மாணவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
- Details
- Category: தோழமை அமைப்புகள்
-
24 Oct 2016
- Hits: 1430
இலங்கை அரசின் பொலீஸ் குண்டர்களால் துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டு யாழ் பல்கலை மாணவர் படுகொலைக்குள்ளானதை கண்டித்தும், நீதி கோரியும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஜனநாயகத்திற்கான ஆர்ப்பாட்டகாரர்கள் போராட்டத்தில் இன்று (24/10/2016) ஈடுபட்டிருந்தனர். இதில் இடதுசாரிய கட்சிகள, தொழிற்சங்கங்கள் வெகுஜன அமைப்புக்கள் பங்குபற்றியிருந்தன.
அரசியல் கைதிகளை விடுதலை செய்! குமாரின் குடியுரிமையை உறுதி செய்! கொழும்பில் ஆர்ப்பாட்டம்...
- Details
- Category: தோழமை அமைப்புகள்
-
10 Oct 2016
- Hits: 1205
கொழும்பு கோட்டையில் இன்று (10/10/2016) பிற்பகல் 3 மணியளவில் ஜனநாயகத்திற்கான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளாக "குணரட்னம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்!", "குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக் கொள்!", "அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்!" ஆகியவற்றை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவிளான பொது மக்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்வியை தனியார் மயப்படுத்தலை எதிர்த்து பாரிய போராட்டம்
- Details
- Category: தோழமை அமைப்புகள்
-
28 Jul 2016
- Hits: 1455
பொய்யான பட்டங்களை வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தலை எதிர்த்தும், கல்வியை தனியார் மயப்படுத்தலையும் எதிர்த்தும், பாடசாலைகளில் அநியாய கட்டண வசூலை எதிர்த்தும் நேற்று 27.07.2016 பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வல போராட்டம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஹைலெவல் வீதி இருந்து தொடங்கி கொழும்பு நகரத்தின் ஊடாக நுகேகொட நோக்கி நடாத்தப்பட்டது. அதன் பின் பொதுக் கூட்டம் சமரக்கோன் வெளிப்புற திரையரங்கில் நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழக சம்பவத்தை இனவாதமாக்குவதனை அனுமதிக்க முடியாது - லகிரு (IUSF)
- Details
- Category: தோழமை அமைப்புகள்
-
19 Jul 2016
- Hits: 1874
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சமபவம் குறித்து பல்வேறு பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை அரசியல் லாப நோக்குடைய இனவாதத்திற்குள் மக்களை இட்டுச்செல்லும் ஆபத்துக்கள் நிறைந்தனவாக இருக்கின்றன என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் தலைவர் லகிரு வீரசேகரா இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பிரச்சாரம்! (படங்கள்)
- Details
- Category: தோழமை அமைப்புகள்
-
14 Aug 2016
- Hits: 1270
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா மாத ஊதியம், காணி மற்றும் ஒரு வீட்டு உரிமைகளை வலியுறுத்தி, இன்று 14-08-2016 நுவரெலியா மாவட்டத்தில் மலையக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முழு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த பிரச்சார நடவடிக்கை ஒன்றுபட்டுள்ள தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையின மேற்கொண்டன. ஐக்கிய தோட்ட தொழிலாளர் யுனியன், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், கிறிஸ்த்தவ தொழிலாளர் சகோரத்துவம், ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்ட தொழிலாளர் சேவை நிலையம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, மலையக ஆய்வகம், தோட்ட சமூகத்தின் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம், நவயுக சமூக அபிவிருத்தி மன்றம், பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம், ஆட்ஸ் சமூக அமைப்பு ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டன.