அரச படையால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை விடுவிக்க மனித உரிமைகள் தினத்தில் போராட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 December 2013
- Hits: 2312
சர்வதேச மனித உரிமை தினமான எதிர்வரும் 10ம் திகதி, அரச படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்ட லலித், குகன் மற்றும் ஊடகவியளாலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வன்னி யுத்தத்தின் போது சரணடைந்து இன்று வரை என்ன நிகழ்ந்தது என அறிய முடியாதுள்ளவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரி பாரிய போராட்டம் ஒன்றிற்கு சகல இடதுசாரி கட்சிகளையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் பங்கேற்குமாறு, முன்னணி சோசலிச கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
நெல்சன் மண்டேலா: உன்னதமான மனிதன், தோற்றுப்போன புரட்சியாளன்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 07 December 2013
- Hits: 3285
சிறைச்சாலையால் எங்களது உறுதியை, அர்ப்பணிப்பை முறியடிக்க முடியாது. மாறாக இறுதிவெற்றி அடையும் வரை போராடுபவர்களாக எம்மை மாற்றுகிறது. இருபத்தேழு வருடங்களை தனிமைச்சிறையில் கொடும் சித்திரவதைகளை எதிர்கொண்ட மனிதனின் எழுச்சிவரிகள் இவை. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இராணுவப்பிரிவினது தலைவராக சிறை சென்றவர், சிறை மீண்டு தென்னாபிரிக்க குடியரசின் ஜனாதிபதியானார். நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்ட போது தென்னாபிரிக்காவில் இருந்த நிலைமைகள் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பின்பு மாறியுள்ளனவா?
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஜரோப்பாவில் சமஉரிமை இயக்கத்தின் கூட்டங்கள், கலந்துரையாடல்கள்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 06 December 2013
- Hits: 807
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சமஉரிமை இயக்கம், ஜரோப்பாவில் கூட்டங்கள் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்துள்ளது.
டென்மார்க்கில் எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை கோல்ஸ்ரபரோ நகரில் பொதுக்கூட்டம் கலந்துரையாடலுடன் இலங்கையர்களின் ஒன்று கூடல் நிகழவிருக்கின்றது.
சமவுரிமை அரசின் கொள்கையா!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 05 December 2013
- Hits: 2865
சமவுரிமைக்கான போராட்டத்தை அரசின் கொள்கை என்று கூறுகின்றவர்கள், சமவுரிமையை மக்களுக்கு மறுக்கின்றவராக இருக்கின்றனர். இதுதானே எதார்த்தம்.
இன்று இனங்களுக்கும் மதங்களுக்கும் சமவுரியை மறுக்கின்றதன் விளைவு தான், இன முரண்பாடுகள் மற்றும் மத முரண்பாடுகள். அரசின் இந்தக் கொள்கையை எதிர்த்துப் போராடாதவர்கள், அரசின் இந்தக் கொள்கைக்கு தொடர்ந்தும் உதவுபவராக இருக்கின்றனர். சமவுரிமையைக் கோருவது, இனப்பிரச்சனையில் அரசின் அதே கொள்கையே என்று கூறுகின்ற அரசியல் கேலிக் கூத்துகள் மூலம், உண்மையில் சமவுரிமையை மறுக்கின்றனர். சமவுரிமையைக் கோருவது தவறு என்றும், சமவுரிமையை முன்வைக்கின்றவர்களின் கொள்கை, அதை மறுக்கின்றவர்களின் கொள்கைக்கும் வேறுபாடுகள் இல்லை என்றும் காட்டுகின்ற அரசியல் இன்று எதுவாக இருக்க முடியும்? இதைத் தெரிந்து கொள்வதன் மூலம் சமவுரிமைக்காக போராடுவதின் அரசியல் முக்கியத்துவதை புரிந்து கொள்ள முடியும்.
தோழர் மணியம் அவர்களின் 24 ம் ஆண்டு நினைவு நிகழ்வு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 04 December 2013
- Hits: 2113
தோழர் மணியம் அவர்களின் நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கட்சி பணிமனையில் வடபிராந்தியச் செயலாளர் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சமகாலச் சூழலில் பொதுவுடமை இயக்கத்தின் தேவையும் அவசியமும் என்ற தலைப்பில் தோழர் அ.சீவரத்தினமும் வெகுஜன இயங்கு தளங்களில் வேலைகளை முன்னெடுத்தல் என்ற தலைப்பில் தோழர் த. பிரகாஸ் அவர்களும் உரையாற்றினர்.
மாவீரர் யாரோ என்றால்...! (சிறுகதை)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 04 December 2013
- Hits: 2469
கார்த்திகை இருபத்தி ஏழு. வேலையிலிருந்து அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு அறக்கப் பறக்க வீட்டிற்கு வந்து குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு மீண்டும் மாவீரர்தின விழா நடக்கும் மண்டபத்தை நோக்கி காரில் பறந்துகொண்டிருந்தேன். என் மனத்திரையில் மாவீரர்களாகிவிட்ட உறவுகளினதும் நண்பர்களினதும் தெரிந்தவர்களினதும் முகங்களே படங்களாய் ஓடிக்கொண்டிருந்தன. என் இதயம் பாராங்கல்லாய் கனத்துக் கிடந்தது. நீண்டதொரு பெருமூச்சு என்னிடமிருந்து வெளியேறிக் கொண்ட போது நான் மண்டபத்தை அடைந்திருந்தேன்.
மாவீரர்களின் நினைவுகளால் சூடேறியிருந்த என் உடலை வெளியே அடித்துக் கொண்டிருந்த சினோவும், காற்றும், கடும் குளிரும் என்னைத் தாக்கியதாக நான் உணரவில்லை. காரை நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு மண்டப வாசலை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். மண்டப வாசலை அண்மித்துக் கொண்டிருந்தபோது கார் ஒன்று வந்து ஒரு வயோதிப தம்பதியினை இறக்கிவிட்டு குளிரில் உறைந்த காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக பறந்து சென்றது. ஆனால், அந்த வயதான இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி, ஒரு அடி கூட நகர முடியாமல் பனியில் உறைந்த தரையை பயத்துடன் பார்த்தபடியே நின்றார்கள்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! (Photos)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 02 December 2013
- Hits: 2128
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்றைய தினம், பல்கலைக்கழகத்தின் உள்வளாகத்தில் எதிர்பார்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.ஏனைய பல்கலைக்கழக மாணவர்களை விட,யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரம் நீண்ட நாட்களாக விடுமுறை விடுத்தமை,மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடைமுறைப்படுத்தாமை ஆகியவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கராச்சாரி கொலை செய்தால் குற்றமில்லை!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 30 November 2013
- Hits: 3428
காஞ்சி காமகோடி ஜெயேந்திரனை, சங்கரராமன் வழக்கில் இருந்து போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். சங்கரராமன் பெரிய, சின்ன சங்கராச்சாரிகளின் ஊழல்களையும், பாலியல் முறைகேடுகளையும் எதிர்த்து வந்தவர். அதனால் ஆத்திரமடைந்த ஜெயேந்திரன் கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக அடியாட்கள், அடியாட்களை ஒழுங்கு செய்த ரவி சுப்பிரமணியம் எல்லாம் சாட்சி சொல்லியிருந்தனர். இந்த வழக்கில் நீதிபதியாக இருந்த ராமசாமி என்பவருடன் சங்கராச்சாரியும், ஒரு பெண்ணும் பணம் தருவதாக பேரம் பேசிய உரையாடலின் ஒலிப்பதிவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ராமசாமி இந்த வழக்கிலிருந்து மாற்றப்பட்டார். அப்படி இருந்தும் ஜெயேந்திரனிற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.
இது வர்க்கரீதியாக அனைத்து உழைக்கும் மக்களையும் இன ரீதியாக சிறுபான்மை மக்களையும் ஒடுக்கும் வரவுசெலவுத் திட்டம்.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 November 2013
- Hits: 2015
இந்த வருடத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் அன்றாடப் பாவனைப் பொருட்களினதும் மீதான தொடர்ந்த விலை உயர்வுகளாலும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புகளாலும் நாட்டு மக்கள் அனைவரும் கடுமையான நெருக்கடிகளையும் பாதிப்புக்களையும் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆண்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் ஒன்பதாவது வரவு செலவுத் திட்டமானது அன்றாடம் அவதியுற்று வரும் உழைக்கும் மக்களுக்கு எவ்வகையிலும் நிவாரணங்களையோ ஆறுதலையோ தரவில்லை. அதேவேளை பெரும் முதலாளிகள் முதலீட்டாளர்கள் அந்நிய பல்தேசிய பெருவணிக நிறுவனங்களுக்கும் சூதாடிகள் குறுக்குவழிச் சம்பாத்தியம் தேடுவோருக்கும் சாதகமான வழிகளையே இவ்வரவு செலவுத் திட்டம் திறந்து வைத்துள்ளது.
போராளிகளும் கனவான அவர்களின் இலட்சியங்களும்..!
நாம் ஒவ்வொரு முடிவெடுக்கும் போதும் சுயஅறிவு எமக்குள் மேலோங்கி நிற்க வேண்டும். நாம் குறுகிய சிந்தனைக்குள் நின்று கொண்டு, எதையும் ஆழ்ந்து நோக்காமல் இன்னொருவரின் தவறான வழிகாட்டலை இனங்காண முடியாது அதை ஏற்றுப் பின் நடந்தால், அது எம்மையும் எம்மை நம்பியவர்களையும் அழிவிற்கே கொண்டு செல்லும். இன்னொருவரின் அறிவு மட்டத்தினை, தவறான கருத்துக்களையோ செயற்பாட்டினையோ நாம் வெறும் விசுவாசத்திலும் உணர்ச்சியிலும் ஏற்றுக் கொண்டால், எமது அழிவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். நாம் விரும்பும் மனிதர் உண்மையாவராவோ திறைமையானவராகவோ இருக்கலாம், ஆனால் அவர் எடுக்கும் முடிவும் பாதையும் தவறாகிவிட்டால் அனைத்துமே தவறாகிவிடும்.