16
Sun, Jun

நவதாராளமய உபாயங்களுக்கேற்ப பொருளாதாரத்தை சீர்படுத்த அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளின் போதும் மக்கள் எதிர்ப்பு அதிகரிப்பதினால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இன்றைய கூட்டரசாங்கம் அவற்றை அடக்குவதாக அச்சுறுத்தல் விடுக்கின்றது.

ஜனநாயகம் குறித்து இதுவரை போர்த்திக் கொண்டிருந்த பசுத்தோலை நீக்கிவிட்டு போராடும் சக்திகள் மீது அடக்குமுறையையும், அச்சுறுத்தலையும் விடுத்துக் கொண்டிருக்கின்றது.

Read more: %s

தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் எச்சரிக்கை!!

கடந்த வரவு செலவு திட்டத்தின் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவர தயாராகும் நவதாராளமய மறுசீரமைப்புகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து கிளம்பும் போராட்டத்தை காட்டிக் கொடுக்க தயாராவதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட அரச ஊழியர்களினது ஓய்வூதியம் வெட்டப்படுதல், தனியார் துறை ஊழியர்களின் 8 மணி நேர வேலை நாளை இரத்துச் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிரானதும், பொதுவாக அரசாங்கம் ஆலோசித்துள்ள தொழிலாளர் உரிமைகளை இரத்துச் செய்யும் சட்டத் திருத்தங்களுக்கு எதிரானதுமான போராட்டத்தை தவறாக வழிநடத்தி, காட்டிக் கொடுக்க அரசாங்க சார்பு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்தன.

Read more: %s

முதலாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் சங்கம் என்ற அமைப்பை இனி ஒரு போதும் போர் நடக்கக்கூடாது, உலகில் சமாதானம் நிலவவேண்டும் என்று அந்த நாளைய பெருந்தலைகளான பிரித்தானியாவும், பிரான்சும் முன்னுக்கு நின்று 10.01.1920 அன்று தொடங்கினார்கள். (League of Nations, Wikipedia). "ரம்பையின் காதல்" படத்தில் "சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே" என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் சுடுகாட்டில் ஒலிப்பது போல தங்களால் கொல்லப்பட்டவர்களின் மேல் ஏறி மிதித்துக் கொண்டு இந்த கொலனித்துவ கொலைகாரர்கள் "சமாதானம் உலவும் இடமே" என்று உலக நாடுகள் சங்கத்தில் நின்று பாடினார்கள்.

Read more: %s

ஓளடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் லால் ஜயகொடி மற்றும் பிரதித் தலைவர் கிரிசாந்த வீரசூரிய ஆகியோர் அரசியல் வற்புறுத்தல் காரணமாக பதவி விலகியதை ‘ஜனரல’ என்ற சிங்களப் பத்திரிகை இரு வாரங்களுக்கு முன்னர் பிரதான தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. சில மருந்துகளுக்கு அங்கீகாரம் வழங்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரசபைக்கு உத்தரவிட்டதாகவும், அதனை மறுத்த அதிகாரசபை முக்கியஸ்தர்களை பதவி விலகுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வற்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனரல பத்திரிகையின் கடந்தவார ஆசிரியர் தலையங்கமும் இந்த விடயத்திற்கு முக்கியத்துவமளித்திருந்தது. சுகாதார அமைச்சருக்கு அப்படி கோபம் பொத்துக் கொண்டு வந்தது ஏன் என்பது குறித்தே நாங்கள் அலசிப் பார்க்கின்றோம். இது விடயத்தில் அதிகாரசபை நிபுணர்கள் நடவடிக்கை எடுத்ததற்கான காரணத்தை ஆராய்ந்தால் இதனை அறிந்துகொள்ள முடியும்.

Read more: %s

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்கள் மற்றும் வேறு இயக்கங்களில் இருந்த பிரமுகர்களை ஒன்றிணைத்து, புலிகள் உருவாக்கிய தமிழத் தேசிய கூட்டமைப்பானது புலிகளின் அரசியல் தேவைக்கு ஏற்ப இயங்கியது. புலிகள் அழிக்கப்பட்டதும், இந்திய ஆட்சியாளர்களின் கைம்பொம்மையாக மாறி இந்திய அரசின் பொருளாதார அரசியல் தேவைக்கேற்றவாறு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

Read more: %s

More Articles …

Page 1 of 2