உடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்
உடையை உற்பத்தி செய்வது இலாபநோக்குக் கொண்ட சந்தையே. இந்தச் சந்தையானது ஆணாதிக்க நுகர்வுச் சிந்தனையால் வடிவமைக்கப்பட்டது. இந்தச் சந்தையில் இருந்து எதை பெண் அணியவேண்டும் என்ற ஆணாதிக்க கட்டளைக்கு எதிரான, பெண்ணின் சுதந்திரமான உடைத் தெரிவு ஆணாதிக்கச் சந்தையைக் கடந்ததல்ல.
இந்த ஆணாதிக்க சந்தைச் சமூக அமைப்பில் உடை குறித்து சட்டங்கள், மத - இன - சாதி சார்பற்றதாக இருக்க வேண்டும். இதற்கு முதலில் அரசு இனம், மதம், சாதி கடந்த முரணற்ற ஜனநாயக அரசாக இருக்க வேண்டும். இதற்கு மாறாக அரசு மதம் சார்பானதாக இருக்கும் போது, சட்டங்கள் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும். இது ஒரு மதத்துக்கு எதிரான இன்னொரு மதத்தின் ஒடுக்குமுறையாக மாறுகின்றது. மறுபக்கத்தில் எல்லா மத தனி அடையாளத்தையும் பொது இடங்களில் அனுமதித்து, சமூகத்தைப் பிரித்து கூறுபோடுவதை செய்கின்றது. இதன் மூலம் பரஸ்பரம் ஒடுக்குமுறையை கொண்ட சமூகமாக, சமூகத்தை குறுக்கிவிடுவதே இலங்கையில் நடந்தேறுகின்றது.