங்க இரண்டு பேரும் இல்லாட்டி மகிந்தா ஐயா எவ்வளவு கஷ்ரப்பட்டிருப்பார். சனங்களை சாக்காட்டினாலும், ஏதோ அதுகளையும் ஒரு மாதிரி சாக்காட்டிப் போட்டார். முப்பது வருசம் அதுகளோடை நாங்க பட்ட கஷ்ரம்...! இப்ப நினைக்கவே வயித்தை கலக்குது.


கொஞ்சம் கொஞ்சமாய் தானே எல்லாத்தையும் செய்யோணும். ஐயான்ரை இராணுவமும் ஐயாவை தெய்வமாய் நினைச்சு ஐயாவோடை நிண்டு அரசியல் நடத்திற பொடியளும் கஷ்ரப்பட்ட, புருஷன் இல்லாத பொம்பிளையளுக்கு ஏதோ தங்களாலை முடிஞ்சதை செய்யுறாங்க. புருஷன் இல்லாமல் பொம்புளையள் எவ்வளவு கஷ்ரப்படுங்கள். அது தான் அவங்கள் தங்களாலை முடிஞ்சா தாங்களே உதவி செய்யுறாங்க அல்லது விபச்சாரத்திலையாவது சேத்து விடுறாங்க. விபச்சாரம் எண்டா என்ன.., அதுவும் ஒரு தொழில் தானே.


காடுகளுக்கையும், பத்தைகளுக்கையும் அந்த சின்னஞ் சிறுசுகளை போட்டு எப்படியெல்லாம் கஷ்ரப்படுத்தினாங்க..! இப்ப அதுகள் சந்தோஷமாய் இருக்கோணும் எண்டு தான் மகிந்தா ஐயாவும், டக்கிளஸ் ஐயாவும் எல்லாத்தையும் திறந்து விட்டிருக்கினம். இப்ப குடிக்கலாம்.., ஆடலாம்.., பாடலாம்.., பொடியள் பொட்டையளோடை ஜாலியாய் இருக்கலாம் என்ன வேணும் எண்டாலும் செய்யலாம். இடைக்கிடை இராணுவமும் உதவி செய்யுது டக்கிளஸ் ஐயான்ரை பொடியளும் நிறைய உதவிகள் செய்யுறாங்க..! அண்டைக்கும் நெடுந்தீவிலை டக்கிளஸ் ஐயாண்ரை பொடியன் லக்சினிக்கு உதவி செய்யப் போகேக்கை சின்னப் பிழை நடந்து போச்சு. ஒண்டுமில்லாததை போய் உந்த முற்போக்குகள் பெரிசுபடுத்திக் கொண்டிருக்குதுகள்.


அமெரிக்காகாரனுக்கு வேறை வேலையில்லை. அவைக்கு எல்லோரும் தங்கடை காலுக்கை இருக்கோணும். தங்கடை மக்களை தாங்கள் பாக்க வக்கில்லை. வெளிநாடுகளை கொள்ளை அடிச்சு தான் தங்கடை நாட்டை வளர்க்கோணுமாம். அவைக்கு வக்காலத்து வாங்கி அவையோடை சேர்ந்து கொள்ளை அடிக்கிறத்துக்கு கொஞ்சப் பேர் அவைக்கு வால் பிடிச்சொண்டு திரியினம்..! எல்லா நாட்டையும் மொட்டை அடிச்சு முடிஞ்சுது, இப்ப இலங்கை வேணுமாம். ஜெனிவாவிலை எல்லாரும் சேர்ந்து நிண்டு கொண்டு எங்கடை ஐயாவை வெருட்டீனம். இவையிண்டை வெருட்டலுக்கு பயப்பிட மகிந்தா ஐயா என்ன கேனைப் பயலா அல்லாட்டி எங்கடை மக்கள் என்ன முட்டாளுகளா..? உந்த அமெரிக்காவை நம்பியிருந்தால் எங்கடை சனங்கள் இப்பவும் வன்னீக்கை அவங்களோடை இருந்து கஷ்ரப்பட்டிருக்க வேண்டியது தான். நல்ல காலம் எங்கடை ஐயா புத்திசாலித்தனமாய் சீனாக்காரன்ரை காலிலையும், இந்தியாக்காரன்ரை காலிலையும் விழுந்ததாலை தப்பினம்.


ஏதோ கெடுத்து சாக்காட்டிப் போட்டாங்களாம். படத்தைப் காட்டி பயப்படுத்தீனம். இராணுவம் எண்டா அப்படி இப்படித் தான் இருக்கும். உலகத்திலை ஒரு இராணுவமும் செய்யாததையே எங்கடை இராணுவம் செய்து போட்டுது. எத்தனை வருஷம் அவங்களும் காட்டுக்கை இருந்து சண்டை பிடிக்கிறது. பொட்டையளைக் கண்டா அவங்களுக்கு ஆசை வரும் தானே..! அது தான் சாக்காட்ட முதல் ஏதாவது செய்வமெண்டு செய்தவங்க, ஒரு ஆசேலை கால் விரலாலையும் துவக்காலையும் குத்திப் பார்த்தவங்க. இசைப்பிரியா எண்டு அடிச்சு விழுந்து கத்துகினம், அவ என்ன சும்மாவே இருந்தவ..? அவையோடை சேந்து அவ போட்ட ஆட்டம் இவைக்கு தெரியாதோ..! எங்கடை இராணுவம் செய்தது தான் சரி. போர்குற்றமாம் போர்குற்றம்.. கண்டறியாத போர்க்குற்றம்.


மகிந்தா ஐயா சர்வாதிகாரியாம். கிட்லரும் சர்வாதிகாரியாய் இருந்த படியாய் தான் உலகத்தையே ஒரு கலக்கு கலக்கி யூதரை கொன்று குவித்து ஜேர்மனியை காப்பாத்தினார். அது மாதிரி மகிந்தா ஐயா சர்வாதிகாரியாய் இருக்கிறதாலை தான் அவங்களையும் அங்கை இருந்த சனங்களையும் சாக்காட்டி எங்களை எல்லாம் காப்பாத்தினார். ஐயா இருக்கிறவரைக்கும் எங்களுக்கு குறை இல்லை. ஐயாவோடை இருந்து கொண்டு நாங்கள் என்ன வேணும் எண்டாலும் செய்யலாம். இதைப் போல ஜனநாயகம் உலகத்திலை வேறெந்த நாட்டிலை இருக்குது.


வாழ்க மகிந்த ஐயா..! வாழ்க மகிந்த குடும்ப சர்வாதிகாரம்..!


நேரம் போச்சு, டன் ரீவீலை பார்வைகள் தொடங்கப் போகுது. பார்ப்பம், அவங்களும் இதை தான் சொல்லுவாங்க..!!