தொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்!
அன்புத் தோழரே, தோழியரே,
சுகாதார நல உதவியாளர், பணிவிடையாளர், சிறு சேவைகள் நிர்வாகி என்ற ரீதியில் எமது சேவைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான எம் அனைவரினதும் வாழ்வு ஒரேவிதமாகத்தான் கழிகின்றது என்பதை புதிதாகக் கூற வேண்டியதில்லை. இனிய கனவுகளுடன் நாம் பணி செய்ய வந்தாலும், கனவுகளுடனேயே முதுமையடைந்து ஓய்வுபெறும் வரை வாழ்வில் நிம்மதியடைந்த ஒருவரை காண முடியாது. எதிர்வரும் வருடங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கும்.
இந்த வாழ்க்கை தானாகவே மாறிவிடுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? காலம் கடத்திக் கொண்டிருந்தால் இந்த நிலையும் இல்லாமலாகி மோசமான நிலை உருவாகிவிடும். அப்படியானால், தற்போதைய வாழ்க்கை நிலையை மாற்றுவதற்காக போராடத்தான் வேண்டும். கடந்த வரலாற்றில் எந்தவொரு வெற்றியையும் போராடித்தான் பெற்றுள்ளோம். ஆட்சியாளர்களின் கருணையால் கோரிக்கைகள் கிடைக்கப் போவதில்லை. அதனை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம். தனித்தனியாகப் போராடுவதற்குப் பதிலாக சேர்ந்து போராடுவோம். அதேபோன்று அந்த வரலாற்றில் நடந்த தவறுகளையும், காட்டிக் கொடுப்புகளையும் நாம் அறிந்திட வேண்டியுள்ளது. அந்த நிலைமையை உணர்ந்து எமது வாழ்வை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளும் நோக்கில் புதிய பயணத்தை தொடங்குவோம்.
அதற்காக நாம் கையாளக்கூடிய பல வழிமுறைகள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு தொழிற் சங்கத்துடனாவது செயற்பட்டு பொது தொழிலாளர் அமைப்பொன்றில் நாம் செயற்பட வேண்டும். அது மட்டுமல்ல, தனித் தனியாக போராடுவதனால் நாம் பிளவுபடுவோமேயன்றி வெற்றி பெற முடியாதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சகல தொழிற் சங்கங்களும், சகல அலுவலர்களும் ஒன்றிணைந்து போராடுமாறு நாம் வேண்டுகின்றோம். அதற்காக எமது தொழிற்சங்கத்தின் தனிப்பட்ட தேவைகளை ஒருபுறம் வைத்துவிட்டு ஒன்றிணைந்த போராட்டத்திற்கு நாம் தயாராக இருப்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம்.
ஆகவே, அதற்காக எமது புதிய அமைப்போடு இணையுமாறு வேண்டுகின்றோம். அதனூடாக எடுக்கப்படும் பொது நடவடிக்கைகளுடன் இணையுமாறு வேண்டுகின்றோம். அதற்காக உங்களை அழைக்கின்றோம்.
அமைப்பாக ஒன்றுபடுவோம்! எழுந்து நிற்போம்! வெற்றி பெறுவோம்!
தோழமையுடன்,
அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம் - தொடர்பாளர்- டொக்டர் ஆர்.எம்.டப்.ரணசிங்க- 0718046175
உயரும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவின்படி ஊழியர் சம்பளத்தை உடனே உயர்த்து!
மேலதிக வேலையை ரேட் முறையில் வழங்கு!
சகல பதிலீடான மற்றும் சமயாசமய சுகாதார ஊழியர்களையும் ஓய்வூதியத்தடன் உடனே நிரந்தரமாக்கு!
ஓய்வூதியத்தில் கை வைக்காதே – பங்களிப்பு ஓய்வூதிய ஏமாற்று வேண்டாம்!
சகல சுகாதார ஊழியர்களினதும் வேலை நாளை 6 மணித்தியாலங்களாக்கு!
சகல சுகாதார ஊழியர்களுக்கும் 5 நாள் வாரத்தை பெற்றுக்கொடு!
வைத்தியசாலை சேவைகள் விற்பனையை நிறுத்து!
----- அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம்
தொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode