கூட்டமைப்புக்கு வந்துள்ள ஞானோதயம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 14 June 2014
- Hits: 2173
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கூட்டமைப்பின் பிறேமச்சந்திரன் மக்களிடம் அபிப்பிராயம் கேட்கும் படலத்திற்கு சென்றுள்ளார். இதை தமிழ் தேசிய அரசியல் இயலாமையின் பாற்பட்ட நிகழ்வாக கொள்ளலாம்.
நாங்கள் சொல்வதை நீங்கள் (மக்கள்) செய்யுங்கள் உங்களுக்கானவற்றை நாங்கள் செய்வோம். இதுவே தமிழ் தேசிய அரசியலின் கடந்தகால வரலாறு. பாராளுமன்ற அரசியலானாலும் சரி தமிழீழப்போராட்ட அரசியல் ஆனாலம் சரி தமிழ் மக்கள் பார்வையாளர்களாகவே வைக்கப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதியில் ராமன் குதித்த திருட்டு வரலாறு!: நூல் அறிமுகம்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 13 June 2014
- Hits: 3494
வரலாற்றில் பல்வேறு சமூக காரணங்களால் தோற்றுவிக்கப்படும் பாரதூரமான முரண்பாடுகளை, குறிப்பிட்ட சமூகம் தீர்க்காத வரையில் அது ஆறாத வடுவாக மட்டுமல்ல உடலுக்கு கேடு விளைவிக்கும் ஆழமான புண்ணாகவும் அழுகிக் கொண்டிருக்கும்.
சுவாரஸ்யத்தை படைப்பதான முகாந்திரத்தில், திட்டமிட்டே அரசியல் நீக்கம் பெற்ற அல்லது மக்களுக்கு எதிரான அரசியலின் எழுத்துக்களால் மக்களை பாதிக்கும் சமூக பிரச்சினைகளை ஒருக்காலும் உள்ளன்போடு தொட முடிந்ததில்லை. மார்க்சிய/ சமூகவியல் ஆய்வு நூல்களே அந்த பணியை நிறைவு செய்து வருகின்றன.
கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா ஆகிய இரு பத்திரிக்கையாளர்களின் பெருமுயற்சியில் வெளிவந்துள்ள ‘அயோத்தி: இருண்ட இரவு’ என்ற நூல் இந்த உண்மையை உணர்த்தும் உரைகல் எனலாம். பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறை சரியாகச் சொன்னால் சதியை, ஒரு புனைவுக்குரிய நீரோட்டத்துடன் நமக்கு உரைக்கும் அதே நேரத்தில் அதோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், மனிதர்களையும் அரசியல் துணிவோடு அடையாளம் காட்டுகிறது.
மலையகத்தில் பொருளாதார ஒடுக்குமுறையும் அரசியல் பாதையும்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 11 June 2014
- Hits: 3229
இலங்கை உற்பத்தியை மையமாகக் கொண்ட பெருளாதாரத்தைக் கொண்ட நாடல்ல. மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் முறையே 11.1%, 30.4% வீத பங்கைக் கொண்டிருக்கும் அதேநேரம் சேவைத் துறையோ 58.5% பங்கைக் கொண்டிருக்கின்றது. இது சேவைத்துறை இலங்கையின் பொருளாதாரத்தின் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதோடு, உற்பத்தியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது. விவசாய உற்பத்தியில் ஏற்றுமதி பயிர்களான தேயிலையும் இறப்பரும் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 2 வீத பங்களிப்பினை வழங்குகின்றன. இதில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பங்கு, இன்று சிறு தோட்டங்கள் பெருகிவருகின்ற போதும், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும். சிறு தோட்டங்கள் வளர்ச்சியை காரணம் காட்டி பெருந்தோட்டங்களின் உற்பத்தி குறைந்துள்ளது என்ற வாதங்கள் கடந்த பத்தாண்டுகளில் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. உண்மையில் பெருந்தோட்டங்களில் உற்பத்தி அதிகரித்தே வந்துள்ளது. பெருந்தோட்ட உற்பத்தியை அளவை சிறுருந்தோட்ட உற்பத்தி அளவுடன் ஒப்பிட்டு அதனை அடிப்படையாக கொண்டு பெருந்தோட்டங்களில் உற்பத்தி குறைந்துள்ளது என்பது பிழையான அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் வாதமாகும்.
மக்கள் போராட்டங்களுடன் இணைந்து மாணவரின் நடைப்பயணமும் பேரணியும் ஆரம்பமாகியது! (படங்கள்)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 June 2014
- Hits: 2322
“புதிய தாராளமய முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கு முரணான நிருவாகிகளுக்கும் எதிராக மாணவர்களும் மக்களும் ஒன்றிணைத்தல்“ எனும் கருப்பொருளில் இன்று (10 ஜூன் 2014) மாபெரும் நடைப்பயணம் மற்றும் பேரணியும் ஆரம்பமாகியது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கிராமங்களிலுள்ள சாமான்ய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படும் இந்த நடைப்பயணமானது இன்று (10.06.2014) பிற்பகல் 3 மணியளவில் கொழும்பிலுள்ள ஹயர் மைதானத்தில் ஏற்பாடு செய்யபட்ட பேரணியுடனும், போராட்ட முழக்கங்களுடனும் ஆரம்பமாகியது. ஹயர் மைதானத்தில் ஏற்பாடு செய்யபட்ட ஆரம்ப நிகழவில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், உழைப்பாளர் சங்கங்கள் மற்றும் ஒடுக்கப்பட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். உரைகள் இரு மொழிகளிலும் அமைந்துடன், போராட்ட கோசங்கள் மும்மொழிகளிலும் முழக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதைகளைத் தாங்கிய வண்ணம் பல்லாயிரம் மாணவர்களும், உழைப்பாளர்களும், தலைவர்களும் நடைபயணத்தின் ஆரம்பத்தில் இணைந்து கொண்டனர்.
மாணவர்களும் மக்களும் ஒன்றிணைத்தல்: நடைப்பயணம் மற்றும் பேரணி...
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 June 2014
- Hits: 2330
“புதிய தாராளமய முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கு முரணான நிருவாகிகளுக்கும் எதிராக மாணவர்களும் மக்களும் ஒன்றிணைத்தல்“ எனும் கருப்பொருளில் ஜூன் 10 ஆம் திகதியன்று மாபெரும் நடை பயணம் மற்றும் பேரணி ஆனது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
என்னது, விமர்சனமா!! எடடா துவக்கை!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 08 June 2014
- Hits: 5416
தமிழ்க்கவி புலிகளின் மீது விமர்சனம் வைத்ததும் நெற்றிக்கண்ணை காட்டினும் குற்றம், குற்றமே என்று வாழும் கவியரசுகள், கொள்கை ஒன்றுக்காகவே பேனா பிடித்திருக்கும் பத்திரிகை ஆசிரிய திலகங்கள் எல்லாம் பொங்கி எழுந்தன. இதை எல்லாம் புலிகளில் இருந்த காலத்தில் சொல்லியிருக்கலாமே என்று அவரைக் குற்றம் சாட்டுகின்றன. அவர் வைத்த விமர்சனங்களிற்கு அவர்களிடம் மறுமொழி இல்லை. தமிழ்க்கவியை குற்றம் சாட்டுவதன் மூலம் அவரின் விமர்சனங்களை பொய்யாக்க முனைகிறார்கள்.
தமிழ்க்கவி அரச ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இந்த விமர்சனங்களை வைக்கிறார் என்று சொல்வதன் மூலம் அவரின் விமர்சனங்களை பொய்யாக்க முயலுகின்றனர். அவர் என்ன நிலைப்பாட்டில் இருந்து சொன்னாலும் அவர் வைத்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் எதுவும் புதியன அல்ல. மக்களைப் பணயக்கைதிகளாக வைத்திருந்தது, பிள்ளைகளை கடத்தியது என்ற அராஜகங்களை அவரும் பதிவு செய்கிறார். அதற்கு இவர்களால் என்ன மறுமொழி சொல்ல முடியும். மனச்சாட்சி என்ற ஒன்று இந்த பிழைப்புவாதிகளிற்கு இருக்குமாயின் குறைந்தபட்சம் மெளனமாகவேனும் இருந்திருப்பார்கள். இவர்கள் தான் வியாபாரிகள் ஆச்சே. நேர்மை, மனச்சாட்சி என்றால் என்ன விலை என்று கேட்கிறார்கள்?
ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளுக்கும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களுக்கும் துக்கம் தரும் இழப்பு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 June 2014
- Hits: 2434
இலங்கையின் அரசியல் களத்தில் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் குரலாயும், இடதுசாரி ஆதரவு நிலைப்பாட்டாளராகவும் இருந்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.பண்டாரநாயக்கா கடந்த 03.06.2014 அன்று தனது 98ஆவது வயதில் இயற்கை எய்தினார். அவரது இழப்பு இலங்கையின் ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளுக்கும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களுக்கும் துக்கம் தரும் இழப்பாகும்.
ஊமைகளாக அடிபணிவோமா? ஒன்று சேர்ந்து எதிர்ப்போமா?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 06 June 2014
- Hits: 2553
விவசாயத் தாய்மாரே! தந்தையரே! தோழரே! தோழியரே!
நாட்டு மக்களின் பட்டினியை போக்குவது நாங்கள். சேற்றை கழுவிக் கொண்டால் அரசாள்வதற்கும் தகுதியானவர்கள் என்று கூறப்படுகிறது. அது கூட ஒருவகையில் ஏமாற்றுதான். எது எப்படியிருந்தாலும், விவசாயிக்கு இன்று என்ன நடந்திருக்கிறது? விவசாயத்திற்கு என்ன நடந்திருக்கிறது? விவசாயி அரசுகட்டில் ஏறியிருக்கிறாரா? கேவலமாகிவிட்டாரா?
விவசாயியை பொறுத்தவரை இன்றுள்ள பிரச்சினை தண்ணீர் வழங்காமைதான். குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. ஆனால் வயலில் பாதியை விதைப்பதற்காக மட்டுமே நீர் வழங்கப்படுகிறது. அது ஏன்?
மக்கள் போராட்டங்களுடன் இணையும் மாணவரின் உரிமைகளுக்கான போராட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 06 June 2014
- Hits: 2288
வடக்கு - கிழக்கு மாணவர்களின் உரிமைகள், கல்வியைத் தனியார் மயப்படுதல், "சர்வதேச மயமாக்கல்" என்ற போர்வையில் கல்வியின் தரம் குறைக்கப்படுதல், மாணவ - மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களைக் கடத்துதல், கொலை செய்தல், அவதூறான வழக்குகளை தொடுத்தல், அவர்களில் கல்வி உரிமைகளைப் பறித்தல் போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு பல மாதங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
மாங்கொட்டையை நட்டு மறியலுக்கு போக வேண்டுமோ..?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 9
- Created: 05 June 2014
- Hits: 1329
"வர்த்தக அமைப்பின் பரிந்துரைகள் என்ற பெயரில் முழு உலகத்தையும் அழிப்பதற்காக இராட்சதன் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறான்"
ஒரு கவிஞன் கூறியதைப் போன்று எமது ஊர், தோட்டம், துரவுகள் மிகவும் செழிப்பானவை. அவற்றில் எதைப் போட்டாலும் துளிர்விட்டு வளரும். சிறுவர்கள் மத்தியில் பிரபலமான ஒரு சிங்களப்பாடல் இருக்கிறது. 'மொனவத முத்தே" (என்ன தாத்தா) என்று. வருங்கால சந்ததியினருக்காக மரம் வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் அந்தப் பாடலின் மூலம் உணர்த்தப்படுகிறது.
நாம் சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையையும் விதைக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் சட்டத்தின் மூலம் மாங்கொட்டை, பலாக்கொட்டை, அந்த விதை, இந்த விதை என்று கூறி எவற்றையாவது விதைகளாக பயன்படுத்துவது சிறை செல்வதற்கான பாதையாக அமையலாம். '2013 விதைகள் மற்றும் நடுகைப் பொருள் சட்டமூலம்" என்ற பெயரிலான புதிய சட்டத்தின் மூலம், தற்போது அமுலிலிருக்கும் '2003ன் 22ம் இலக்க விதைகள் சட்டமூலம் இரத்துச் செய்யப்பட்டு புதிய சட்டம் அமுலுக்கு வரவிருக்கின்றது.