அமெரிக்கா தலைமையிலான இஸ்ரேலிய சியோனிஸ்டுகள்
யூதர்களை அழித்த ஹிட்லரின் நாசிகளின் வழியில், யூத சியோனிஸ்டுகள் பாலஸ்தீனத்தை அழித்து வருகின்றனர். 1948 இல் பாலஸ்தீனம் என்ற நாட்டை கூறுபோட்டு சுடுகாடாக்கத் தொடங்கிய மேற்கு ஏகாதிபத்தியமே, இன்று அடுத்த காலடியை எடுத்து வைத்திருக்கின்றது.
யுத்தமே தீர்வு என்று ஜ.நாவில் வாக்களித்துக் கொண்டு, இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொடுத்து - புதிய ஆக்கிரமிப்பை தொடங்கியுள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு தடை ஏற்படுவதைத் தடுக்க, ஆயுதக் கப்பல்களை சியோனிஸ்டுகளுக்கு ஆதரவாக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது அமெரிக்கா.
சர்வதேச நீதிமன்றமோ கண்ணை மூடிக்கொண்டு மேற்கத்தைய ஏகாதிபத்திய கொள்கைக்கு ஏற்ப, நித்திரை கொள்கின்றது. மேற்கத்தைய ஏகாதிபத்திய நலனுக்கும், அதன் தீரப்புக்கும் ஏற்ப, உலக நாடுகளை அடக்கியாளவே சர்வதேச நீதிமன்றம் எப்போதும் விழித்திருந்ததை வரலாறு மறுபடியும் நிறுவி இருக்கின்றது.