மட்டு நகரில் மகிந்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீது அரச படையினர் வன்முறை (படங்கள்)
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
-
20 Dec 2014
- Hits: 584
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்த போது மைதானத்துக்கு வெளியில் பிரதான வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
காட்டு மிராண்டிதனமாக தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கப்பட்டு மிருகங்களைப் போல இழுத்துச் சென்று இருக்கின்றனர்.