மனித அறிவு என்பது அறியாமையில் இருந்து அறிவை நோக்கிய வளர்ச்சியாகும். அதாவது வரலாற்று பூர்வமாகவே உழைப்பு பற்றிய அறியாமையில் இருந்து, உழைப்பின் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவு வளர்ந்து வருகின்றது. இதுதான் மனித அறிவின் எதார்த்தம். மனித உழைப்பு என்ற ஒரு நடைமுறைக்கு வெளியில், அறிவு சுயாதீனமாக இருக்கவும் முடியாது, தோன்றவும் முடியாது.உழைப்புதான் மனிதஅறிவின் அடிப்படையும் ஆதாரமுமாகும்.
வெள்ளை யானை திட்டங்கள்: இது யாருக்கு லாபம்
மாகம்புர துறைமுகம்:
மாகம்புர கப்பல் தரிப்பிட துறைமுகத்தில் எத்தனை கப்பல்கள் இதுவரை நங்கூரமிட்டுத் தரித்திருக்கின்றன? மாத்தளையில் எத்தனை விமானங்கள் தரையிறங்கியிருக்கின்றன என்ற கேள்விகள் திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகளினால் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கொலையாளிகளின், கொள்ளையர்களின் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம்
எண்பத்துமூன்று ஆடி இனக்கலவரம். இனவெறி அரசின் காடைத்தனம் கண்டு பொங்கி எழுகிறார்கள். இனி இது பொறுப்பதில்லை என்று வீடுகளை விட்டு வீதிக்கு வருகிறார்கள். மக்களிற்காக,மண்ணிற்காக மரணத்தையும் எதிர்கொள்வோம் என்று அலை அலையாக எழுந்தார்கள்.
ஒடுங்கியும் ஒடுக்கியும் வாழ்வதா மனித இயல்பு?
மனிதர்கள் அடக்கியும் ஒடுங்கியும் இருத்தலையே ஒடுக்குமுறையாளன் விரும்புகின்றான். இதை எதிர்த்துப் போராடுவதே, ஒடுக்கப்பட்டவர்களின் இயல்பாக இருக்கின்றது. இதுவே என்றென்றும் மனித இயல்பாகவும், வாழ்வாகவும் இருக்கும் என்று கருதுகின்றோமா!?
....ஏனென்றால் புரட்சி என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல- அது நடைமுறை வேலையாகும்!
நோர்வே மார்க்சிய தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரும், அதன் அரசியல் செயற்பாட்டாளரும், ஐரோப்பா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" எனும் அமைப்பில் இயங்கி வரும் இடதுசாரி கொள்கையுடையவருமான தோழர் நியுட்டன் அண்மையில் இலங்கை வந்திருந்த போது, சகோதர மொழியில் வெளிவரும் இடதுசாரி வெகுசன வராந்த பத்திரிக்கை "ஜனரல" (மக்கள் அலை) விற்கு விரிவான நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார். அதன் மொழிபெயர்ப்பு .
அரசியல் தொடர்பாக கதைக்கும் முன் தங்கள் இளமைக்காலம், கல்வி நடவடிக்கை குறித்து சற்று கூறுங்கள்?
இன்றைய தேவை மீண்டும் ஒரு அழிவா அல்லது எமக்கு அறிவா..!
இலங்கையில் தமிழ்மக்களின் வாழ்க்கையினை போருக்கு முன் போருக்குப் பின் என்ற நிலை கொண்டு பார்க்க வேண்டியது இன்று அவசியமாகின்றது. இந்த போர் பல ஆயிரக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையினை பல இன்னல்களையும், இழப்புக்களையும், விரக்திகளையும் கொண்டதாக மாற்றியுள்ளது. மக்களால் தொலைக்கப்பட்டவை ஏராளம், அவற்றினை எதனைக் கொண்டும் ஈடுசெய்ய முடியாது.
அமெரிக்கா கொன்றொழித்த ஜந்து லட்சம் முஸ்லீம்கள்
பத்தாண்டுகளுக்கு முன்னால் 2003 மார்ச் 19ந்தேதி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினர் ஐ.நா. ஒப்புதல் இன்றி இராக் மீது அநியாயமாகவும், அக்கிரமாகவும் படை எடுத்ததனர். இதற்காக ஒரு பொய்யான, போலியான குற்றச்சாட்டை அவர்கள் கூறினர். பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருக்கின்றது என்பது தான் அந்தக் குற்றச்சாட்டாகும்.