Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

பாரிஸில் இலங்கை தூதராலயம் முன்னால் ஆர்ப்பாட்டம்: (படங்கள்)

இன்று 22/4/2016 வெள்ளி மாலை பாரிஸில் உள்ள இலங்கை தூதராலயத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தினை ஜனநாயகத்திற்கான இலங்கையர் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். குமார் குணரத்தினத்தினத்தை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அவரை நாடு கடத்த வேண்டாம் என கோரியும் மேலும் அரசியல் காரணங்களிற்காக புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளை பறிக்க வேண்டாம் எனக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.