வவுனியாவில் சிறுநீரக நோயால் 1000 பேர் உயிரிழப்பு!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 30 August 2014
- Hits: 658
வவுனியா மாவட்டத்தின் 29 கிராமங்களில் சிறுநீரக நோயால பாதிக்கப்பட்ட பலர் உள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் காரணமாக இதுவரை ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற காணாமல்போனோர் உறவினர்களின் ஆர்ப்பாட்டம்!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 30 August 2014
- Hits: 570
சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் உறவினர்களால் வவுனியா நகரில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது. ஊர்வலத்திற்கு பொலிஸார் மற்றும் படைப்புலனாய்வாளர்கள் கடுமையான அச்சுறுத்தல் விடுத்தபோதும் குறித்த போராட்டம், வெற்றிகரமான நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சர்வதேச காணாமல்போனவர்கள் தினமாகும்.
தேர்தலின்போது மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 29 August 2014
- Hits: 636
ஊவா மாகாண சபை தேர்தலில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் வன்செயல்கள் கடந்த வாரம் பாரதூரமாக அதிகரித்துள்ளது. இதுவரை வெளிவராத பாரதூமான சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமுள்ளன. கடந்த ஞாயிறு இரவு ஆரம்பமான வன்முறைகள் தொடர்ந்து பரவலாகி வருகின்றன.
இந்நிலை மொணராகலை மாவட்டத்திலயே அதிகமாக காணப்படுகிறது. மொணராகலை மாவட்டத்தில் இரு நாட்களில் மட்டும் 13ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகங்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 4அலுவலகங்களும் தாக்கப்பட்டுள்ளன.
மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுக்க பொது அமைப்பு உதயம்
'பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு' (Plantation Community Action Group) என்ற பொது அமைப்பு உதயம்
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரவளை லியோ மார்கா ஆஸ்ரமத்தில் கடந்த 16ஆம் திகதி, மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை தொடர்பாக இடம்பெற்ற பொதுக் கலந்துரையாடலில் குறித்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக அனைத்து அமைப்புகளையும் தனி நபர்களையும் இணைத்துக் கொண்டு பொதுவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 'பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு' எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டதுடன் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையில் அக்கறையுடைய அனைத்து அமைப்புகளும் தனிநபர்களும் இவ்வமைப்பில் இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கப்பட்டது.
ஒரு சிறுபொறி சுடர்ந்து ஒராயிரம் விளக்குகளை ஏற்றி வைக்கும்!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 17 August 2014
- Hits: 3332
ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் பகுதிகளில் இருந்து இராணுவத்திற்கு இணைந்த இளைஞர்கள் தற்போது விடுமுறையில் வீடுகளுக்கு வந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்கள் தாங்கள் இராணுவத்தினர் என்றும், தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற சிந்தனையில் அங்குள்ள பெண் பிள்ளைகளுடன் சேட்டை விட்டுள்ளனர். இதனையறிந்த பெற்றோர் ஈச்சமோட்டை சனசமூக நிலைய நிர்வாகத்திடம் தெரிவித்தனர் இதனையடுத்து அவர்களை சனசமூக நிர்வாகம் தட்டிக்கேட்டனர்.
இடதுசாரிகளின் கருத்துக்களைக் கேட்கத் தயாராகும் தமிழ்மக்கள்!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 17 August 2014
- Hits: 5736
'எழுக எம் இளம் தளிர்கள்" Brugdorf பெற்றோர் பேரவையின் நிகழ்வில்!!!
சுவீஸ்சின் தலைநகர் Bern ஐ அண்டிய சிறுநகரமே Brugdorf. அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களால் 8 வருடங்களுக்கு மேலாக பல நெருக்கடிகளையும் தாண்டி, தாங்கி இயங்கிக் கொண்டிருக்கும் பெற்றோர் பேரவை நடாத்தும் வருடாந்த நிகழ்வானது எப்போதும் பலதரப்பட்ட நிகழ்சிகளை உள்ளடக்கியதாகவே அமைந்திருக்கும். நாடகம், சிறுவர் சிறுமிகளுக்கான பலவகை நிகழ்ச்சிகள், இலக்கிய அறிமுகப்படுத்தல்கள் எனப் பலவகை நிகழ்வுகளோடு, சமூகமேம்பாட்டு நிகழ்வுகள் என்ற இன்னுமொரு பகுதியும் இணைந்ததாக அமைந்திருக்கும். இப்பகுதியில் சமூகவிடயம் சார்ந்து தாம் கடைப்பிடிப்பவற்றை மக்கள் முன் சொல்லுவதற்காக ஆன்மீகவாதிகள், மதச்சீர்திருத்தவாதிகள், எழுத்தாளர்கள், எனப்படுவோர் அழைக்கப்படுகிறார்கள். இம்முறை இப்பகுதியில் விசேடமாக இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட இருவர் அம்மக்கள் மத்தியில் உரையாற்றினர்.
அன்னிய ஆட்சிகாலங்களும் இலங்கை வரலாறும் என்ற பொருள்பட தோழர் தெரல் உரையாற்றினார். அடுத்ததாக இலங்கை தமிழ் பேசும் மக்கள் ஒருதேசிய இனம் சார்ந்தவர்கள் அவர்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ்வதற்கான அடிப்படையை உருவாக்கவும் அதற்கான செயற்பாட்டில் இறங்க வேண்டிய அவசியத்தை தோழர் கொட்டிக்கொட வலியுறுத்தினார். இச் சிங்களத் தோழர்களின் உரைகளை அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பொறுமையாகச் செவிமடுத்து கரகோசம் செய்து வரறே;றனர்.
இவ்வுரைகளை செய்வதற்கான ஏற்பாட்டை, அனுசரனையை இவ்வமைப்பின் ஒட்டு மொத்த உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்ட சம்பவமானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் சூழலில் மிகப்பெரும் மாற்றமாகும். ஓரு ஜனநாயக சூழலை தோற்றுவிக்கவும், அதை உள்வாங்கவும் மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இவ் நிகழ்வுணர்த்துகிறது. இது அனைத்து தரப்பாலும் வாழ்தப்பட வேண்டிய விடயமாகும். Brugdorf பேற்றோர் பேரவையானது, April மாதம் புத்திஜீவிகளான சுவீநாட்டு பிரiஐகள் மத்தியில் இலங்கை வரலாறும் அன்னிய ஆட்சிகாலங்களும் தமிழர் போராட்டமும் என்ற தலைப்பில் கருத்தரங்கொன்றை நடாத்தியது. அதிலும் தோழர் தெரல் அவர்களே உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும் மேலாக அவ்வமைப்பின் இளம் உறுப்பினரும் பல்கலைகழக மாணவர்ருமாகிய ஒருவர் கூறுவதைப் பார்போம் 'மிகத் தெளிவான, நேர்மையான, வரலாற்று அரசியல் விஞ்ஞான அடிப்படையில் கருத்துக்களைக் கொண்டவர்களான, பழகுவதற்கும், உபசரிப்பதிலும் இனிமையாகக் காணப்படும் இம்மனிதர்கள். எமக்கு எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர். அரசியல் வறுமையுடைய கருத்துக்கள் எம்மவர்களிடம் வேரூண்டியுள்ளது. இப்போது என்னுள் புதிய சிந்தனைக்கான வேர்கள் ஊன்றத் தொடங்குகின்றன"
இக்கருத்தானது புதிய மாற்றத்தினை தமிழ் பேசும் மக்கள் மத்தியில், அதுவும் இளம் வட்டத்தினர் மத்தியில் தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுக்ககிறது.
நேரடித் தொகுப்பு
திலக்
24-5-2014
வாழ்வை மறுதலிக்க முடியாதென்ற உண்மை உணர்ந்து எழுந்து வருவார்கள்!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 15 August 2014
- Hits: 3171
இலங்கைத் தமிழரிடம் அரசியல் ஆய்வாளர்கள் என்றொரு அறிஞர் கூட்டம் உருவாகி வந்துள்ளது. அது பத்திரிகைகளில், இணையங்களில், தொலைக்காட்சிகளில் வாழ்கிறது. தாம் அறிவு மிக்கவர்கள் என்ற பெருமிதம் கொண்டவர்கள் இவர்கள். அந்த அறிவின் துணை கொண்டு ஆராய்ச்சிகள் பல செய்து அரிய விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளை கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்களின் அரசியல் அறிவையும், பண்பாட்டின் உயர்வையும் பார்த்து மற்றவர்கள் மண்டை கிறுகிறுத்து போவார்கள்.
அந்த அறிவாளிகள் இன்று ஒரு மயிர் பிளக்கும் விவாதம் ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார்கள். லைக்கா என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் தமிழீழத் துரோகியா இல்லையா, அது தயாரிக்கும் படம் தமிழீழ விடுதலைக்கு வலுச் சேர்க்குமா இல்லையா என்று ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள். லைக்கா, லிபரா தமிழ்மக்களிற்காக அன்றைக்கும் இருந்ததில்லை. என்றைக்கும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் வியாபாரிகள். வியாபாரிகளிற்கு, வியாபார நிறுவனங்களிற்கு மக்களைப் பற்றிய அக்கறைகள், மனிதாபிமானங்கள் என்றைக்குமே இருக்காது. அவர்களது ஒரே சிந்தனை பணம் சேர்ப்பது மட்டுமே. அன்றைக்கு புலிகள் இருந்த போது புலம்பெயர் தமிழ்மக்களிடம் வியாபாரம் செய்வதற்காக புலி ஆதரவு வேடம் போட்டார்கள். இன்றைக்கு இலங்கையில் வியாபாரம் செய்வதற்காக மகிந்தாவுடன் ஒப்பந்தங்கள் போடுகிறார்கள்.
நாட்டை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்ற மஹிந்த அரசு முயற்சி!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 15 August 2014
- Hits: 662
அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்த உள்ள இலத்திரனியல் அடையாள அட்டை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டு பிரஜைகளின் கைவிரல் அடையாளங்களை பெறும் அங்குலிமாலா நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் நாட்டையும் திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இருள் சூழ்ந்த வானத்தில், ஒருநாள் விடிவெள்ளி நிச்சயம் முளைக்கும்!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 15 August 2014
- Hits: 3102
சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள், சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு வைத்திருக்கும் நீண்டகால மயக்க மருந்து இனவாதம். தேர்தல் வரப் போகின்றதென்றால் அந்த இனவாத மயக்க மருந்தை இரட்டிப்பாக அள்ளி வழங்குவார்கள். இனவாதச் சேற்றில் கால் புதைத்து நிற்பவர்களின் தோள்களின் மேல் பொய்மூடைகள் ஏற்றப்படுகின்றன. அளுத்கம முஸ்லீம் மக்களின் மீதான கலவரங்கள், காணாமல் போன தம் அன்புக்குரியவர்களை தேடும் தமிழ்மக்களின் கூட்டத்தை பொதுபல சேனாவின் பிக்குகள் என்னும் குண்டர்களைக் கொண்டு குழப்புதல், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் யோகராஜா நிரோசன் என்னும் தமிழ் மாணவனை பயங்கரவாதி என்று கைது செய்தல் என்று பலவழிகளில் இலங்கை அரசு இனவாத நஞ்சை கக்குகிறது.
தமிழ்மக்களைக் கொன்று குவித்து சிங்களத் தேசிய வீரனாக தன்னைக் காட்டிக் கொண்ட மகிந்தாவின் வாக்குவங்கி கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியிருக்கிறது. இன்னும் ஒரு லட்சம் சிங்கள மக்களின் வாக்குகள் ஜக்கிய தேசியக்கட்சிக்கு செல்லுமாயின் அடுத்த தேர்தலில் தோல்வி தான் என்று அமைச்சர் ஒருவர் பேசியதாக சொல்லுகிறார்கள். அதற்காகத் தான் இந்த அவசரத் தயாரிப்புகள். கணக்கற்ற பிணங்களில் மேல் ஏறி உட்கார்ந்த சிம்மாசனம் ஆடத் தொடங்கியுள்ளதால் அடுத்த பலிக்கு ஆயத்தம் ஆகிறார்கள்.
மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் தொழிலாளர் சங்கத்தின் நகல் வேலைத்திட்டம்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 12 August 2014
- Hits: 5149
கடந்த 06 யூலை 2014 அன்று ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைப்புகளிடையே காணப்பட்ட கொள்கை அளவிலான உடன்பாட்டின் அடிப்படையாக கொண்டு இரண்டாவது பொதுக் கலந்துரையாடல் எதிர்வரும் 16.08.2014 (சனிக்கிழமை)அன்று மு.ப. 10.30 – பி.ப. 01.30 பண்டாரவளையில் உள்ள லியோ மார்கா ஆஸ்ரமத்தில் (இல. 121ஃ1, சென் தோமஸ் வீதி, பண்டாரவளை) நடைபெறவுள்ளதாக கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ள மக்கள் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையாக தெரிவித்துள்ளார்.