" வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மாற்றத்திற்கானதாகப் பார்க்க கற்றுக் கொண்டேன்... அந்த வகையில் நான் எப்போதுமே போராளிதான் "
பொங்கு தமிழ் நிகழ்வு பெண் போராளி - முன்னணி இதழுக்காக பிரத்தியேகமாக வழங்கிய பேட்டி இது.
வவுனியாவில் இருந்து நான் காலை எட்டு மணிக்கு ஏறிய இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மூன்று மணித்தியாலங்களின் பின் தம்புள்ள நகரை சென்றடைந்தது. நகரத்தின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கிய எனக்கு திசை ஒன்றும் விளங்கவில்லை. இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் தம்புள்ளைக்கு வந்ததாக நினைப்பு. இன்று யாழ்பாணத்தை விட, ஏன் அனுராதபுரத்தை விட வளர்ச்சி அடைந்த நகராக காட்சி தருகிறது. வன்னி ஒரு காலத்தில் இலங்கையில் அரிசிக்களஞ்சியம் என்பது போல தம்புள்ள இப்போதும் இலங்கையில் மரக்கறித் தோட்டமாக விளங்குகிறது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காலி நகரில் இன்று கையெழுத்து வேட்டையும் ஆர்ப்பாட்டமும்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 28 August 2012
- Hits: 865
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பகிரங்க மனுவில் கையெழுத்திடும் இயக்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் அமைப்பினால் இன்று நண்பகல் காலி நகரில் நடைபெற்றது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினசக் கட்சியின் 34வது ஆண்டு விழா பொது கூட்டம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 28 August 2012
- Hits: 1054
புதிய ஜனநாயக மாக்சிச லெனினசக் கட்சியின் 34வது ஆண்டு விழா பொது கூட்டம் கட்சியின் வடபிராந்திய செயலாளர் கா. கதிர்காமநாதன் தலைமையில் யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி மக்கள் மண்டபத்தில் 2012.08.26 ம் திகதி இடம்பெற்றது. இதில் பு.ஜ.மா.லெ கட்சியின் பொதுச் செயலாளர். சி.கா. செந்திவேல், தேசிய அமைப்பாளர் வே. மகேந்திரன், அரசியல் குழு உறுப்பினர்கள் க.தணிகாசலம், சோ. தேவராஜா, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி உறுப்பினர்கள் த. பிரகாஸ், சு.விஜயகுமார், க.சீலன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அப்போலோ11ம் அடிமைப்பட்டுக்கிடக்கும் மக்களும்
விஞ்ஞான ஆராட்சியில்
ஆசான்கள் பெரு விண்ணர்கள்
கண்முன்னே நித்தமும் செத்துமடியும் உயிர்கள்
பசியால்
படுத்துறங்க இடமற்று விறைத்துக் குளிரால்
கொட்டும் சுடுகலக் குண்டால்
சிறைப்பட்டு ஆட்சியாளர் வதையால்
கத்தும் குழந்தைக்கு பாலூட்ட நாதியற்று
இரத்தம் உறிஞ்சும்
பன்னாட்டுப் நிறுவனக்கொள்ளைகளால்
வெறும் எலும்பாய்
முறடு தண்ணிக்காய் ஏங்குபவரை
சந்திரனில் கால்பதிக்க விட்டுக் கண்டீரோ
தங்கம்
பீறிப்பாயும் எண்ணை வளம்
கூலியற்று உழகை;க ஏதும் உயிர்கள்
கனிமங்கள்
ஏது கண்டீர்....
சிறப்பு அகதிகள் முகாம்களை மூடி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 27 August 2012
- Hits: 2515
நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !
தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இயக்கப்படும் சிறப்புஅகதிகள்முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை செய்யப்பட நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மானிட இருப்பை அச்சுறுத்தும் இலாப வேட்கை
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Category: செம்பதாகை
- Created: 26 August 2012
- Hits: 2431
மனிதன் ஒரு சமூகப் பிராணி என்று அரிஸ்டோட்டல் கூறினார். ஏனைய விலங்குகளைப்போல் அன்றி, விரயத்தை தவிர்த்து மேலதிகமாக உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்ளவும், நாளைய தேவை கருதிப் பாதுகாத்து வைக்கவும், பயிர் விளைக்கவும், மறு நடவு செய்யவும் மனிதன் பழகிக் கொண்டுள்ளான்.
யாழ்ப்பாணத்தில் புலிகளால் கைது செய்யப்பட டொமினிக்
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 69
"தீப்பொறி"ச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவின்படி "போல்" என்பவருடன் யாழ்ப்பாணம் சென்றிருந்த டொமினிக் கொக்குவில் பொற்பதி வீதியிலமைந்திருந்த தீப்பொறி"க்குழு உறுப்பினரான காசி (ரகு) யின் வீட்டில் தங்கியிருந்து தீப்பொறி"க்குழு உறுப்பினர்களை சந்திக்கத் தொடங்கியிருந்தார்.
"கோத்தாவின் யுத்தம்" ஒரு நல்வரவு - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 07
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 August 2012
- Hits: 2794
(தமிழ்) பிரிவினைவாதத்துக்கு எதிரான (பேரினவாத) அரசு எதிர்ப்பிரச்சாரத்தை முறியடிப்பது எப்படி? சிங்கள மக்களும், சிங்களப் பாட்டாளி வர்க்கமும் பதிலளிக்க வேண்டிய முக்கிய புள்ளி இதுதான். அரசின் பிரச்சாரத்துடன் சேர்ந்து பயணிப்பதா, அல்லது எதிர்த்துப் பயணிப்பதா? எதிர்த்து என்றால் எப்படி? சேர்ந்து என்றால் எப்படி? "பிரிவினைவாதம்" பிரிவினை வாதிகளின் கோசம் மட்டுமல்ல, பிரிவினைவாதத்துக்கு எதிரான அரசின் கோசமாகவும் இருக்கின்றது.
போரும் அரசியலும்
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Category: செம்பதாகை
- Created: 23 August 2012
- Hits: 2496
உலகில் உள்ள அனைத்தையும் விட மனிதர்களே மேலானவர்கள். மனிதர்களுக்கு நிகரான ஒன்றை இவ்வுலகில் எங்குமே காணவியலாது. பிரபஞ்சத்தில் இருந்து உருவாகிய இவ்வியற்கைப் பூவுலகில் மனிதர்கள் தோன்றி வளர்ந்து யாவற்றையும் உருவாக்கி வந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இணைந்தும் போராடியும் கட்டுப்படுத்தியும் தமக்கானவற்றைப் படைத்து வந்திருக்கின்றார்கள். உணவு, உடை, இருப்பிடம், மொழி, மதம் பண்பாடு போன்றவற்றை உருவாக்கி வளர்தெடுத்தெடுத்து வந்திருக்கின்றார்கள்.
சமூக அசைவியக்கம் எதுகொண்டு நிகழ்கின்றது
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 22 August 2012
- Hits: 6547
பன்நெடுங்காலத்திற்கு முந்தைய மக்கள் உலகத்தின் தோற்றுவாய்கள், அதன் கட்டமைப்பு, அந்த உலகத்தில் மனிதன் வகித்த இடம் ஆகியவற்றைப்பற்றிச் சிந்தித்தபொழுது, அதன் சிந்தனைப் பரிணாமமாக தத்துவஞானம் தோன்றியது.