Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 8 & 9)


8.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது

தமிழ் மக்களின் மீதான தொடர்ச்சியான இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் போராடிய மக்கள், போராடும் உரிமையை சொந்த வலதுசாரி குறுந் தேசியவாதிகளான பாசிச புலிகளிடம் இழந்த பரிதாபம், போராட்டத்தினையே

 

இதை விட இந்திய, இலங்கை இராணுவத்தினால் சில நூறு பெண்கள் கற்பழிக்கப்பட்ட பின் கொன்றும், சீரழிய வைத்தும் வெறியாட்டம் ஆடப்பட்டுள்ளது. இது போன்று தமிழ் தேசிய இயக்கங்களால் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாகவும் புதைக்கப்பட்டனர். மணியந்தோட்டத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நிகழ்வுக்கு பின்னணியில் புலிகள் இருந்துள்ளனர். இது போன்ற சில புதைகுழிகள் எம்மண்ணில் கண்டுபிடிக்கப்பட்டன. இதை விட இயக்கத்தின் உள்ளும் வெளியிலும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியதுடன், இதை மூடி மறைக்க படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் இலைமறைகாயாக வெளிப்படத்தான் செய்தனஇ செய்கின்றன.

பல பத்தாயிரம் பெண்கள் கணவனை, மகனை, தந்தையை இழந்து இந்த ஆணாதிக்க அமைப்பில், அநாதைகளாகி வயிற்றுப் பிழைப்புக்கே கையேந்தி நிற்கின்றனர், நிற்கவைக்கப்படுகின்றனர். அதேபோல் அன்றாடக் கஞ்சிக்கு இருந்த உழைப்பைக் கூட பறிகொடுத்த பெண்கள், ஊமையாக்கப்பட்டுள்ளனர், ஊமையாக்கப்படுகின்றனர். இலங்கையில் 20 இலட்சம் பேர் (மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர்) ஊனமுற்றவர்களாக உள்ளதுடன், இதில் அண்ணளவாக 16 இலட்சம் பேர் எழுந்து நடமாட முடியாத நிலையில், மூன்று சக்கர வண்டியை நம்பி பிச்சைக்காரராக வாழ்கின்றனர். சில ஆயிரம் குழந்தைகள் தாய் தந்தையை இழந்து அனாதையாகி, இந்தச் சுரண்டல் அமைப்பில் அனைத்து விதமான ஒடுக்குமுறைக்குள்ளாகி பரிதாபத்துக்குரியவராகியுள்ளனர், பரிதாபத்துக்குரியவராகின்றனர். இந்த அநாதைக் குழந்தைகளின் அவலத்தை பராமரித்த புலிகள், தமது குறுந்தேசிய இனவாத பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ, அவர்களை மூளைச்சலவை செய்து நேரடியாக ஆயுதபாணியாக்கினர். சொந்த மண்ணையும் நாட்டையும் விட்டு அகதியாக மேற்கு நாடுகளில் புகலிடம் புகுந்தவர்கள், பொருளாதார ரீதியாக பலமாக இருந்த போதும், அங்கு மூன்றாம் தர அடிமையாக நிறவாதத்தையும், கொடூரமான சுரண்டலையும் சந்திக்கின்றனர். பகட்டுத்தனமான யாழ் பூர்சுவா அடிப்படைவாதத்தை கொண்ட இந்த மேற்கு புலம்பெயர் பிரிவுகள், உலகமயமாதலின் பண்பாட்டு கலாச்சாரத்தை இலங்கையில் வெம்பவைத்து வீங்கி விரிவாக்கும் வகையில், தமது ஊதியத்தை வரைமுறையின்றி பயன்படுத்த துணையாகின்றனர். கொழும்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்கின்ற மேற்கு புலம்பெயர் உறவினர்களும், யாழ் குடாவிலும் புலம்பெயர் பணத்தைக் கொண்டே ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சார சீரழிவுகளை சமூக மயமாக்குகின்றனர். இந்த புலம்பெயர் பணத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு சீரழிவை நம்பி, பெருமளவில் பொறுக்கி வாழும் பல ஆடம்பர வக்கிரமான தொழில்கள் விரிவடைகின்றன. இந்த புலம்பெயர் பணத்தை உழையாது அனுபவிக்கும் சுகவாழ்வு வாழும் பிரிவினரின் அற்ப உடல் சுகத்தை போக்கும் கருவியாகஇ பல ஆயிரம் பெண்கள் இனம் கடந்து பலியிடப்பட்டுள்ளனர். சமூக உறவுகள் பணத்தை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகமாக மாறிவிட்டது. மறு தளத்தில் சொந்த மண்ணை விட்டு நாட்டிலும், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வாழும் அகதிகளின் வாழ்வு என்பது மிகக் கொடூரமானதாகும். வாழ வழியற்றதுடன், உழைப்பை இழந்ததுடன், அனைத்தையும் இழந்துவிட்ட இவர்களின் வாழ்க்கை, பல தலைமுறையை கடந்து துயரம் தொடருமளவுக்கு, உலகமயமாதல் விரிவாக்க உலகில் அவலமாக காட்சியளிக்கின்றது. சொந்த மண் முதல் புலம்பெயர் நாடுகள் வரை மனநோயாளர்கள் எண்ணிக்கை என்பது, வரைமுறையின்றி பெருகிச் சென்றது. இடங்களுக்கும், நிலமைகளுக்கும், சூழலுக்கும் ஏற்ப இது வேறுபட்ட போதும், மனித அவலம் பெருகிச் செல்வதில் எந்த தடையையும் அது சந்திக்கவில்லை.

புலம்பெயர் சமூகம் தலைமுறை தொடர்ச்சியின்றிய, குறித்த வயதுடையோரே புலம் பெயர்ந்தனர். இதனால் இவர்களின் எதிர்காலம், மிக ஆழமாக சீரழிவை சந்திக்கின்றது. மேற்கில் உள்ள தனிமனித சுதந்திர ஜனநாயகத்தில் வெம்பிப் போகும் சமுதாய உறவுகள், இவர்களை சின்னாபின்னப்படுத்துகின்றது. குழந்தைகள் பெற்றோரை தனிமையாக கைவிட்டுச் செல்வது, ஒரு பொதுப் போக்காக மாறி வருகின்றது. இதனால் தனிமை மற்றும் கடின உழைப்பால் சீரழிந்தும், வேலையிழந்தும், இருக்க வீட்டை இழந்தும், அவலமாக வீதிகளில் அநாதையாக மடிவது முதல் மனநோயாளிகள் உருவாகும் போக்கு பொதுப்போக்காகி வருகின்றது. புலம்பெயர் சமூகத் தொடர்பு சார்ந்து எம் மண்ணில் உழைப்பிழந்து வாழும் கூட்டம், படிப்படியாக புலம்பெயர் தொடர்பை இழந்து சீரழிவை மூலதனமாக்குவது அதன் பொதுக் குணாம்சமாக மாறிவருகின்றது. இதற்குள் இதை பிழைப்பாக்கியும், இந்த மக்களின் சொந்த சமூக அவலத்தை திசை திருப்பவும், புலம்பெயர் நாடுகள் முதல் இலங்கை வரை நூற்றுக் கணக்கான மதக்குழுக்கள் புதிது புதிதாக உருவாகி வருவதுடன், பாரியளவில் மதமாற்றத்தை செய்து வருகின்றனர். மக்களின் அவலத்தை பிழைப்புக்காக பயன்படுத்தும் மதங்களும் நபர்களும், மக்கள் சிந்திப்பதை தடுக்கும் வகையில் சிந்தனையை மழுங்கடிக்கின்றனர். உலகமயமாதலை மூடிமறைக்கும் வகையில், இதற்கான நிதி உதவிகள் இந்த மதவாத அமைப்புகளுக்கு தாராளமாக சென்றடைகின்றன. இந்த கூட்டம் இலங்கை முதல் ஐரோப்பா வரை பிரசுரங்களையும், விமானம் ஏறி பிரச்சாரங்களையும் செய்து தம்மை விரிவாக்கி வருகின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களின் அவல வாழ்வை, தமது சொந்த சுகபோகமாக்குகின்றனர்.

 

9.மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும்


புலிகளின் பாசிசமோ ஜனநாயக விரோதமான சமூகத்தை நிலைநாட்டியதால், துரோகம் சார்ந்த ஒரு சமூகப் பிரிவை அது இடைவிடாது உற்பத்தி செய்தது. ஒப்பிட்டு அளவில் அரசுக்கும் புலிக்கும் இடையில், பாசிசத்தை கையாளும் அளவிலும், பண்பிலும், புலிகள் மிகவும் வக்கிரமாக இருந்தனர். இறுதி யுத்தத்தின் போதும், அதன் பின்னும் அரசு புலியை மிஞ்சியது. புலிபாசிசம் ஆட்டம் போட்ட காலத்தில், மக்களிள் பிரதான எதிரி அரசாக தொடர்ந்து நீடித்தது, இங்கு இது ஒரு முரண்நிலையாக இருந்தது. புலிகளின் மேலான அழித்தொழிப்பு அரசியலுக்கு எற்ப, அரசுக்கு பின்னால் ஒரு பெரும் பிரிவு மக்களை புலிப்பாசிசம் அணிதிரட்டி கொடுத்தது. குறிப்பாக புலிப் பாசிசத்தின் நிலையால் ஆயுதம் எந்திய மற்றும் எந்தாத நிறுவனமயப்படுத்தப்பட்ட துரோகக் குழுக்கள் கூட, ஒரு சமூகப் பிரிவாக வளர்ச்சியுற்றது.

போராட்டத்தின் பெயரில் உலகில் மிகப் பெரியளவிலான அழித் தொழிப்பை புலிகள் செய்த போதும், இது எதிர்மறையில் தமக்கு எதிரானவர்களை உற்பத்தி செய்தது. இந்த உண்மையை நாம் இலங்கையில் தெளிவாக கற்றுக் கொள்ளமுடியும். ஜனநாயக மறுப்புடன் கூடிய பாசிசமும், இதற்கான தண்டனை முறையும், எதிரிக்கு பெருமளவில் ஆட்களை சேர்த்துக் கொடுத்தது. ஆரம்பத்தில் இயக்கங்களாக போராடிய குழுக்களை ஈவிரக்கமின்றி அழித்தனர் புலிகள். அதன் உறுப்பினர்களை உயிருடன் வீதிகளில் எரித்தும் அடித்தும் கொன்ற போது, அவர்கள் தவிர்க்க முடியாத புலிகளிடமிருந்து தப்பியோட வேண்டி இருந்தது. புலியின் கையில் சிக்கிய எவரும், தொடர்ந்து உயிர் வாழமுடியாத அவலம் தமிழீழத்தின் பாசிச போரட்ட ஒழுக்கமாகியது. தப்பி ஒடியவர்களை அரசும், இந்தியாவும் அரவணைத்துக் கொண்டது. இப்படி தப்பி ஒடியவர்கள் தமது தற்காப்பைச் சார்ந்து அரசின் தயவில் தப்பிப் பிழைக்க முடிந்த நிகழ்வுஇ போராட்டத்துக்கு பாதகமான ஒரு தொடர்ச்சியான அழிவு அரசியலுக்கு அது இட்டுச் சென்றது. இது படிப்படியாக வளர்ச்சியுற்றது. இது சித்தாந்த ரீதியாகவே ஏகாதிபத்திய சார்பும்இ தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் போக்கவும் வளர்ச்சி உற்றது.

புலிகளை சொந்தக் காலில் நின்று எதிர்க்க வக்கற்ற இந்தக் குழுக்கள், தம் இயலாமையில் மக்களையும் புலிகளையும் ஒன்றாக்கி எதிர்க்க தொடங்கினர். மக்களின் நியாயமான தேச விடுதலைப் போராட்டத்தையும் எதிர்த்து, எதிரியுடன் கூடி களத்தில் நின்றனர். அதை நியாயப்படுத்தும் அரசியல் பலம் பெற்றனர். இந்த நிலைக்கு, புலிகளின் ஜனநாயக விரோத பாசிசமே துணையாக நின்றது. துரோகம், அரசியல் ரீதியாக ஜனநாயகத்தை முன்னிறுத்தி நியாயப்படுத்தப்பட்டது. இதற்கு அரசியல் ரீதியாக கருத்துரைக்கும் அளவுக்கு, புலிகளின் பாசிசம் வழிகாட்டியது. புலிகளின் ஜனநாயக விரோத அரசியல் பாசிசமாக மாறி மலடாகிப் போனதால், அரசியல் ரீதியாக புலிகள் பலவீனமானர்கள். இப்படி புலிகள் துல்லியமாக தாம் தமக்குள் தனிமைப்பட்டதால்இ படுகொலைகள் மூலம் தமது அரசியலை தொடர்ந்து வழிநடத்தினர்.

இதனால் அரசியல் ரீதியாக புலிகளின் பாசிசத்தை மட்டுமல்ல, துரோகக் குழுக்களின் அரசியல் மற்றும் அது முன்வைக்கும் ஜனநாயக சித்தாந்த்ததையும் கூட, நாம் எதிர்த்துப் போராட வேண்டி இருந்தது. உலகளவில் எகாதிபத்தியங்கள் நடத்துகின்ற ஆக்கிரமிப்புகள் அனைத்தும், இந்த ஜனநாயகம் என்ற கண்ணியைத்தான் மக்கள் மேல் புதைக்கின்றனர். இதையே அரசுடன் சேர்ந்து கொண்ட துரோகிகளும்,  தமிழ் மக்களின் தேசவிடுதலைப் போராட்டத்துக்கு எதிராக புதைத்தனர். இதற்கமைய புலிப் பாசிட்டுகள் தாரளமாக துரோகிகளை நாள் தோறும் உற்பத்தி செய்தனர். உலகளாவிய ஆக்கிரமிப்புக்குரிய, தலையிட்டுகுரிய, மக்கள் விரோத அரசியல் தளத்தை, கூட்டாகவே இடைவிடாது உற்பத்தி செய்தனர். ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்க முடியாத வரலாற்றச் சூழலில் நாம் போராட வேண்டியிருந்தது. இந்த நிலையில் இரு தளத்தில் எமது போராட்டம் தெளிவானதும் துல்லியமானதாகவும் மாறியது.

(தொடரும்)

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான் )

பாகம்- 1 

பாகம்- 2 & 3

பாகம்- 4 & 5

பாகம்- 6 & 7