ஒஸ்லோவில் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளிற்கு அடையாள அணிவகுப்பு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 June 2014
- Hits: 3265
இலங்கையில் முஸ்லீம், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் நிறுத்தக்கோரி ஒஸ்லோ வாழ் தமிழ்பேசும் மக்கள் நடாத்தும் அடையாள அணிவகுப்பு. அடக்கு முறைகளுக்கும், வன்முறைமுறைகளுக்கும் எதிராக அணிதிரள்வோம் வாருங்கள். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
முஸ்லிம் மக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களுக்கெதிரான கண்டனம்: இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 25 June 2014
- Hits: 3230
முஸ்லிம் மக்கள் மீதான தி;ட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது பல சேன என்கின்ற அமைப்பு ஈடுபட்டு வந்திருக்கின்றது. இவ்வமைப்பானது தனது இனவாதத்தைக் கக்குகின்ற விஷம் பொதிந்த பேச்சுக்களாலும் மற்றும் பலாத்காரமான தீவிரவாத நடவடிக்கைகளாலும் முஸ்லிம் சமூகத்தை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் உச்சக் கட்டமாக கடந்த யூன் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகரில் நடைபெற்ற கலவரம் அமைந்துள்ளது.
இந்தச் சம்பவங்களிற்கு பிரதான காரணியாக செயற்படுகின்ற அமைப்பொன்றின்மீது அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், ஊடக வெளிகளில் இவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் நடந்ததென்பது தங்களிற்கு தெரியாதது போன்றும் அப்படி ஏதாவது நடந்திருந்தாலும் அவை ஒன்றும் பாரதூரமான விடயங்கள் அல்லவென்றும் தொடர்ந்து தெரிவித்தபடி இருக்கிறார்கள்.
அரசினால் புதைகுழி திறக்கப்படுகிறது!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 June 2014
- Hits: 3242
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்களை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜ.நா விசாரணை குழு தொடர்பாக பா.உ அஜித்குமார ஆற்றிய உரையின் சுருக்கம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 23 June 2014
- Hits: 3234
கௌரவ சபாநாயகர்அவர்களே!
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிராயுதபாணிகளான குடிமக்கள் கொல்ப்பட்டார்களா? இல்லையா? என்பதை கண்டறிய ஜ.நா.மனிதஉரிமை கவுன்சில் விசாரணைக் குழு நியமிக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் விவாதிப்பதற்க்காக அரசாங்கம் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருக்கிறது.
கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தொடர்ந்து கொள்ளக்கூடிய உண்மைதான் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், அபிலாசைகள் மறுதலிக்கப்டும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இவ்வாறான யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன என்பதாகும்.
அரசாங்கம் ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு தொரிவிக்கு முகமாக இந்த பிரேரணைக்கு ஆதரவு தரும்படி கேட்கிறது. ஜ.நா.வும் அவர்களுக்கு ஆதரவான பிரிவினரும் ஜனநாயகத்திற்காகவும் நியாயத்திற்காகவும் விசாரணைக்கு ஆதரவு கோரி நிற்கின்றனர். உண்மையில் இது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகரமா?
தமிழ் ஸ்டுடியோ "பிறகு: With you Without you" ஐ திரையிடுகிறது! அனைவரும் ஆதரவு கொடுங்கள்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 23 June 2014
- Hits: 3402
நாள்: 24-06-2014, செவ்வாய், 7 PM
இடம்: RKV ஸ்டுடியோஸ், வடபழனி (விஜயா மருத்துவமனை எதிரில்)
சகோதரத்துவம் வளர்க்கும் மாவில்லாறு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 June 2014
- Hits: 3351
மாவிலாற்றை வைத்து அரசியல் சூதாட்டமாடி, கிழக்கிலும் வடக்கிலும் பெருக்கெடுத்த இரத்த ஆறு, முள்ளிவாய்கால் வரை பாய்ந்தது. தெற்கில் இனவாத - மதவாத சக்திகளால் முஸ்லீம் சகோதரர்களின் இரத்தம் ஆறாய் ஓடுகையில், இப்போ மாவிலாறு இனங்களிடையேயான ஒற்றுமைக்கு வழிவகுத்துள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை ஆற்றின் நீரைத் தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.
நீர் இன்றி ஆயிக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வன்முறைகளுக்கு தீர்வுகாண சம உரிமை இயக்கத்தின் கலந்துரையாடல்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 22 June 2014
- Hits: 1303
22.06.2014 இன்று மருதானை சி.எஸ்.ஆர் கேட்போர் கூடத்தில் அண்மையில் நாட்டில் எழுச்சி பெற்றிருக்கும் இன வன்முறைக்கு பொருத்தமான தீர்வு ஒன்றை காணும் நோக்கில் சம உரிமை இயக்கத்தினால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலான புத்திஜீவிகள், பேராசிரியர்கள், சமூகபற்றாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து டென்மார்க்கில் துண்டுப்பிரசுரம்...
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 22 June 2014
- Hits: 1095
இலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மீது பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களாலும், அரசினாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனரீதியிலான வன்முறையினை கண்டித்து டென்மார்க் கொல்ஸ்ரபோ நகரிலும் அதனை அண்டிய நகர்களிலும் டென்மார்க் சம உரிமை அமைப்பினால் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
"பிறகு" - With you , without you - திரையிடலைத் தடுத்து நிறுத்திய தமிழினவாதிகள்.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 June 2014
- Hits: 3989
இப்படத்தை தமிழ் நாட்டில் வெளியிட முயற்சிகள் வெற்றியடைந்து சில காட்சிகள் சென்னையில் நடைபெற்றது. ஆனாலும் - தமிழ் இனவாத சக்திகள் இப்படத்தை சிங்களப் படம் என்று கூறி திரையிட்ட அரங்கங்களுக்கு கொலை மிரட்டல், தீ வைப்பதான மிரட்டல்கள் மூலம் திரையிடுவதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சமூக நீதிக்கான அமைப்பினர் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 June 2014
- Hits: 2241
அளுத்கம முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து வவுனியா நகரின் பிரதான பள்ளிவாசல் அருகில் கண்டன ஆர்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்டக்கிளையின் தலைவர் ந.தேவகிஸ்னன் தலைமையில் முன்னேடுத்தது. இதில் மூஸ்லீம், தமிழ் மக்கள் அணிதிரண்டிருந்தனர். மக்கள் மத்தில் புதிய ஜனநாகய மாக்சிச லெனினிச கட்சியின் வவுனியா மாவட்டக்கிளையினர் தோழர் ந.பிரதிபன் தலைமையில் முன்னின்றனர். அளுத்கம கொலை வெறித் தாக்குதல்களை கண்டித்தும் பொது பலசோனாவை தடைசெய்யக் கோரியும் ஆர்ப்பட்ட முழக்கம் இட்டனர்.