16
Sun, Jun

காணாமற் போன மக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கென பிரதம அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட "காணாமல் போனோர் காரியாலயச் சட்டம"’ கூட்டு எதிர்க் கட்சியினரின் ஆட்சேபனைகளையும் (இனவாத ரீதியான) - ஒரு சில அமைச்சர்களின் ஆலோசனைகளையும் (விவாதம் நடாத்த வேண்டும் என்ற) பொருட்படுத்தாமல் ஐ.தே. கட்சி,  சி.ல.சு.கட்சி, த.தே.கூட்டணி, ம.வி.முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் கடந்த ஆவணி 23ம் திகதி (23/08/2016) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட இந்தச் சட்ட மூலம் இலங்கைக் குடிமக்கள் மத்தியில் பரவலான நாடு தழுவிய கலந்துரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போதல் இலங்கையின் ஒட்டு மொத்த சமூகத்தின் முக்கிய பிரச்சனை மட்டுமல்ல அது இலங்கைக் குடிமக்களின் சனநாயக உரிமைகள் சம்பந்தப்பட்டதும் ஆகும். ஆனால் நாட்டில் இடம் பெறுகின்ற கலந்துரையாடல்களில் இவைகள் குறித்துப் பேசுவது மிகவும் அரிதாகவே உள்ளது.

Read more: %s

"மீண்டும் செங்கொடியை உயர வைப்போம் !" என்ற இங்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு, சகோதரர் குமார் குணரத்தினத்தின், கேகாலை நீதிமன்ற உரைக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட தலைப்பாகும். குடிவரவுச்சட்டத்தை மீறிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவரது பிறப்பிடமான கேகாலை நீதிமன்றத்தில், பங்குனி 25.2016 அன்று நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போதே தோழர். குமார் அவ்வுரையை ஆற்றினார். அதில்

"நான் முன்பு கூறியது போல் எனது சொந்தங்கள், எனது தந்தை, எனது சகோதரர்கள் இந்த பூமியில் எங்கோ புதையுண்டு இருப்பது போல் எனது தோழர்கள், எனது அன்புக்குரிய மூத்த சகோதரர் ரஞ்சிதம் உள்ளடங்கலாக அவர்களின் எச்சங்கள் இந்த நாடு பூராவும் சிதறப்பட்டிருக்கின்றது. இந்த ஜனநாயக விரோத அரசானது எனது சொந்த சகோதரனை என்னிடமிருந்து பறித்துக்கொண்டது. எனது குடும்பத்தையும், எனது அரசியலுக்குரிய எனது நாட்டினையும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டது." எனத் தன் சிந்தனையைப் பதிவு செய்தார்.

Read more: %s