Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை

இனிச் சருகுகள் காலம்

குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்

படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்

காடையர் இழிசெயல் வெறியொடு

தெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.;….

வாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்

சேற்றினில் உருண்டு நாற்ரமெடுக்க வருக வருக…

 

வறுமையும் வயிறெரியும் நினைவுக்கொதிப்பும்

வெறுமையில் தவிக்கும் விலங்கிடை சிறையும்

பொறுமையை சீண்டும் போலி உறுதிகளும்

சிறுமையில் சிக்கவே தேர்தல் கரும்பென நிமிருது

 

இனவெறித்தீக்கு பலியிடப் புலியில்லை

புகலிடச்சருகுகள் பணமூடைகாவி – அரசொடுகுலாவும்

கழுகுகள் கவ்விய குஞ்சுகள் வாழ்வை

காப்பவர் எவருளர் – எம் தெருவெலாம் வெறிநாய்கள்….

 

 

மல்வத்த பீடமும் அரசியல் சாசனமும்

தேரரின் வலுவே – தேசத்தை சிதைக்கும்

போரினை வளர்க்கப் புத்தரை தொழுதனர் – சீறிடும் ரணிலே

தமிழின வேரினை கிளறிய பெருநரி

ஊளையிடுக – ஒன்றிடாது அழித்தே வாக்கினைபெருக்குக.

 

உழுதுண்டும் பொழுதுபுலர எழுமொலி

விழுந்தெழுந்தோடி உழைப்புக்காய – வெறுவயிறு

காய்ந்து குழறும் – வீட்டினில் குழந்தைபோல்

வாட்டிடும் வறுமைக்குப் புத்தரும் ஜேசுவும்

அல்லாவும் ஆயிரம் இந்துக்கடவுளும் தூசு….