"சமவுரிமை இயக்கம்" இன்றைய காலத்தின் தேவை! பாரிஸ் கூட்டத்தில் மனோ.
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 23 December 2013
- Hits: 936
இனவாதச் சேற்றுக்குள் மூழ்கியுள்ள சமகால இலங்கை அரசியல் சூழ்நிலையில் அதைக் களைந்தெறிய முற்பட்டுள்ள சமவுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்வாறு 22-12-ல் பாரிஸில் நடைபெற்ற சமவுரிமை இயக்க நிகழவில் கலந்து கொண்டு பேசிய "ஓசை" மனோ குறிப்பிடட்டுள்ளார். இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர், தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகள் பற்றி அமெரிக்க மேற்குலக நாடுகள் உட்பட ஏனைய சர்வதேசத்திடமும் சொல்லியுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் நலன்களுக்காவே தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசி நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆனால் தமிழ் சமூகமும் அதன் தலைமையும் இதுவரை சொல்லாத இடம் சாதாரண சிங்கள மக்களிடம் மட்டுமேயாகும். அம்மக்களின் ஏகப்பெரும்பான்மையோருக்கு தமிழ் மக்கள பிரச்சினைகள் பற்றி சரிவரத் தெரியாது. இவைகளை சரிவர அம்மக்களுக்கு எட்டப்பட வைப்பின் அவர்களே இலங்கையின் சகல இனவாதங்களையும் முறியடிப்பர் எனக்குறிபிட்டார்.
தலித்து - விளிம்பென பேரைச் சூட்ட, யாருங்க நீங்க..!?
இந்துவாய் பிறத்தலே தர்மம் என்கிறாய்
இஸ்லாத்தில் சேர்தலே நட்பு என்கிறாய்
இயேசுவில் நுளைதலே அன்பு என்கிறாய்
பௌத்தத்தில் ஜனித்தலே கர்மா என்கிறாய்
இப்படி ஆண்டாண்டாய் மனிதரை மக்கரிகும்
அத்தனை மதப் போக்கையும் விஞ்சிய என்.ஜி.ஓ.க்களே..!
உங்களின் தலித்திய விளிம்பினில் விடிவாமே..! எப்படி..?
மக்கள் பண்பாட்டுக் கழகம்: பௌர்ணமி ஒன்றுகூடல்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 December 2013
- Hits: 2147
மக்கள் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பௌர்ணமி ஒன்றுகூடல் 16.12.2013ம் அன்று “கோ. நடேசய்யரின் வாழ்வும் தொழிற்சங்க அரசியலும்” என்ற தலைப்பில் இடம்பெற்றது. கஹவத்தையில் அமைந்துள்ள விடியல் கல்வியகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு ஆசிரியர் செ.செல்வகுமார் தலைமை தாங்கினார். சட்டத்தரணி இ.தம்பையா குறித்த தலைப்பில் கருத்துரையை வழங்கினார்.
சமவுரிமை மார்க்சியக் கோட்பாடா!? சுயநிர்ணயத்திற்கு மாற்றா!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 21 December 2013
- Hits: 3032
சமவுரிமை இயக்கம் தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்புக்கும், அவதூறுக்கும் உள்ளாகி வருகின்றது. இலங்கையின் இன மத அரசியல் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்கும் அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்ட இதன் செயற்பாடு, அறிவுத் துறையினால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றது. இதன் அரசியல் நடைமுறை செயற்பாட்டை முடக்க, இதன் கோட்பாட்டை சிதைக்க முனைப்புக் கொண்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
சமவுரிமை தேசிய பிரச்சனைக்குரிய தீர்வு அல்ல என்ற வாதங்கள் தொடர்பாக!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 19 December 2013
- Hits: 2942
தேசியப் பிச்சனைக்குரிய தீர்வை சமவுரிமைக்கான போராட்டம் தராது என்ற வாதம், தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில் சமவுரிமை இயக்கத்தை இனவாதம் என்று கூறுமளவுக்கு, இனத் தேசியவாதம் முன்தள்ளப்படுகின்றது. சமவுரிமைக்கான அமைப்பு தொடங்கிய காலம் முதல் இதற்கு எதிரான இன்றைய அவதூறுகள் வரை, சமவுரிமை போராட்டத்தை முடக்குவதையே கோருகின்றது. சமவுரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டம் இனவாதமேயொழிய, இனப்பிரச்சனைக்குரிய தீர்வாகவும் அதற்கான செயல் பூர்வமான ஒன்றாகவும் இருக்க முடியாது என்பதே இதில் உள்ள அரசியலாகும்.
மகாஓய நில சுவீகரிப்புக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 18 December 2013
- Hits: 2213
தமது விவசாய நில சுவீகரிப்புக்கு எதிராக மகாஓயா பிரதேச விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாஓயா விவசாயிகளது நீண்டகால பயிற்செய்கை நிலங்களை மகாவலி செயற்திட்டத்திற்கு சுவீகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எட்டு விவசாய அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 31
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 18 December 2013
- Hits: 3515
ஸ்டாலினிசம் என்றால், அதுதான் லெனினிசம், அதுதான் மார்க்சிசம்
ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்டாலினிசமா என்றால், இல்லை. அதுதான் லெனினிசம். இங்கு இதுதான் மார்க்சியம். 1915 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கிய பின்பு மென்ஸ்விக்குகள் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்ற போது, டிராட்ஸ்கியும் இது சாத்தியமில்லை என்றார். ஆனால் லெனின் ‘ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்ற முழக்கம் பற்றி’ என்ற கட்டுரையில் “ஒரு தனிப்பட்ட முழக்கம் என்கிற வகையில் உலக ஐக்கிய நாடுகள் என்பது சரியானதாக இருக்க முடியாது. எனெனில் இதற்கு, ஒரு தனி நாட்டில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமானதல்ல என்று தவறான பொருள் வழங்கப்படக்கூடும்” என்றார். லெனின் புரட்சிக்கு பின்பு “ரஷ்யாவில் பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிரான ஒரே உத்திரவாதம், மேற்கு நாட்டில் ஏற்படுகிற ஒரு சோசலிசப் புரட்சிதான். ஆனால் இதை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கக் கூடிய ஒரு நிலையில் நாம் இல்லை. ஆனால் ஒரு சார்பு நிலையான, நிபந்தனைக்கு உட்பட்ட “உத்திரவாதம்” ஒன்று உண்டு. ரசியாவில் கூடுமான வரை மிகமிக விரிவான விளைவுகள் ஏற்படுத்துகின்ற, முரணற்ற, உறுதியான முறையில் புரட்சியை நிறைவேற்றுவதில்தான், பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிராகக் கூடுமான வரையில் மிகவும் சாத்தியமான தடைகளை எழுப்புவதில் பொதிந்துள்ளது” என்றார்.
மலையக மக்களை ஏமாற்றுவதற்கே மாடி வீட்டுத் திட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 18 December 2013
- Hits: 2217
_இந்த நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டையோ உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தியையோ நோக்காக கொள்ளாத ஒரு வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஓட்டு மொத்தத்தில் ஒரு மக்கள் விரோத ஜனநாயக விரோத வரவு செலவு திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது என்றே கூறவேண்டியுள்ளது. வழமைப் போலவே மலையக மக்களின் சமூகப் பொருளாதார நலன் சார்ந்த எந்தவொரு முன்மொழிவையும் இவ் வரவு செலவுத் திட்டம் கொண்டிருக்கவில்லை. அதேவேளை இந்த நாட்டின் பொருளாதார கட்டுமானத்தை தாங்கி நிற்கும் மலையக மக்கள் வரலாற்று நெடுகிலும் வேண்டி நிற்கும் வீடு, காணி உரிமை அப்பட்டமாக மறுக்கப்ட்டிருகிறது. இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ராகலை வெ.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடத்தலையும், கொலைகளையும் எதிர்ப்போம் - சுவிஷ்சலாந்தில் துண்டுப் பிரசுரம் விநியோகம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 18 December 2013
- Hits: 2121
''லலித் - குகனை விடுதலை செய்! என்ற தொனிப்பொருளில் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சுவிஸ் உறுப்பினர்களால் சூரிச் நகரை அண்டிய பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்துண்டுப் பிரசுரம் சிங்களம், தமிழ் மற்றும் ஜர்மன் மொழியில் அச்சிடப்பட்டிருந்ததோடு, அதன் தொனிப்பொருளுக்குள்,
ஆம்! நாங்கள் ஒன்று சேருவோம்! இந்த அழிவை முடிவுக்குக் கொண்டு வருவோம்!
லலித் மற்றும் குகனை உடனே விடுதலை செய்!
கடத்தல்களையும் கொலைகளையும் எதிர்ப்போம்!
காணாமல் போனவர்கள் பற்றிய தகவலை உடனடியா வௌியிடு!
"அனைத்து வகைப் பேதங்களையும் எதிர்த்து, ஒன்றிணைந்து போராடுவோம்" டென்மார்க் கூட்டத்தில் தோழர் லோகன் செல்லம் சிறப்புரை
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 17 December 2013
- Hits: 1032
டென்மார்க்கில் கொல்ஸ்ரோபுறோ நகரில் 14.12.2013, சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இலங்கை அரசிற்கு எதிரான கண்டனக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த கண்டன எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ், சிங்கள தோழர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் டென்மார்க் சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான தோழர் லோகன் செல்லம் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றியிருந்தார். அவரது உரையினை இங்கு வாசகர்களுடன் பகிர்கின்றோம்.
இலங்கையின் பாசிச அரச கட்டுமானத்தாலும், வர்க்கச் சமூகப் போக்கினாலும், ஒடுக்கி அடக்கப்பட்ட அனைத்து மக்களும் இணைந்த விடுதலையில் நின்று.., குறிப்பாக கடந்த ஐந்து தசாப்தங்களாகப் போராடி, தொலைந்துபோன - உயிர்நீர்த்த அனைத்துப் போராளிகளையும், மக்களையும் நினைவு கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சம உரிமை போராட்ட இயக்கத்தினால், இலங்கையில் மனித உரிமைகளைக் கோரி (14.12.2013) டென்மார்க், கொல்ஸ்ரபுறோ நகரில் இன்று இடம்பெறுகின்ற பொதுக் கூட்டத்தில் சம உரிமை இயக்கம் முன்வைத்துள்ள அரசியற் கோரிக்கை மூலம், இலங்கையின் அரச பாசிசத்தால் அல்லற்படும் அனைத்து மக்களையும், அப்பாசிச வடிவங்களை எதிர்க்கின்ற ஜனநாயகப் போராட்டத்திற்கு உங்களை அழைப்பிடுகின்றது.