டெல்வின் தோட்டச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவரை உடனே கைது செய்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 July 2014
- Hits: 2409
இறக்குவானை டெல்வின் தோட்ட பி பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய அல்லது பாலியல் வன்முறைக்குட்படுத்திய சந்தேக நபரை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மக்கள் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுப்பதுடன், அச்சமூக விரோத குற்றச்செயலை வன்மையாக கண்டிக்கிறது.
யாழில் "மீண்டும் ஒரு ஜீலைக் கலவரம் வேண்டாம்" கையெழுத்துப் போராட்டம்: (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 24 July 2014
- Hits: 1382
கறுப்பு ஜூலை தினத்தில் "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என கோரி யாழில் நேற்று (23) கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நேற்று காலை 10 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமானது. நேற்று யாழ்ப்பபாணத்தில் இடம் பெற்ற கையெழுத்து வேட்டையில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். யுத்தம் முடிந்ததற்கு பின்னரும் யாழ்ப்பாண மக்கள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு கையெழுத்து வைக்க வந்த தாய் ஒருவர் இப்படிச் சொன்னார். நான் எனது 04 பிள்ளளைகளை யுத்தத்திற்கு பலி கொடுத்து விட்டு நிற்கின்றேன் என்றார். இது ஒரு உதாரணமே. வடக்கு கிழக்கு மக்களின் ஒட்டு மொத்த நிலையே இந்த தாயினது போன்றது தான்.
வட்டிக்காரனுக்காக கட்டிய மத்தள விமான நிலையத்தின் மாத வருமானம் 16000 ரூபா
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 July 2014
- Hits: 2501
"மத்தளை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தின் மே மாதத்திற்கான மொத்த வருமானம் அண்ணளவாக 16000 ரூபா என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியன்கர ஜயரட்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்."
வட்டிக்கு காசு கொடுகின்றவன் தன் காசை கொடுத்து வட்டி வாங்க கட்டுவித்த விமான நிலையத்தின் கதி இதுவென்றால், வட்டியை கட்டுவதோ மக்கள். மக்களின் உழைப்பையும், சொத்தையும் புடுங்கிதான் கொடுக்கின்றனர். இந்த மாமாத் தனத்தைத்தான் அரசாங்கம் செய்து வருகின்றது. மே மாத வருமானமான 16000 ரூபா மூலம் இதை ஒரு நாளும் கொடுக்க முடியாது.
யூலை நினைவையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 July 2014
- Hits: 2572
"இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஈழத் தமிழர் தேசம் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது!" என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக விசுவநாதன் ருத்ரகுமாரன் கூறுகின்றார். சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் மனிதர்கள் வாழ முடியாது என்ற உண்மை, சிங்கள மக்களுடன் வாழ்வதற்கு தடையானதல்ல. இந்த உண்மையை இவர்கள் முன்வைக்க தயாராகவில்லை.
கொழும்பு (பொரல்ல), காலி, பண்டாரவளை, யட்டியாந்தோட்ட(கேகாலை), நாவலப்பிட்டிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் சமவுரிமை இயக்கத்தால் கையெழுத்து இடும் போராட்டம் இடம் பெற்றுள்ளது
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 23 July 2014
- Hits: 1380
தமிழர்களுக்கு எதிராக ஜே.ஆரின் இனவாத அரசின் கீழ் 1983 இல் இடம்பெற்ற யூலை வன்முறைகளின் 31 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று மீண்டும் ஒரு கறுப்பு யூலை வேண்டாம் என்ற தலைப்பில் கொழும்பு (பொரல்ல), காலி, பண்டாரவளை, யட்டியாந்தோட்ட(கேகாலை), நாவலப்பிட்டிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் சமவுரிமை இயக்கத்தால் கையெழுத்து இடும் போராட்டம் இடம் பெற்றுள்ளது.
அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளை வைத்து சூதாடும் இந்தியா
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 July 2014
- Hits: 2639
வெள்ளை நிற-இன வெறிக் கொள்கையை அமுல்படுத்த முனையும் அவுஸ்திரேலியாவானது, இலங்கை - இந்தியாவுடன் கூட்டுக் கொள்கையை முன்னெடுக்கின்றது. அண்மையில் சர்வதேசக் கடலில் வைத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவால் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளின் ஒரு பகுதியை இலங்கைக்கு நாடு கடத்தியவர்கள், மிகுதிப் பேரை இந்தியாவுக்கு நாடுகடத்தும் கூட்டுச் சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன,மத,குல வாதத்திற்கெதிரான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வட இலங்கை முக்கியஸ்தர் ஏ.எம்.சி.இக்பால் ஆற்றிய உரை!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 22 July 2014
- Hits: 1273
சமஉரிமை இயக்கத்தினர் இம்மாதம் 15ஆம் திகதி கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடாத்திய இனவாதத்திற்க்கும், மதவாதத்திற்கும், குலவாதத்திற்கும் எதிரான நாங்கள் மனிதர்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வட இலங்கை முக்கியஸ்தர் ஏ.எம்.சி.இக்பால் ஆற்றிய உரை!
ஜூன் 15 ஆம் திகதி பேருவளை, தர்காநகர், அளுத்கம, வெளிப்பனை போன்ற இடங்களில் பரம்பரை பரம்பரையாக வாழும் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டும் அவர்களது வீடுகளும் கடைகளும் கொள்ளையிடப்பட்டு எரியூட்டப்பட்டது. மூன்று பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதுடன் நான்கு பேர் கொல்லப்பட்டுள்னர். சிறிய எண்ணிக்கையான அங்கத்தவர்களை கொண்ட பொதுபல சேனாவினர் மிகப்பெரிய கலவரத்தை பேருவளை பிரதேசத்தில் நடாத்தியுள்ளனர். L.T.T.E இயக்கத்தை தோற்கடித்த இந்த அரசுக்கோ, முப்டைகளுக்கோ அஞ்சாமல் இந்த வன்முறையை அரங்கேற்றிள்ளனர். இந்த வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்யவோ தடுத்துவைக்கவோ இல்லை. அரசும், அரசபடைகளும் பொதுபலசேனா என்ற இயக்கத்துக்கு அஞ்சுகிறார்கள் போலும். இதுபெரும் ஆச்சரியத்துக்குரிய விடயமாகும்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்கின்றார் மாவை சேனாதிராசா
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 July 2014
- Hits: 2475
தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற அரசியல் தீர்வைப் பெற நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கூறுகின்றார். அவரிடம் இரண்டு கேள்விகள்.
220 கிலோ தங்கம் எங்கே என்று கேட்கின்றார் சரத் பொன்சேகா
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 July 2014
- Hits: 2800
யுத்தம் நடந்த காலத்தில் வங்கி ஒன்றில் இருந்து 220 கிலோ தங்க நகைகள் எடுக்கப்பட்டதாகவும், அதை அரசிடம் ஒப்படைத்ததாகவும் கூறும் சரத்பொன்சேகா, இது எங்கே என்று கேட்கின்றார். சட்டப்படியாக மக்களால் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைளைப் பற்றியவை.
இந்த தங்கத்தை யுத்தப் பின்புலத்தில் உருவான திடீர் பணக்கார கும்பலிடமும், அரசாங்கத்தின் அதிகாரத்தை பங்கு போட்டுள்ளவர்களின் பொக்கற்றுக்குள் தேட வேண்டும்.
அமிர்தலிங்கம் குலரத்தினம் அவர்களிற்கான அஞ்சலி: உரை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 July 2014
- Hits: 2550
அனைவருக்கும் வணக்கம். அமிர்தலிங்கம் குலரத்தினம் அவர்களது இறுதி நிகழ்விற்காக கூடியிருக்கிறோம். இது அவரின் உடலிற்கான இறுதி நிகழ்வு மட்டுமே. அவரின் பெளதிக தோற்றத்திற்கான பிரியாவிடை மட்டுமே. ஆனால் அவர் தனது சமத்துவ, பொதுவுடமை, சாதி மறுப்பு கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொடுத்து சென்றதன் மூலம் வாழ்கிறார். அவரதும்,அவர் போன்ற ஆயிரம் ஆயிரம் தோழர்களினதும் போராட்டங்கள் நமது சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களில் வாழ்கிறார்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் மிகுந்த அந்தக் காலத்தில் அவர் தனது தங்கையாரை, தான் பங்கு கொண்ட எல்லா போராட்டங்களிலும் கலந்து கொள்ள வைத்தார். மற்றவர்களை போராடச் சொல்ல முதல் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் முதலில் பங்கு கொள்ள வேண்டும் என்ற உறுதி அவரிடம் இருந்தது.