தேர்தல் திருவிழா உபயகாரர்களின் போட்டித் திருவிழாக்கள்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3486
செய்திக்கண்ணோட்டமும்! 20.03.2010
எமது நாட்டின் “சரித்திர முக்கியத்துவம”; வாய்ந்த தேர்தல் திருவிழாவை, அதன் சகல உபயகாரர்களும் போட்டி போட்டு, (மேளதாளம் -வாணவேடிக்கைகளுடன், –வில்லுப்பாட்டு கதாபப்பிரசங்கஙகளுடன்) தடல்புடலாய்ச் செய்கின்றனர். முழுநாடுமே (தேர்தல்); திருவிழாவின் குதூகல உச்சக்கட்டத்தில் உள்ளது.
இக்குதூகலம் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு, (சொற்பொழிவுகளாக, பிரச்சாரங்களாக, போட்டிப் பிரச்சாரங்களாக, வழக்காடு பட்டிமன்றங்களாக) மகாகோலம் கொள்ளும். குதூகலங்களுக்கு உள்ளும், எம்நாட்டு மக்களுக்கு உள்ள பெரும் கவலை, தடுமாற்றம், திணறல், என்னவெனில் இத்தேர்த்தலில் உள்ள 8,000பேரை எப்படி 196-பேர்கள் ஆக்குவதென்பதே! சர்p, மக்கள் என்னதான் செய்கின்றாhகள், என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நான் சென்றவாரம் சொன்னதுபோல், இந்த 8,000த்தை பிரதிநிதித்துவப் ;படுத்தும், கட்சிகளும், குழுக்களும் மக்களுக்கு என்னதான் சொல்கின்றன என்பதைப் (தொட்டதை-விட்டதை) பார்ப்போம்.
தேர்தல் திருவிழாக்காரர்களின் உபயமும் – உபத்திரவங்களும்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3504
செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்! 28.03.2010
தேர்தல் திருவிழாவிற்கு இன்னொரு பத்து நாள் உபயமே உள்ளது. நான் சென்ற வாரம் சொன்னதுபோல் உபயகாரர்கள் தேர்தல் பிரசசாரங்களை, சொற்பொழிவுகளாக, போட்டிப் பிரச்சாரங்களாக, வழக்காடு-பட்டி மன்றங்களாக்கி மகாகோலம் கொள்ள வைத்ததில், மக்கள் சலிப்பிற்கும், உபத்திரவங்குளுக்கும் உள்ளாக்கியுள்ளனர். இவர்களின் இந்த சலிப்பான – உபத்திரவங்களையும், கடந்தவாரத்தில் விட்டதையும், தொட்டதையும் தொடாகின்றேன்.
இதில் ஜனநாயக நீரோட்டக்காரர்களான “மகிந்த செஞ்சோற்றுக்காரர்களினதும்” ஏனையவர்களினதும் ; தேர்தல்திருவிழா அரசியலைப் பார்ப்போம்.
மார்ச் 22-உலக குடிநீர் தினம்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3642
உலகின் நீர் அவலம் பற்றிய குறிப்புகள்
உலக முதலாளித்து ஆளும் வர்க்கம் மனிதகுல தேவைக்கான, பல இயற்கையான அத்தியாவசியங்களைக் கூட இல்லாதாக்குகின்றது. இவற்றுள் குடிநீர்ப் பிரச்சினையும் ஒன்றாகியுள்ளது. இது இன்றைய சர்வதேசப் போராகவும் உருவெடுத்துள்ளது. இதை சர்வதேசத்தின் சுற்றுச்சூழல் வாதிகள் பலமாக எச்சரிக்கின்றனர்.
தேர்த்திருவிழா ஆகியுள்ள தேர்தல் திருவிழா!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3487
செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்! 04-04-2010
இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் திருவிழா நிறைவுற இன்னம் மூன்று நாட்களே உள்ளன. இது அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய அட்டமி நவமியில், பஞசமியில் இனிதே நிறைவெய்துகின்றது. இத்தேர்தல் தற்போது தேர்த்திருவிழா கோலம் கொண்டுள்ளது.
“தந்தை செல்வாவின” 113-வது ஜனன காலத்தில், சகல அரசியல் கட்சிகளினதும்; சுயேட்சைகளினதும் தலைவர்களோடு வரதராஜப்பெருமாளும், மகிந்த மன்னனும் வடம் பிடித்து தேர் இழுத்த காட்சி, இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் கண்கொள்ளாக் காட்சியே! இதை நாட்டுமக்கள் சகல ஊடகங்களிலும் கண்டு களித்தனர். இவர்கள் எல்லோரும் தேரை இழுத்துவந்து வடகிழக்கு திசையில் நிறுத்தியதில், அது தென்மேற்குப் பக்கம் பார்த்தவண்ணம் இருக்கின்றது. ஆம்! இலங்கையின் பேரினவாத-குறுந்தேசிய இனவாதக் கட்சிகள் எல்லாம், கடந்த காலங்களிலும், சமகால பாராளுமன்றத் தேர்தலுக்கு ஊடாகவும் இலங்கையின் அரசியலை, வடகிழக்கு-தெற்கு மேற்காகவே ஆக்கியுள்ளார்கள். இதற்கு மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பேரினவாதத் தீனி போடுகின்றார்!
வரலாற்றுச் சிறப்புமிக்க பாராளுமன்றத் தேர்தல்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3388
செய்தியும் செய்திக் கண்ணேட்டமும் - 12.04.2010
கடந்த ஓரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற தேர்தல் திருவிழா ஏப்ரல் 8-ன் பூங்காவனத்துடன் நிறைவெய்தியது, 2010-ன் தேர்தல் சகலதிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ளது. 30க்கு மேற்பட்ட கட்சிகள் 800க்கு மேற்பட்ட சுயேட்சைக் குழுக்கள் 7600க்கு மேற்பட்ட வேட்பாளர்கள், 4அடி நீளமான வாக்குச்சீட்டில் 400-500க்கு மேற்பட்ட தேர்தல் சின்னங்கள் இப்படி வரலாற்றுப் புகழ்மிக்க இன்னும் பல எக்கச்சக்கங்கள்.
தேர்தலுக்குப் பின் வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற, மிகக்குறைந்த் கட்சிகளின், (அரசைத் தவிர) மிகக் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன், புதுப் பாராளுமன்றத்தின் புதுமனைப் புகுவிழா நடைபெறவுள்ளது.
“சாதிய சமூகத்தில் தேசிய இனப் பிரச்சினை” – மதுரைக் கருத்தரங்கில் ந. இரவீந்திரன் மற்றும் வை. வன்னியசிங்கம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3522
இலங்கையின் தமிழ்த் தேசியம் எப்போதும் மக்கள் விடுதலை நாட்டம் அற்றதாகவே இருந்தது
-மதுரைக் கருத்தரங்கில் ந. இரவீந்திரன்
இலங்கையில் ஆரம்பத்தில் இருந்து ஏகாதிபத்திய நலனுடன் கூட்டமைத்த, ஆளும் சாதித் தேசியமான தமிழ்த் தேசியம் எப்போதும் மக்கள் விடுதலை நாட்டம் அற்றதாகவே இருந்து வந்துள்ளது.
மேற்கண்டவாறு தமிழ்நாடு மதுரை இறையியற் கல்லூரியில் “சாதிய சமூகத்தில் தேசிய இனப் பிரச்சினை” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாடு இறையியற் கல்லூரியின் பேராசிரியர் அறிவர். டேவிட் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் தொடர்ந்து பேசுகையில், இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் மிக வீறுடன் முன்னெடுக்கப்பட்டது. அதன் பேறாக இந்தியா விடுதலையடைந்த போது இலவச இணைப்பாக இலங்கைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அரைக்காலனித்துவ நீடிப்புக்கு எதிராக பின்னர் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. ஐ.தே.கட்சியில் இருந்து பிரிந்து உருவாகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி சிங்கள தேசிய முதலாளித்துவக் கட்சியாக தோற்றம் பெற்றது. அகில இலங்கை தமிழ்காங்கிரசில் இருந்து உருவாகிய செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சி ஆரமபத்தில் தமிழ்த்தேசிய முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. பின்னர் பெருமுதலாளிய வர்க்க நலனை வெளிப்படுத்தி ஐ.தே.கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. இலங்கையில் உருவான இரு கட்சிகளும் தமிழ்-சிங்கள இனவாதத்தின் அடிப்படையான தந்திரோபாயங்களை முன்வைத்து தேர்தல் வெற்றிகளை ஈட்டின.
புதுப் பாராளுமன்றத்தின் “நம்பிக்கை நட்சத்திரங்கள்” என்னதான் சொல்கின்றார்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3669
செய்தியும் செயதிக் கண்ணோட்டமும் 28-04-2010
கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற தேர்தல் திருவிழாவின் மூலம் “புடம் போட்டு எடுக்கப்பட்ட இலங்கை மக்கள்” ஏப்ரல் 8-ல் தங்களுக்குப் பிடித்த , தங்கள் அபிமான நட்சத்திரங்களை புதுப் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளார்கள். இதன் மூலம் இலங்கை மக்களின் அடுத்த ஐந்தாண்டிற்கான அரசியல் பணி முடிவுற்றுள்ளது. இனி மேல் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரும், அவரின் குடும்ப நிறுவனமுமே இலங்கை அரசியலின் சகலதையும் தீர்மானிக்கப் போகின்றது. மக்கள் புள்ளடியிட்டு தேர்ந்தெடுத்த 196-நட்சத்திரங்கள் போதாதென்று, தேர்ந்தெடுத்ததுகள் தங்கள் துணைக்கு இன்னொரு 47பேரை (தேசியப்பட்டியல்) தெரிவு செய்துள்ளனர்.
அத்துடன் மகிந்த மன்னன் அதி முக்கியமான நான்கு மந்திரிப் பதவிகளை தான் எடுத்து வைத்துக் கொண்டு, தனக்குச் சேவகம் செய்ய, தஞ்சாவூர்ப் பொம்மைகள் போன்ற (இதுகள் எதற்கும் தலையாட்டும்) 37-முழுசும், 39-துணையும் கொண்ட மந்திரி சபையையும் ஏற்படுத்தியுள்ளார். இதற்குள் தான் டக்கிளசும், கருணாவும் முழு-அரை மந்திரிகள் ஆகியுள்ளனர்.
லால்கர் பழங்குடி மக்களின் போராட்டங்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3528
மேற்கு வங்கத்தின் லால்கர் பகுதி இன்று இந்தியாவின் “பயங்கரவாத ஒழிப்பு” யுத்தத்தின் மையமாக ஆகியுள்ளது. ஆந்திராவில் மையங் கொண்டிருந்த மாவோயிஸ்ட் புயல், இன்று லால்கரில் சுழன்றடிப்பதனால், அங்கு வைத்தே மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை வேரறுத்துவிடவேண்டும் என்பது, இந்திய ஆளும்தரப்பின் தீராத வேட்கையாகியுள்ளது.
இந்திய தரப்பின் விருப்பம் என்றில்லாமல், ஆளும்தரப்பு எனச் சொல்வதற்கும் காரணமுண்டு. இந்த ஒரு விடயத்தில் தான் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும், மேற்குவங்க ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் அரசிற்கு முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக பா.ஜ.க. சிதம்பரத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றார்கள். பயங்கரவாதத்தை தீர்க்கமான நடைமுறைகளினூடே ஒழிக்க முயல்வதற்காக, அண்மையில் தம்மீதான நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தி 76 பொலீசாரை தாக்கி மாவோயிஸட்டுக்கள் கொன்ற சம்பவத்திற்காக பொறுப்பேற்று சிதம்பரம் அமைச்சர்ப் பதவியை ராஜினாமா செய்ய வந்தபோது, பா.ஜ.க. அந்தக் கதையே எழக் கூடாது எனறு செல்லக் கண்டிப்பு செய்திருந்தார்கள்.
பார்வதி அம்மாளும் பயங்கரவாதியோ?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3663
செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 02-05-2010
பார்வதி அம்மாளும் பயங்கரவாதியோ?
சென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
மனுவில் “மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் திகதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3545
செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 03-05-2010
மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில் வர்த்தக நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு, காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி, தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.“இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை வகுத்துள்ளன. இந்த உத்திகளில் ஒன்று தான் தென்னிலங்கையில் இருந்து அநேக சிங்களவர்கள், சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சி.