இரு போராளிகளிற்கு விடைகொடுப்போம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 06 January 2014
- Hits: 2134
இயற்கை விவசாய விழிப்புணர்வை தமிழ்மண்ணில் விதைத்த நம்மாழ்வாரும், பகுத்தறிவு இயக்கத்தின் செயல் வீரரான திருவாரூர் தங்கராசுவும் தமது மூச்சை நிறுத்திக் கொண்டார்கள். நம்மாழ்வார் இரசாயன உரங்கள் மண்ணை நாசமாக்குவதையும், அந்த உரங்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகள் நச்சுத்தன்மை அடைவதையும் விவசாயிகளிற்கும், பொதுமக்களிற்கும் எடுத்து சொல்வதில் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.
தமிழர்களை கைது செய்து இனவெறி பிரச்சாரம் செய்யும், இலங்கை அரசு
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 05 January 2014
- Hits: 3235
தமிழ்நாட்டு பத்திரிகையாளர், தமிழ் பிரபாகரனை கைது செய்து இலங்கை அரசு சொல்லும் செய்தி என்ன?. "இன்னும் புலிகளும், புலிகளின் ஆதரவாளர்களும் ஓய்ந்து விடவில்லை. ஆனால் நாங்கள் உன்னிப்பாக வேட்டைநாய்கள் போல அவதானித்துக் கொண்டிருக்கிறோம். தமிழர்களிற்காக குரல் கொடுப்பவர்களை, தமிழ் மக்களின் இனப்படுகொலை தொடர்பான சாட்சியங்களை வெளிக்கொண்டு வருபவர்களை, காணாமல் போனவர்களை தேடுபவர்களை வேட்டையாடாமல் விடமாட்டோம்". இந்தச் செய்தியை யாருக்குச் சொல்கிறார்கள்? கொல்லப்பட்டு, காயப்பட்டு இரத்தம் வடிய வடிய மரணத்துள் வாழும் இலங்கைத் தமிழர்களை பயப்படுத்த சொல்கிறார்களா? மொட்டைப் பனை மரங்களும், வரண்ட வயல் வெளிகளும் மட்டுமே மிச்சமாக பாலையாகிப் போன வாழ்வை சுமந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களை பயப்படுத்த சொல்கிறார்களா?
கொழும்பில் தமிழ் மொழி அமுலாக்கலை வலியுறுத்தும் மொழியுரிமை மாநாடு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 03 January 2014
- Hits: 2157
தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், சட்டவாக்க மொழியாகவும், நிர்வாக மொழியாகவும், நீதிமன்றமொழியாகவும் அர்த்தமுள்ள வகையில் அமுல்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்பதுடன் சமத்துவம், தனித்துவம், சுயாதீனம் என்பவற்றின் அடிப்படையில் மொழி சமத்துவம் பேணப்படுவதற்கான இலங்கை மக்களின் பண்பாட்டு புரட்சி ஏற்பட வேண்டுமெனவும், தமிழ் மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவோம் என்ற தொனிப்பொருளில் மாற்று கருத்தாடலுக்கான அமையம் கொழும்பில் 30.11.2013 அன்று நடத்திய மொழியுரிமை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
முடிந்தால் கதையுங்கள்........?
ஏதோ தெரியவில்லை நல்ல நிகழ்வுகளுக்காகவும், கெட்ட நிகழ்வுகளுக்காகவும் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு இப்ப அடிக்கடி கிடைத்து வருகின்றது. திடீரென எடுத்த முடிவின் பிரகாரம் அம்மாவின் திவசத்துக்காக போன கிழமை ஊருக்குப் போய் வரும் ஒரு பாக்கியம் கிட்டியது. ஒரு குறுகிய சில நாட்கள் தான் நின்றாலும் அங்கே என்னைத் தாக்கிய, என்னை உறுத்தி வருத்திய ஒரு விடையம் சம்பந்தமாக இதைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டே இதை எழுதுகிறேன்.
எங்கடை மக்களை ஒரு வகையிலும் நிமிரவிடாமல், ஏதோ சொல்ல முடியாத சுமைகளையும் துன்பங்களையும் கொடுத்து அவர்களை இன்னும் அடிமைகள் போல் அரசாங்கமும் சில தனியார் நிறுவனங்களும் செய்கின்ற வேலைகளையும், விசமங்களையும் கேள்விப்பட்ட போது எங்களுடைய மக்களின் அறியாத்தனங்களையும் எண்ணி கவலைப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை.
மகிந்த அரசு, புத்தாண்டிலும் மக்களிற்கு எதிராக பயணிக்க தன்னை தயாராக்குகின்றது!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 01 January 2014
- Hits: 2210
மக்கள் கடுமையான சாவல்களை எதிர் கொள்ளும் ஆண்டாகவே 2014 பிறக்கின்றது. வன்னி மக்களின் நிலத்தை பன்நாட்டு பண்ணைக்காக அபகரிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரம் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அரசு, இராணுவத்துகே அதிக நிதியையும் ஒதுக்கிகின்றது. நாட்டின் நிலங்கள் முதல் தேசிய சொத்துகள் அனைத்தும் அன்னிய கம்பனிகளுக்கு விற்கப்படுகின்றன.
தயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 28 December 2013
- Hits: 3756
கம்யுனிஸ்ட்டு கட்சி அறிக்கையை, ஆசான்கள் கார்ல் மார்க்சும், பிரடெரிக் ஏங்கெல்சும் உலக தொழிலாளர்களிற்கு தந்த மாபெரும் ஆவணத்தை, தமிழ்மண்ணின் உழைப்பாளிகளிற்கும், இடதுசாரி முற்போக்கு சக்திகளிற்குமாக முதல் தமிழ் மொழிபெயர்ப்பை பெரியார், பொதுவுடமைக்கட்சியின் சிங்காரவேலனாருடன் சேர்ந்து கொண்டு வந்தார். கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று வாழ்நாள் முழுவதும் மதங்களிற்கு எதிராக, மூடநம்பிக்கைகளிற்கு எதிராக போராடினார். பார்ப்பனக் கொடுங்கோன்மையை, மனிதர்களை சாதி பிரித்து உயர்வு, தாழ்வு கற்பிக்கும் சதியை சாடினார். "நான் பிராமணர்களது சாதி ஒடுக்குமுறை பற்றி பேசினால் சந்தோசப்படும் வேளாளர்களும், செட்டியார்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து, அவர்களை மற்ற தமிழ்சாதியினர் சமமான மனிதர்களாக மதித்து நடக்காத சாதிவெறி குறித்து பேசும் போது மெளனமாக இருக்கிறார்கள்" என்று சாதிப்படிமுறையின் கீழ் உள்ளவர்களை ஒடுக்கும் இரட்டைவேடம் போடுபவர்களை சாடினார்.
நாங்கள் ஒன்றாக குரலெழுப்புவோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 December 2013
- Hits: 2222
சுவீஸ்சில் மிகப் பெரிய நகரான சூரிச்சில் இலங்கை அரசின் ஐனநாயக விரோதப் போக்கை கண்டித்து துண்டுப்பிரசுரமும் பிரச்சாரமும்!
மார்கழி 14-12-2013 அன்று சுமார் மூன்று மணியளவில் முன்னிலை சோசலிசகட்சி தோழர்கள் தமிழ்பேசும் மக்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் ஒன்று கூடினர். லலித் மற்றும் குகனை விடுதலை செய்! கடத்தல்கள் - படுகொலைகளை எதிர்ப்போம்! என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரத்தையும் போராட்டம் பத்திரிகையையும் வினியோகித்தனர். பலர் எந்த மறுப்பும்மில்லாமல் வாங்கிப்படித்தனர். சிலர் மேலதிகமாகவும் முன்னில சோசலிச கட்சியின் தமிழ் பேசும் தோழர்களுடன் உரையாடினர்.
ஜனநாயகத்திற்கு ஆபத்தாம், எல்லோரும் ஓடி வாங்கோ!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 25 December 2013
- Hits: 3291
அண்மையில் ஒரு பத்திரிகையின் பிரதிகள் லண்டனின் சில பகுதிகளில் ஒரு நிறுவனத்தால் தூக்கிச் செல்லப்பட்டனவாம். குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் இலங்கை அரசுடனான வியாபாரத் தொடர்புகளை அந்த பத்திரிகை விமர்சித்ததாம். அதனால் தான் அவர்கள் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்திலே கத்தியை வைத்ததாக அந்த பத்திரிகை கண்ணீர் விட்டு கதறுகிறது. முதலாளித்துவத்திற்கும், தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்போருக்கும் எதிராக போர் தொடுத்த அந்தப் பத்திரிகைக்கு நடந்த அராஜகத்தை, ஜனநாயக மறுப்பை கண்டு சில இணையங்கள், சில கருத்து கந்தசாமிகள் பொங்கியெழுந்து அறிக்கை அணுகுண்டுகளை வீசித் தள்ளியிருக்கிறார்கள்.
மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வன்னி மக்களின் நிலத்தை அபகரிக்கும் கோத்தபாய ராஜபக்சவின் திட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 25 December 2013
- Hits: 2219
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பத்தரமுல்லை தியத்த உயன பூங்காவில் “புத்தி பிரபோதினி” எனும் புகைப்படக் கண்காட்சியை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, 10.12.2013 அன்று திறந்துவைத்தார்.
அதில் கிளிநொச்சி விட்டுத்திட்டத்துக்கான காட்சிப் படம், வன்னி மக்களை அவர்களின் சொந்த மண் மற்றும் அது சார்ந்த உழைப்பில் இருந்து அகற்றுவதை எடுத்துக் காட்டியது. (பார்க்க படத்தை) 200 வருடமாக லயன் கம்பரங்களில் மலையக மக்கள் வாழந்த படி, எப்படி தோட்டக் கூலிகளாக வாழ்கின்றனரோ அதை வன்னியில் உருவாக்க முனைகின்றனர்.
சிறுநீரக நோய்த்தாக்கம் வெளிவரும் அதிர்ச்சிகள்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
- Created: 24 December 2013
- Hits: 1518
சூழலில் பெருகிவரும் நச்சுப்பதார்த்தங்கள் இடம்பெயரும் விவசாயிகள்!
வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தில் பரவலாக சிறுநீரக நோய் பரவி வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, இந்நோய் தற்போது வவுனியா, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பெரிய சமூக பிரச்சினையாக உருவெடுத்து மெல்ல மெல்ல முழுநாட்டையும் ஆக்கிரமிக்கும் சமூக அவலமான சிறுநீரக நோய் தொடர்பாக தெளிவான அரசியல் ஆய்வுடன் இதற்கு எதிராக மக்களைத்திரட்ட வேண்டியது இடதுசாரிகளின் கடமையாகும். அதற்கான முதற்படி கலந்துரையாடலே ஆகும்.