காணாமற் போன மக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கென பிரதம அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட "காணாமல் போனோர் காரியாலயச் சட்டம"’ கூட்டு எதிர்க் கட்சியினரின் ஆட்சேபனைகளையும் (இனவாத ரீதியான) - ஒரு சில அமைச்சர்களின் ஆலோசனைகளையும் (விவாதம் நடாத்த வேண்டும் என்ற) பொருட்படுத்தாமல் ஐ.தே. கட்சி, சி.ல.சு.கட்சி, த.தே.கூட்டணி, ம.வி.முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் கடந்த ஆவணி 23ம் திகதி (23/08/2016) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட இந்தச் சட்ட மூலம் இலங்கைக் குடிமக்கள் மத்தியில் பரவலான நாடு தழுவிய கலந்துரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போதல் இலங்கையின் ஒட்டு மொத்த சமூகத்தின் முக்கிய பிரச்சனை மட்டுமல்ல அது இலங்கைக் குடிமக்களின் சனநாயக உரிமைகள் சம்பந்தப்பட்டதும் ஆகும். ஆனால் நாட்டில் இடம் பெறுகின்ற கலந்துரையாடல்களில் இவைகள் குறித்துப் பேசுவது மிகவும் அரிதாகவே உள்ளது.