16
Sun, Jun

இந்தியாவில் மாட்டு இறைச்சிக்கு கொண்டு வந்திருக்கும் சட்டரீதியான தடையைப் போன்று, அண்மைக் காலமாக இலங்கையில் முன்மொழியப்பட்டு வருகின்றது. முகமாற்ற நல்லாட்சியின் ஜனாதிபதியாக மைத்திரி தெரிவான காலத்தில், மாட்டு இறைச்சியை தடை செய்வது பற்றிய கருத்துக்களை முன்வைத்திருந்தார். 

தொடர்ந்து பலராலும் மாட்டு இறைச்சி தடை கோரப்படுவது தொடருகின்றது. அண்மையில் இலங்கையில் உருவான சிவசேனா தொடங்கி வடமாகாண முதல் அமைச்சர் விக்கினேஸ்வரன் வரை, மாட்டு இறைச்சிக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தில் மாட்டு இறைச்சி உண்பது தீட்டாகவும், தீண்டாமையாகவும் கருதுமளவுக்கு, யாழ் இந்து வெள்ளாளிய சாதியம் மேலோங்கி இருக்கின்றது. இதே போன்று பௌத்த அடிப்படைவாதிகளும், மாட்டு இறைச்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

மதரீதியான புனிதம் - சாதியத் தீண்டாமையும் தீட்டும் - மிருகவதை என்று பல்வேறு முகமூடியை போட்டுக் கொண்ட போதும், மாட்டு இறைச்சி உண்ணத் தடைக்கான உண்மையான காரணம், நவதாராளவாத பொருளாதாரத் திட்டமாகும். 

Read more: %s

சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார ஒத்துழைப்பின் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வழிவகைகளை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.

உலகின் சுறுசுறுப்பாக இயங்கி வரும் கப்பல் வழிகளில் ஒன்றான சிறிலங்காவின் இந்திய மாக்கடல் கேந்திர முக்கியத்துவம் கொண்டுள்ளதாக அமைந்துள்ள நிலையில் இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read more: %s

நாட்டின் அரசியல் கருத்தாடலானது பெரும்பாலும் இரு முக்கிய போராட்டங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கின்றது. ஒன்று, டெலிகொம் நிறுவனத்தில் மனிதவலு (Man Power) ஊழியர்களின் பணி உரிமைகளுக்காக நடக்கும் தொழிலாளர் போராட்டம். இரண்டாவது, கல்வியை வியாபாரப் பண்டமாக ஆக்குவதற்கு எதிராகவும், சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவும் நடக்கும் மாணவர் போராட்டம். கட்சி என்ற வகையில் நாம் அவ்விரண்டு போராட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதோடு அது விடயத்தில் செயல்ரீதியில் தலையீடு செய்கின்றோம்.

 

Read more: %s