Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

மண்சரிவால் பாதிக்கபட்ட மலையக மக்களுக்கு வீடுகள் வழங்கக்கோரி போராட்டம்...

இலங்கையில் எந்த அரசுகள் அதிகாரத்துக்கு வந்தாலும் உழைக்கும் மலையக மக்கள் துயர் தீர்ந்த பாடில்லை. கடந்த வருடம் 29 ஐப்பசி மாதம் 2014 அன்று காலை 7:30 மணியளவில் பாரிய மண்சரிவு பதுளை பிரதேசத்தில் உள்ள கொஸ்லந்த கிராமத்தை தாக்கியது. மீரியாபெத்த மண்சரிவு அவலம் எனவும் அழைக்கப்படும் இம் மண் சரிவு 200 பேருக்கு மேற்பட்டவர்களை பலி வாங்கியது. 150 வீடுகளை துவசம் செய்தது.

இவ் இயற்க்கை அனர்த்தத்தின் பின்னர் அரசாலும், பல சமூக நிறுவனங்களாலும் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பாலும் தேனும் ஓட்டச் செய்வதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித உதவிகளும் இதுவரை வழங்கப்படவில்லை. பல குடும்பங்களை இன்றும் வறுமையில் வாடி வருகின்றனர். தனி மனிதர்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்களும், சில இடதுசாரிக் கட்சிகளின் முன்னணிகளுமே இன்றுவரை அவர்களுக்கு தேவையான் சிறு உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், இவ் அவலத்தின் ஒருவருட நாளில் இம்மக்களின் உரிமைகோரி -அவர்களுக்கான வாழ்வாதாரம் கோரி - வீடுகள் கோரி இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இடம் : பதுளை நகர்

காலம்: 29 ஒக்டோபர் 2015

நேரம் : பகல் 11.00