இந்திய மற்றும் உலக செய்திகளின் சாரம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 March 2014
- Hits: 2257
தமிழ் ஈழத்திற்கு ஆதரவில்லை: பா.ஜ.க அறிவிப்பு!
இக்கட்சியின் குளறுபடிகள் நிறைந்நத தேர்தல் காலப்பரப்புரைகளில் "தமிழ்ஈழ" அறிவிப்பு முன்மாதிரியானது. தமிழ்ஈழக் கனவில் இருந்து பாரதிய ஜனதாவை வில்லாக வளைத்து தமிழ்ஈழ நாண் பூட்டி, இதோ தன் தோழில் போட்டுவிட்டேன் பாருங்கள் என்ற வை.கோ.வின் பாமரக் கணிப்பிற்கு விழுந்த இடி இது. 21-ம் நூற்றாண்டிலும் அரசியலை பாமரம் கொண்டு சிந்திப்பதை விடுத்து, குறைந்தது "அண்ணாவின் அறிவு" கொண்டாவது சிந்திப்பார்களா? இந்த தம்பிகளும், "ஐயா" நெடுமாறன் போன்றவர்களும்!…
புலிகள் அமைப்பின் புதிய தலைவர் கோபி? – தகவல் வழங்கினால் ஒரு மில்லியன் ரூபா சன்மானம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 March 2014
- Hits: 2178
இல்லாத ஒன்றிற்கு இருப்புகள் உள்ளதாக இட்டுக்கட்டுவது, ஜெனிவாப் பொறிக்குள் இருந்து தவறியோடும் தந்திரோபாயமாக கருதலாம். ஆனால் மூல-உபாயத்தில் அடிமுட்டாள்த்தன செயற்பாடுதான் என்பதை அறிவிலி அரசு அறியாதது பெரும் வியப்பல்ல. தன் கால் சிதறவுள்ளது… தான் தூக்கியுளள் பெரும் புலிப் பாறாங்கல்லால் என்பதை இவர்கள் உணர்ந்து செயற்பட்டால் அதை சமயோசித புத்தியாக கொள்ளலாம். இதுவெல்லாம் இவர்களுக்கு எப்படி வரும?
கோமா நிலையிலிருக்கும் ஹக்கீம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 25 March 2014
- Hits: 2341
எப்போதுமே கோமா நிலையிலிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தேர்தல் வந்து விட்டால் விழித்துக்கொள்கிறார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் அந்த கட்சிகளுக்கு தொற்றிக் கொள்வதற்கு இடம் இல்லை என்று மத்திய மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார். அண்மையில் பொதுபலசேனாக்களுக்கு இவ்வளவு அதிகாரங்களை கொடுத்தவர்கள் யார் என கேள்வியெழுப்பினார். இவ்வாறான கேள்விகளை அமைச்சரவை அமைச்சராக இருக்கும் இவர் அமைச்சரவையில் அல்லவா கேட்க வேண்டும். அதனை விடுத்து மக்களிடத்திலா கேட்பது?
என்று தணியும் இந்த பேடிகளின் கைது!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 25 March 2014
- Hits: 2311
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்ய தயக்கம் காட்டினர். இப்பேடித்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் திட்டமிட்டு எம்மை பழிவாங்காதே பொலிசே மாணவரை பொங்க வைக்காதே பொலிசாரே பக்கச் சார்பாக நடக்காதீர்கள், விபூசிகா-ஜெயக்குமாரியைக் கைது செய்த நீ… இவர்களை ஏன் கைது செய்யவில்லை போன்ற பதாதைகள் மற்றும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியக் கடற்கொள்ளையும் இலங்கையில் கடல்வள அழிவும்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 6
- Created: 24 March 2014
- Hits: 1329
கடந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் 78 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். 78 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதானது யுத்தத்துக்கு பின் வந்த காலத்தில் நடந்த கைதுகளில் மிக அதிகமானதாகும். இலங்கைக்குச் சொந்தமான விசேட பொருளாதார கடல் வலயத்தில், சர்வதேச சட்ட அடிப்படைக்கு முரணாக, நடாத்தப்படும் இந்த கடல்வளக் கொள்ளையானது, தற்போது 2009 இக்கு முன்னிருந்த நிலையை விட அதிகரித்துள்ளது.
வட இலங்கையில் இரண்டு மக்கள் போராட்டங்கள்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 March 2014
- Hits: 2036
இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையிலான இருவேறு போராட்டங்கள் நடந்திருக்கின்றன.
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளரைக் கோரி மன்னாரிலும், ஆறுமாதங்களுக்கு முன்னர் காணாமல் போய் எலும்புக் கூட்டு எச்சங்களாக மாங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசிரியர் கார்த்திகேசன் நிருபனின் மரணத்திற்கு காவல்துறையினர் சரியான விசாரணைகளை நடத்த வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் வெள்ளியன்று நடத்தப்பட்டிருக்கின்றன.
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் இரண்டாவது மாநாடு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 March 2014
- Hits: 2041
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாநாடு, பொதுக்கூட்டம் எதிர்வரும் 29.03.2014 அன்று இரத்தினபுரியில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பெருந்தோட்ட தொழில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மட்டுமன்றி இலங்கையின் அனைத்து உழைப்பாளர்களினதும் சவால்களை எதிர்நோக்கும் வகையில் தொழிற்சங்கம்ஃசங்கங்களை கட்டுவது தொடர்பான வர்க்க ரீதியான முடிவுகளை ஏதுவதற்கான விவாதங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
கார்ல் மாக்சை நினைவு பேருரை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 March 2014
- Hits: 2162
கார்ல் மாக்ஸ் சிந்திக்க நிறுத்தி 14.03.2014வுடன் 131 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கார்ல் மாக்சை நினைவு பேருரையை இலங்கை கொம்யூனிஸட் ஐக்கிய கேந்திரம் 15.03.2014ம் திகதி கொழும்பில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிலைய கேட்போர் கூடத்தில் நடாத்தியது. 'ஏகாதிபத்தியத்தின் நவ-கொலனித்துவ, நவ-தாராளவாத தாக்குதலுக்கு எதிராக இலங்கை மக்களின் பணிகள்' எனும் தலைப்பில் கேந்திரத்தின் இணை இணைப்பாளர் இ.தம்பையா நினைவு பேருரையை நிகழ்த்தினார். நிகழ்விற்கு கேந்திரத்தின் இணை இணைப்பாளர் டிபில்யூ.வீ. சோமரத்ன தலைமை தாங்கினார்.
போரை நடத்த சொன்னவர்களே போர் நடந்தப்பட்ட விதம் பற்றி கேள்வி கேட்பதை ஏன் தடுக்க வேண்டும்?
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 22 March 2014
- Hits: 3428
உள்நாட்டில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ள முடியாவிட்டாலும் அநீதி இழைக்கப்பட்டவர்கள் உள்நாட்டு பொலிஸ் நிலையங்களையும் நீதி மன்றங்களையும் நாடுகின்றனர். உள்நாட்டில் நீதி மறுக்கப்படும் போது சர்வதேச பொறிமுறையை நாடுவதற்கு வழிவகைகள் இருக்கின்றன. இதில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிடினும் நீதி கேட்கும் உரிமை போராட்டத்தை கைவிட வேண்டியதில்லை. அப்பேராட்டத்தை அங்கும் கொண்டு சொல்லலாம். இவ்விதமான நீதி கேட்கும் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு பல படிப்பினைகளை கொண்டு வந்து சேர்க்கும். அவற்றினூடே எதிர்கால அரசியல் மார்க்கங்களை வளர்த்து கொள்ள முடியும் என்று இலங்கை கொம்யூனிஸட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.
நிரூபனின் படுகொலையைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 March 2014
- Hits: 2076
எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்ட ஆசிரியர் நிரூபனின் படுகொலையைக் கண்டித்தும் உரிய நீதி விசாரணையை கோரியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (21.03 2014) யாழ் நகரில் நடைபெற்றது.இப் போராட்டத்தில் பெருந்தொகையான ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் இப் போரடட்டத்துக்கு புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்து பங்கு கொண்டதுடன் .அங்கு இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டது.