ஏமாற்றும் தேர்தல் முடிந்து விட்டது மக்கள் பிரச்சனைகள் அப்படியே?
- Details
- Category: இதழ் 23
-
18 Mar 2016
- Hits: 806
ஜனநாயகத்தின் பெயரில் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் நடக்கின்ற தேர்தலாகவும், அதற்கு பழக்கப்பட்டு வாக்களிக்கும் மக்களுமாக இருப்பது என்பது தேர்தல் முறையாகிவிட்டது. தேர்தல்முறை மூலமும், வாக்களிப்பதன் ஊடாகவும் தெரிவுசெய்யப்படும் 'மக்கள் பிரதிநிதிகள்" சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாக்களிக்கின்றனர். ஆனால் தேர்தலில் வென்றவர்கள் தனிப்பட்ட செல்வத்தை குவிப்பதற்கும், அதற்காக பதவிகளையும் அதிகாரங்களையும் பெறுவதும் இதன் மூலம் நாட்டையும் மக்களையும் விற்பதுமாக பாராளுமன்றம் இன்று இயங்குகின்றது. தேர்தல் முடிந்தவுடன் தங்கள் பிரச்சனைகளை பாராளுமன்றமும், தாங்கள் தெரிவு செய்த "மக்கள் பிரதிநிதிகளும்" தீர்க்க மாட்டார்கள் என்ற பகுத்தறிவும், அனுபவமும் கிடைக்கின்றது. தேர்தல்முறை மூலம் மாறி வரும் ஆட்சிமாற்றங்கள், இதைத்தான் பறைசாற்றுகின்றது.
உரிமைக் கோரிக்கைக்குள் ஒடுக்கப்படும் பெண்கள்
- Details
- Category: இதழ் 23
-
05 Mar 2016
- Hits: 945
இலங்கையில் கடந்த 68 வருடங்களாக சிறுபான்மை இனத்தவராகிய தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களால் அடக்கியொடுக்கப்பட்டு அடிமைகளாக நடாத்தப்பட்டு வருவதாக கதையாடல் செய்யப்பட்டு நம்ப வைக்கப்பட்டு அதனடிப்படையில் தமிழர்களுக்கான உரிமைகளுக்காக ஓர் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அது முடித்து வைக்கப்பட்டு மறுபடி மீண்டும் இன்று அதே கதையாடல் தொடங்கியுள்ளது.
இந்தக் கதையாடலில் யார் எவருடைய உரிமைகளை மறுக்கிறார்கள், யார் எவருடைய உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள், கோஷமிடப்படும் இந்த "உரிமைகள்" பற்றிய வரைவிலக்கணம் என்ன என்பவை தொடர்பாக ஆராயவேண்டிய அவசியம் பெண்களாகிய எமக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலையும், கூட்டமைப்பு - மைத்ரி-ரணில் அரசின் வஞ்சகமும்
- Details
- Category: இதழ் 23
-
02 Mar 2016
- Hits: 1242
சமவுரிமை இயக்கம் புரட்டாதி 14 அன்று, அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும் - பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தையும் - அதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றைச் சமர்ப்பிக்கும் வண்ணம் ஊர்வலத்தையும் கொழும்பில் நடத்தியது. இடதுசாரிக் கட்சிகள் உட்பட பல கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும், சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் முதல் கைதிகளின் உறவினர்கள் வரை, பலதரப்பினர் இந்தப் போராட்டத்தில் பங்குகொண்டனர்.
அதேநேரம் நாடுதழுவிய அளவில், அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும் - பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், சுவரொட்டிகள் சமவுரிமை இயக்கத்தால் ஒட்டப்பட்டது.
கைதிகளை விடுதலை செய்யக்கோரிய ஆர்ப்பாட்டமானது இவ்வருடத்தில் (2015) இது இரண்டாவது தடவையாகும்.
பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிக்க எதிர்க்கட்சித் தலைவர் பதவி
- Details
- Category: இதழ் 23
-
03 Mar 2016
- Hits: 872
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதோ, எந்த இனத்தவர் என்பதோ, எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதோ, எது பெரும்பான்மை சிறுபான்மை என்பதோ, ஜனநாயகத்தின் அடிப்படை பிரச்சனையல்ல. மாறாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைமை என்பது, பாராளுமன்ற ஜனநாயகம் குறித்து என்னவிதமான முடிவையும், நடைமுறையையும் கொண்டிருக்கின்றது என்பதே, ஜனநாயகம் குறித்தான அடிப்படைக் கேள்வியாகும். எதிர்க்கட்சி தலைமை என்பது முழு இலங்கை மக்களின் குரலாக இருக்கவேண்டும் என்பது குறித்து, அக்கறைப்பட வேண்டும்.