மோடி ஆட்சிக்கு வந்த பின்பும், தொடரும் இந்திய மீனவர்களின் கைதுகள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 12 July 2014
- Hits: 2230
மகிந்த அரசை எதிர்க்கின்றவர்கள், மீனவர்கள் கைதுகளை சட்டவிரோதமானதாகக் காட்டுகின்றனர். இதைத் தடுக்க மோடி அரசு வக்கற்றுள்ளதாக கூறி, மோடி அரசை இதன் மூலம் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.
இந்திய இனவாதிகள் முதல் இடதுசாரிகள் வரை, மீனவர் விடையத்தில் முரணற்ற வகையில் இதையே செய்தியாகவும், அரசியலாகவும் முன்வைக்கின்றனர். இலங்கைத் தமிழினவாதிகளும் இதையே தங்கள் கொள்கையாக கொள்கின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு அன்றாடச் செய்திகளையும், ஆக்கங்களையும், அரசியலையும் முனனெடுக்கின்றனர்.
வெறிகொண்ட தீவிரவாதத்தால் அழிவுறும் மக்கள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 July 2014
- Hits: 2194
இன்றைய உலகமயமாதலில் உலகின் மக்கள் ஏதாவதொரு தேசியப் பிரச்சினைக்குள் சிக்காமல் இல்லை. நம் நாட்டு மக்களும் வெறி கொண்ட சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் தீவிர வாதத்திற்குள் சிக்கித் தவிக்கின்றனர். இதை முஸ்லீம் மக்களுக்கு எதிரான கடந்த ஒருவார கால இன வெறிக் கோரத் தாண்டவத்தின் அகோரத்திற்கு ஊடாக கண்டுகொண்டோம். இந் நிகழ்வுகள்..,
மகிந்த சிந்தனையில் அமைந்த ஒலுவில் துறைமுகம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 July 2014
- Hits: 2360
டென்மார்க் வழங்கிய வட்டிக் கடனில் கட்டப்பட்ட ஒலுவில் துறைமுகத்துக்கு, இன்று வரை ஒரு கப்பல் கூட வரவில்லை. இப்படி வாங்கிய 678 கோடி (6780 மில்லியன்) ரூபா கடனுக்கு வட்டி கட்டும் அரசு, அதை பத்து வருடத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
மலையக மக்களின் கலந்துரையாடலில் பொது உன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 July 2014
- Hits: 2202
கடந்த 06.07.2014 அன்று மக்கள் தொழிலாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில் ஹட்டனில் இடம்பெற்ற மலையக மக்களின் காணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கோரிக்கைகள், பொது வேலைத்திட்டம் மற்றும் பொது அமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் மற்றும்; ஆர்வலர்களிடையே ஒரு பொது இணக்கப்பாட்டை காண்பதற்கான கலந்துரையாடலிலே மலையக மக்கள் தனி வீடு அமைத்துக் கொள்ள காணித்துண்டுகள் உரித்துடனும் சுய தொழில், விவசாயத்திற்கான காணியும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டது.
பலஸ்தீனத்தின் மேலான தாக்குதலை உடன் நிறுத்து!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 July 2014
- Hits: 2577
பலஸ்தீனத்தின் மேலான இஸ்ரேலின் தாக்குதல்கள் பல அப்பாவி பொதுமக்களை பலிகொண்டுள்ளது. காசாப்பகுதி மீதான இஸ்ரேலியப் விமானப்படைகளின் மிகவும் தீவிரமான குண்டுதாக்குதல்களினால் குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி கண்மூடித்தனமாக தாக்கியழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 80 பலஸ்தீனப் பொதுமக்களும் 3 இஸ்ரேலியர்களும் தாக்குதல்கள் ஆரம்பித்த நாட்களிலிருந்து இன்று வரையான சில நாட்களுக்குள்ளாகவே பலியாகியுள்ளனர். இது வரை 500 க்கு மேற்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல்களால் காசாப்பகுதி நிலைகுலைந்து அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கேகாலை நகரில் இடம் பெற்ற கையெழுத்து போராட்டம் (படங்கள் இணைப்பு)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 10 July 2014
- Hits: 1082
இனவாதத்தை மக்களிடம் இருந்து அகற்றவும் மாற்று கலாச்சாரங்களை அங்கீகரிக்கவும் சமவுரிமை இயக்கத்தால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தில் பொதுமக்களை இணைக்கும் முன்முயற்சியே இவ் கையேழுத்து போராட்டம். இதனை பல பகுதிகளில் முன்னெடுத்து வருவதுடன் மேலும் பல பகுதிகளில் நடத்தவும் சமவுரிமை இயக்கம் திட்டமிட்டுள்ளது.
"இலங்கைக் கடலில் சீனா மீன்பிடிப்பதில்லையாம்!" மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 July 2014
- Hits: 2245
சர்வதேச கடற்பரப்பிலே தான் மீன்பிடி நடப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன கண்டு பிடித்துள்ளார். மீனை அள்ளிச் செல்லும் பன்நாட்டு மீன்பிடி ஒப்பந்தங்களைப் போடும் அரசு, அதை சர்வதேச கடலில் மீன்பிடி என்று திரித்து இலங்கை மீனவர்களின் முதுகில் குத்திவிடுகின்றனர்.
இலங்கையை மேலும் இராணுவமயமாக்கும் அவுஸ்திரேலியா
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 July 2014
- Hits: 2050
பொருளாதாரரீதியானதும், அரசியல்ரீதியானதுமான அகதிகளை உற்பத்தி செய்து கொண்டு, அந்த மக்களை கூட்டாகத் தண்டிகின்றதையே அவுஸ்திரேலியா நடவடிக்கை மூலம் காண்கின்றோம். எந்த மக்களும் தன் தாய் நிலத்தையும், சொந்த பந்தங்களையும் விட்டு, நாடு கடந்து வாழ்வதை விரும்புவது கிடையாது. மக்கள் வாழக்கூடிய நிலை வகையில் நாட்டை ஆள முடியாதவர்கள், வாழப் புறப்படும் மக்களையே குற்றவாளியாக்கி தண்டிக்கின்றனர்.
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்! இரத்தினபுரியில் கையெழுத்து வேட்டை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 06 July 2014
- Hits: 2123
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற கருப்பொருளில் சம உரிமை இயக்கத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்துவேட்டை இன்று இரத்தினபுரி அகலியகொட நகரில் இன்று நடைபெற்றது. மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
இது தொடர்பாக சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே, 1983யூலை மாதம், கடந்த 31வருடங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்ளால் செய்த மிகவும் அபகீர்த்தியான செயற்பாடு தான் இந்த கறுப்பு ஜூலை. இதன் விளைவாக பாரிய இன, மத வாதங்களால் மீண்டும் மீண்டும், அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மக்கள் இது தெடர்பான விழிப்புனர்வு மக்களுக்கு அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
பொழிப்புரை எழுதும் பெரியவாச்சான்பிள்ளைகள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 06 July 2014
- Hits: 2542
வைஸ்ணவ பிரபந்தங்களிற்கு பெரியவாச்சான்பிள்ளை, சிறியவாச்சான்பிள்ளை என்று இருவர் பொழிப்புரை எழுதினார்கள் என்று சொல்லுவார்கள். சமவுரிமை இயக்கம், முன்னிலை சோசலிசக்கட்சியின் கோசங்களிற்கு, அறிக்கைகளிற்கு இன்று சில வாச்சான்பிள்ளைகள் பொழிப்புரை எழுதுகிறார்கள். அன்றைய வாச்சான்பிள்ளைகள் பிரபந்தத்தில் என்ன சொல்லியிருந்ததோ அதை விரித்து, விளக்கமாக எழுதினார்கள். இன்றைய வாச்சான்பிள்ளைகள் சமவுரிமை இயக்கம் சொன்னதிற்கு நேரெதிராக விளக்கம் எழுதுகிறார்கள். சமவுரிமை இயக்கம் இனங்களின் ஒற்றுமைக்காக போராடும் போது இந்த வாச்சான்பிள்ளைகள், சமவுரிமை இயக்கமும் அதன் தோழமை அமைப்புக்களும் இனவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற சமவுரிமை இயக்கத்தின் முழக்கம் தரும் செய்தி என்னவாக இருக்கும். 1983 இல் நடந்த தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை இன்னொருமுறை, இனியொருமுறை வேண்டவே வேண்டாம் என்பது தான் என்றது பச்சைக்குழந்தைக்கும் விளங்கியிருக்கும். இனப்படுகொலையை வேண்டாம் என்று சொல்பவர்கள், அதற்கான கையெழுத்து போராட்டம் ஒன்றை நடத்துபவர்கள், இனப்படுகொலைக்கு எதிரானவர்கள் என்பதும் எந்தக் குழந்தைக்கும் விளங்கியிருக்கும்.