மாட்டிறைச்சியின் பேரால் முஸ்லிம்கள் மீதான வலம்புரியின் விஷமத்தனம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 13 November 2014
- Hits: 4432
மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்று ஒரு வழக்கு இருக்கிறது. இன்றைய (11.11.2014) வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம் அந்த வழக்கிற்குச் சரியான உதாரணமாக இருக்கிறது. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுபவர்கள் இரண்டுவிதமானவர்கள் ஒருவகையினர் அறியாமையால் அதைச் செய்பவர்கள். மற்றவகையினர் விஷக்கருத்துக்களைப் பரப்புவதற்காகச் செய்பவர்கள். வலம்புரியின் இன்றைய ஆசிரியர் தலையங்கம் இந்த இருவகையினதாகவும் இருக்கிறது.
ஆசிரியர் தலையங்கத்தின் முற்பகுதி விளக்கமற்ற கதையைச்சொல்ல, இரண்டாம் பகுதி இந்துக்கள் மட்டுமே வாழ்கின்ற யாழ்ப்பாணத்தை உருவாக்க முஸ்லிம் மாட்டிறைச்சிக் கடைகளை மூடி உதவவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது. இதற்காக 'ஹெல உறுமய'வின் தலைவர் ஓமல் பி சோபித தேரர் ''முஸ்லிம் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது '' என்று வெளியிட்ட கருத்தை மேற்கோள் காட்டி வலியுறுத்துகிறது. தொடர்ந்து நஞ்சை விதைக்கும் அவ்வாசிரியர் தலையங்கத்தை அவ்வாறே தருகிறோம்.
அனைத்து நெருக்கடிகளுக்கும் அரசியல் முறைமை மாற்றமே ஒரே தீர்வு!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 10
- Created: 07 November 2014
- Hits: 1386
அண்மையில் நடந்தேறிய வடமத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் பலத்த அடிவாங்கிய ஐ.தே. கட்சி அடங்கலான எதிரணிக் கட்சிகள், மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான மாகாணசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தம்மை சுதாகரித்துக் கொண்டு, இவ்விரு மாகாணசபை தேர்தல்களை ஆட்சிமாற்றத்திற்கான ஆரம்பப் படியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
ஆபத்தான குடியிருப்புகளில் வெள்ளந்துரை தோட்டத் தொழிலாளர்கள்!
காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காவத்தை வெள்ளாந்துரை தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் சில வசிப்பதற்கு எவ்விதத்தில் பொருத்தமற்று காணப்படுவதுடன் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அதில் வசிப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அனர்த்தங்களுக்கு உள்ளானவர்களுக்கு காட்டப்படும் பாராபட்சம்
கடந்த 29 ஆம் திகதி கொஸ்லாந்த மீரியபெந்த தோட்டத்தில் நடந்த அனர்த்தத்தினை தொடர்ந்து நாடெங்கிலும் மழை பெய்து வரும் நிலையில் கஹவத்தை எந்தானை தோட்டத்திலும், மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 30 திகதி இரவு எந்தானை கீழ் பிரிவிலுள்ள சுனாமி வீடமைப்புத் திட்டம், தேயிலைத் தொழிற்சாலை லயம், உத்தியோகத்தர் விடுதிகள் என்பனவற்றில் வசித்து வந்த 35 தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் எந்தானை ந. மீனாட்சியம்மாள் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தோட்ட நிர்வாகத்தையும் அரசாங்கத்தின் அசட்டைத்தனத்தையும் வன்மையாகக் கண்டிப்பு: பு.ஜ.மா.லெ. கட்சி
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 04 November 2014
- Hits: 1115
பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண் சரிவினால் பாதிக்கப்பட்ட ஏழு லயன்கள் மண்ணிற்குள் புதையுண்டுள்ளன. அதனால் சுமார் முந்நூறு பேர் வரை மண்ணிற்குள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
கலந்துரையாடல்: இலங்கை அரசியலில் சமவுரிமைக்கான போராட்டமும் இடதுசாரிகளின் நிலைப்பாடும்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 03 November 2014
- Hits: 1200
இந்த கலந்துரையாடலில் பல முக்கிய தோழர்கள் கலந்து கொள்கிறார்கள்.
காலம்: 9.11.014 (ஞாயிறு)
இடம்: Roswiesen str-16. 8051- Zürich.
மணி: பிற்பகல் இரண்டு ( 14.00)
மண்ணெண்ணெய் வியாபாரியும், சந்தா பிச்சைக்காரனும்!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 03 November 2014
- Hits: 3395
அந்த இனப்படுகொலையில் வழிந்தோடிய இரத்தத்தின் சுவடுகள் இன்னும் உலரவில்லை. புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகள் சின்னமழைத் தூறலிற்கும் முளை கொண்டு எழுகின்றன. இலங்கை அரசின் இராணுவத்தால் கசக்கப்பட்ட பெண்களின் கதறல்கள் வன்னிக்காடுகளில் கத்துகின்ற பறவைகளின் ஒலிகளை மேவி இன்றைக்கும் எழுகின்றன.
மீரியபெந்த மண்முகடு சரிந்தோடி
கொலைகார ஒப்பந்தம்
கொழுந்து விட்டு எரிகிறது
எமையான இதயங்கள்
உறவறுந்து வேகிறது.
காதிலே பூ, அல்லது லைக்கா முதலாளி கைது
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 02 November 2014
- Hits: 3425
பொருளாதார அடியாட்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். இந்தக் கொள்ளையடிக்கும் பணிக்காக அவர்களிற்கு பெரும்பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது.
யார் உங்கள் எதிரி?.. யார் உங்கள் நண்பன்?
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 02 November 2014
- Hits: 1314
எங்கள் பிரதான எதிரி பேரிவாத அரசே.
உங்கள் எதிரி யார்?
அரசு என்றால்,
உங்கள் அதே எதிரிக்கு எதிராக
எங்களுடன் இணைந்து போராடாமல்
எதற்காக எதிர்க்கின்றீர்கள்.
எங்கள் போராட்டம்
சிங்கள அரசுக்கு எதிரானதே ஒழிய.
சிங்கள உழைக்கும் மக்களுக்கு எதிரானதல்ல.