Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புத்தாண்டை புத்துணர்வு பெற அழைத்துச்செல்வோம்!

பெத்தலேகம்

பெற்றெடுத்த மைந்தனே!

இவ்வுலகம் -

தன்வரலாற்றை

உனக்குமுன்

உனக்குப்பின்னென

பதிவு செய்கின்றது

இருந்தும் – உன்

 

சிந்தனையை – தன்மனதில்

பதித்ததில்லை.

பொன்சே பிளேத் – உன்

மாற்றுக்கருத்தால்

வெகுண்டெழுந்தான்

மக்கள் தனக்கெதிராய்

கிளர்வதைக் கணணுற்று – உனை

சிலுவையிலும் அறைந்தான்

மக்களுக்காய் – அவர்தம்

விடிவுக்காய் – வீதிகளில்;

சிலுவையும் சுமந்தாய் ஆனால்

மக்கள் தம்வாழ்வு; விடியவேயில்லை !

ஆளவோர்pன் ஆதிக்கமே

வரலாற்றின்

வரலாறாய் தொடர்கின்றது

இன்றைய உலகமயமாதல்

பூமியின் ஆயுளை

மனிதனின் ஆயுளை

அற்பமாக்குகின்றது.

அரசியலில் – பொருளியலில்

அடிமை விலங்கிடுகினறது

இன – மத – மொழியில்

நாடுகள் – தேசங்களில்

மக்களை மோதவிட்டு – உலகை

பிளவுற வைக்கின்றது.

தன்னனாதிகத்தை

தொடராய் தனதாக்க

எண்ணுகின்றது. ஆனால்

இவ்வவலம் – இவ்வடக்குமுறை

தொடராய் தொடராது.

மானிட விடிவுக்காய் – உன்வழி வந்த

ஆசான்களும் – மாமேதைகளும்

விட்டுச்சென்ற

“உன்போல் உன் அயலானை நேசியெனும்”

சமவுலக சிந்தனைச்செயற்பாடு

புத்துலகை; காணவைக்கும்!

புத்தாண்டே

உலகம் புதிய சிந்தனைமயப்பட

உனையங்கே -

அழைத்துச்செல்கின்றோம்!