ஆசியப் பிராந்தியத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட (1931ல்) முதலாவது நாடு இலங்கையாகும். 1960ல் உலகத்தின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையுடன் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டு 5 ஆண்டுகள் பதவியில் இருந்தார். பின்னர் 1970ல் தெரிவு செய்யப்பட்டு 7 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அவரது மகள் திருமதி சந்திரிகா விஜயகுமாரணதுங்கா 1994ல் பிரதமராகவும் பின்பு இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்புடன் (1994 - 2005) ஆட்சிக்கு வந்த போது சிறிமா அவர்கள் பிரதமராக 14 நவம்பர் 1994 முதல் 9 ஆகஸ்ட் 2000 வரை செயலாற்றினார். இவர்களது ஆட்சியின் கீழ் பெண்களுக்கு எதிராக எத்தனையோ கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தும்; இலங்கையில் பெண்களுடைய உரிமைகளுக்காக இவர்களால் எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
சாதி மேலாதிக்கவாதத்தின் உற்பத்திப் பொருளே இனவாதம்...
1930ல் பாடசாலைகளில் மாணவர்களுக்கு சரியாசனமுறை அமுல்படுத்தப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் அதனை அமுல்படுத்திய பாடசாலைகளை உயர்சாதியினரும், அதனை அமுல்படுத்தாத பாடசாலைகளை பாதிக்கப்பட்ட சாதியினரும் தீ வைத்துக் கொழுத்தினர்.
இனவாத அரசியலின் பணயக்கைதிகள்
ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள் தமிழ் ஆளும் அதிகார மேலாதிக்கவாத சக்திகளை வைத்தே இலங்கையை-இலங்கைக் குடிமக்களை-இலங்கையரைக் கட்டி ஆண்டுவந்தனர். 1920 முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்--மகாத்மா காந்தியின் கருத்துக்கள் ஆகியவற்றின் தாக்கம் இலங்கையின் வடபகுதியில் உள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் முற்போக்கான சிந்தனை வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனுடைய விளைவாக பின்னாட்களில் "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" தோற்றம் பெற்றது.
முகமாற்றம் போதும், அமைப்பு மாற்றத்திற்காக முன்னிலை சோசலிச கட்சிக்கு வாக்களிப்போம்!
இலங்கையில் இருக்கின்ற அனைத்து பாராளுமன்ற கட்சிகளிடமும் இருக்கின்ற அரசியல் ஒன்று தான். தமது பிழைப்பிற்க்காக தேவைப்படுகின்ற போதெல்லாம் கையில் எடுப்பது இனவாதம், மதவாதம். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மக்களை இன-மத ரீதியில் பிளவுபடுத்தியும், பொய் வாக்குறுதிகளை கூறியும், லஞ்சமாக பல பொருட்களை வழங்கியும் பாராளுமன்ற அரியணையினை கைப்பற்றுவதற்காக பகிரங்க பிராயத்தனங்கள் நடைபெறுவதனை காண்கின்றோம். இவர்கள் யாரிடமும் மக்களின் பொருளாதார பிரச்சினை முதல் தேசிய இனப்பிரச்சினை வரை தீர்வுகள் கிடையாது.
நிலத்தைப் பொறுத்ததே விளைச்சல்...
இலங்கையில் வாழும் குடிமக்களில் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு உள்ளது போல் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கும் சம உரிமை பெற்றுத் தருவோம் எனக் கூறி எமது தமிழ்த் தலைமைகள் அரசியல் கட்சிகள் அமைத்து ஜனநாயகப் பாதையில் அகிம்சை முறையிலும், வன்முறைப் பாதையில் ஆயுதப் போராட்ட நடவடிக்கையிலும் ஈடுபட்டு இறுதியில் தமிழ்ப் பேசும் மக்களைக் கட்டிய கோவணமும் இன்றி நிர்வாணமாக்கி அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணிலேயே அனாதைகளாக, அகதிகளாக, சிறைக்கைதிகளாக ஆக்கிய வரலாறே இலங்கைத் தமிழர்களின் கடந்த 67 ஆண்டு காலச் சரித்திரமாகும்.
வாக்களிக்கின்றோமா! எதற்காக?
எங்கடை பிரச்சனைகளைத் தீர்க்க, எங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றோம் என்பது உண்மையா? எங்கள் வாக்குகள் மூலம் தெரிவான பிரதிநிதிகள், பிரச்சனைகளைத் தீர்த்து இருக்கின்றனரா? எமது சுயமான தெரிவுகளுடன் தான் நாங்கள் வாக்கு போடுகின்றோம் என்றால், நாங்கள் பகுத்தறிவுபூர்வமாக இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
தேர்தல் சாதிக்கப்போவது என்ன?
தேர்தல் முறையானது மக்களை அடக்கியாளும் ஆளும் வர்க்கத்தை தெரிவு செய்கின்றது. இலங்கையில் மக்களை இன-மத-சாதி ரீதியாக பிரிக்கின்றது. மக்கள் விரோதமே தேர்தல் முறையாகவும், ஜனநாயகமாகவும் இருக்கின்றது. இதற்கு மாறாக மக்கள் திரள் போராட்டம் மூலம் அரசை தூக்கியெறியும் அரசியல் நடைமுறை மூலமே, உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
எங்கள் பிரச்சினைகளைத் தேர்தல் பேசுகின்றதா?
தேர்தலையே அரசியலாகக் கொண்ட அரசியல் கட்சிகள், மற்றைய இன மக்களையே எமது பிரச்சனையாகக் காட்டுகின்றன. அதாவது எமது எதிரியாக காட்டுகின்றனர். இதன் மூலம் தமது இன - மத - சாதிய பிரதிநித்துவமான அரசியலை முன்வைக்கின்றனர். ஆனால் மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில், பிற இன மக்கள் எதிராக, எதிரியாகவோ இருப்பதில்லை.
தேசிய இனப் பிரச்சினை பற்றிய எமது கொள்கை நிலைப்பாடு
தேசிய இனப் பிரச்சினை சார்ந்த எமது கொள்கை நிலைப்பாடானது, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்கி, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார அபிவிருத்தியினை பெற்றுக் கொள்வதற்கான, மிகவும் விஞ்ஞானபூர்வமான வழிகளை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான ஒன்றையே கொண்டு இருப்பதுடன்
முகத்துக்கு வாக்களிப்பதா! கொள்கைக்கு வாக்களிப்பதா!!
மக்களின் அவலம் நிறைந்த வாழ்வுக்கான தீர்வுகளை கொள்கையாகக் கொண்டிராத கட்சிகள், கொள்கையற்ற கட்சிகளாக இருப்பதுடன், முகத்தை முன்னிறுத்தி வாக்கைக் கோருகின்றனர்.
போராட்டம் பத்திரிகை (யூலை-ஆகஸ்ட்: 2015) வெளிவந்து விட்டது!
இந்த பத்திரிகையின் உள்ளே…
1. முகமாற்றம் போதும், அமைப்பு மாற்றத்திற்காக முன்னிலை சோசலிச கட்சிக்கு வாக்களிப்போம்!
2. தேர்தல் சாதிக்கப் போவது என்ன?
3. முகத்துக்கு வாக்களிப்பதா! கொள்கைக்கு வாக்களிப்பதா!!
4. வாக்களிக்கின்றோமா! எதற்காக?
5. மக்களின் உரிமையும், கடமையும், அரசியல் பலமும்
6. தேசிய இனப் பிரச்சினை பற்றிய எமது கொள்கை நிலைப்பாடு
மக்களின் உரிமையும், கடமையும், அரசியல் பலமும்.
இலங்கையின் அடுத்த பொதுத் தேர்தலையொட்டி ஆய்வாளர்கள்-அறிஞர்கள்-வல்லுனர்கள்-விமர்சகர்கள்-சமூக அக்கறையாளர்கள்-மக்கள் நலன் விரும்பிகள் என பலதரப்பட்ட செயற்பாட்டாளர்களிடமிருந்து ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதேவேளை பாரம்பரிய-பரம்பரை-புதிய கட்சிகள் பமைய-புதிய கூட்டமைப்புக்கள் யாவும் தங்கள் வழமையான ஆட்பலம்-அணிவகுப்பு-ஆரவாரங்கள் அடங்கிய விழாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளன. இதேவேளை இவர்கள் யாவரும் எதனைக் காட்டி தங்கள் பொறிக்குள் மக்களை மாட்டி வைக்கலாம் என்கிற ஒரே நோக்கத்துடன் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கியும் விட்டுள்ளனர்.
இந்திய அரசே! டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சாய்பாபாவை உடன் விடுதலை செய்
டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் G.N.சாய்பாபா கடந்த ஆண்டு மகராஸ்டிரா காவல்துறையின் உளவுப்பிரிவினரால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு பின் பயங்கரவாத கருப்பு சட்டமான ருயுPயு UAPA (Unlawful Activities Prevention Act) கீழ் கைது செய்யப்பட்டதாக கூறி சிறையில் அடைத்தது. 90 சதவிகிதம் உடல் இயங்க மறுக்கும் மாற்றுதிரனாளியாகிய இவர் சக்கர நாற்காலியின் உதவியால் மட்டுமே இயங்கக் கூடிய நிலையில் உள்ளவர். கடந்த ஓராண்டுகளுக்கு மேல் நாக்பூர் மத்திய சிறையில் எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத மின்சாரம் மறறும் யன்னல் வசதி அற்ற இருண்ட அதிக வெப்பமுள்ள "அண்டா செல்" (Anda Cell)) எனும் இடத்தில் "பாதுகாப்பு" கருதி அடைக்கப்பட்டுள்ளார்.
துரோகம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாறாத கொள்கை!!!
தமிழ்நிலம் எங்கும் இலங்கை அரசுகளால் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. குளங்களில், ஏரிகளில் எமது மக்களின் குருதி உறைந்து போயிருக்கிறது. கூதல் காற்றில் இலைகள் உதிர்ந்து விழுவது போல எமது வாழ்வு வீழ்ந்து கிடக்கிறது. இத்தனைக்கும் காரணமான இலங்கையின் இனவெறி அரசுகளுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூடிக் குலாவும்.