கிளிநொச்சியில் பயங்கரவாத குற்றச்சாட்டில் மூதாட்டி கைது
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 April 2014
- Hits: 2170
கிளிநொச்சியில் மூதாட்டி ஒருவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 64 வயதான பத்மாவதி என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மீளிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக காணி ஒன்று இந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
ஐயா நெடுமாறனின் கருத்துகளுக்கு வை.கோ., சீமான் போன்றவர்கள் பதில் சொல்வார்களா?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 April 2014
- Hits: 2300
தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால் இதுபோன்ற கொள்கை முரண்பட்ட கூட்டணிகளை ஆதரிக்க இயலவில்லை'
சார்லி சாப்ளின் பிறந்த தினம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 April 2014
- Hits: 2454
வாய் பேசா நகைச்சுவை நடிப்பால் உலக அரசியல் அதிகார வர்க்கத்தின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் சார்லி சாப்பிளின். The Great Dictatorபடத்தில் சாப்ளின் இறுதியில் பேசும் வசனங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் ஆகும்.
"மிக அதிகம் சிந்திக்கிறோம், மிகச் சிறிதே உணர்கிறோம்.
இயந்திரங்களை விடவும் நமக்குத் தேவையானது மனிதத்தன்மை.
கெட்டித்தனத்திலும் மேலாக நமக்குத் தேவையானவை
இரக்கமும், மென்மையும்.
இப்பண்புகளின்றி வாழ்க்கை வன்முறையானதாகும்
யாவும் இழக்கப்பட்டுவிடும்".!
"நோபல்' எழுத்தாளர் கேபோ மறைவு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 April 2014
- Hits: 2346
பிரபல தென் அமெரிக்க இலக்கியவாதியான கேப்ரியல் கார்ஸியா மார்குவேஸ், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் 31 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்குப் பின் மெக்ஸிகோ நகரில் உள்ள சொந்த வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வியாழக்கிழமை இறந்தார். "கேபோ' என இலக்கிய வட்டத்தில் செல்லமாக அழைக்கப்பட்டார் மார்குவேஸ்.
மகிந்த சிந்தனை!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 April 2014
- Hits: 2350
அரிது அரிது இலங்கையில் இடதுசாரிகளைப் பெறுதல்! அதனிலும் அரிது இடதுசாரிகளில் இவர்போல் ஒருவரைப் பெறுதல்! அதனிலும் கொடிது இடதுசாரியத்தின் கொள்கைகளை பேரினவாதத்திடம் அடகு வைத்து தங்கள் அரசியல் சீவியத்தை ஓட்டுவது!
பொதுபல சேனா பிக்குகள் மது அருந்தியிருந்தனர்! ஆதராங்களுடன் நிரூபிக்கத் தயார்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 April 2014
- Hits: 2289
பொதுபல சேனா இயக்கத்தின் பௌத்த பிக்குகளின் ஒழுக்கக் கேடான செயற்பாடுகள் வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் என ஜாதிக பலசேனா இயக்கம் அறிவித்துள்ளது. தம்மை துண்டு துண்டாக வெட்டப் போவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தியதாக வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.!
யாழில் உள்ளவர்கள் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூறமுடியாது!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 April 2014
- Hits: 2409
தமிழர் பிரதேசத் தமிழர்கள் இனி ஒரு போதும் தங்களை சுத்தமான தமிழர்கள் என கூற முடியாதாம். ஏனெனில்…. எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் அனைத்துத் தமிழர்களிடம் (இரத்தம் கொடுப்பதால்) ஓடுகின்றதென வடபகுதி "இராணுவப்பிரிவின் உயர்தர வாலில்லா வானரம்" ஒன்று இப்படியொரு இனவெறிக உளவியல் கருத்தியலை இட்டுக்கட்டுகின்றது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை முட்டாள்த்தன முடிவு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 April 2014
- Hits: 2353
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் புத்திசாதூரியமான தீர்மானமாகாது என ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்! மிதவாத கொள்கைகளைப் பின்பற்றும் தமிழர்களையும் சந்தேக கண் கொண்டு பார்ப்பதனால் நன்மைகள் ஏற்படப் போவதில்லை! உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு அமைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் சுமூக உறவுகளைப் பேண வெளிவிவகார அமைச்சு முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடத்தல், காணமலாக்கல் மற்றும் அடக்குமுறைக்கு முடிவு கட்டுவதற்காக ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய அழுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக போராடுவோம்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 19 April 2014
- Hits: 933
தினக்குரல் பத்திரிகையின் யாழ். வடமாரச்சிக்கான பிரதேச நிருபர் சிவஞானம் செல்வதீபன் கடந்த 14ம் திகதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கடுமையான காயங்களுடன் பருத்தித்துறை மாந்தை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வதீபன் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் செல்வதீபனின் சகோதரர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதற்கு எதிராக குரலெழுப்பியவராகும்.
ஒலுவில் கடற்படை முகாமை அகற்ற வேண்டி ஆர்ப்பாட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 18 April 2014
- Hits: 2288
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேச முஸ்லிம்கள் மக்கள் வியாழக்கிழமை இரவு கடற்படையினருக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் இருக்கும் பாடசாலை கட்டிடமொன்றில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்களால் முன் வைக்கப்பட்டிருந்தது.