Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

யாருக்காய் இந்த உயிர்போகிறது

ஈழப்படுகொலைக் கோரம்
காணொளிகளாய்  பரவியபோது
கண்கள் குளமாகி பெருக்கெடுத்தோடியதாம்
கருணாநிதி முதல்வரம்மா
அன்னை சோனியாவுக்கும் தானாம்
எல்லாம்
ஆசிய அணையுடைத்து
மகிந்தகுடும்பத்தை  
வாரியள்ளிப்போகப்போகிறதாம்
பாருங்கள்

பாரதத்தாய் படும் அவலத்தை
யாருக்காய் இந்த உயிர்போகிறது
ஜயோ இந்த அவலம்
இன்னமும் ஏன்
இந்திய தேசத்தை எழுப்பவில்லை
என் குழந்தை
எனும் உணர்வு ஏன்கிளம்பவில்லை
இதுகும் முள்ளிவாய்க்கால்
மனிதத்தை தின்பதில்
மன்மோகன்சிங்கும் மகிந்தவும்
எல்லாத்தேசமும் ஓரணியில்
தெருவிறங்கிப்போராடி
இந்தியதேசம் விடியுமெனின்
அருகிருக்கும்
தேசமக்களிற்கு அதுபோதும் உறவுகளே!

13/04/2012