Thu05022024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்..(பகுதி -1)

பின்லேடன் கொலை!

சர்வதேச நாடுகள் எங்கிலும் சல்லடைபோட்டுத் தேடப்பட்டு வந்த ஒருவர் பில்லேடன். அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் முதல் நபராக இவர் இடம்பெற்றும் இருந்தார். இவரை அண்மையில் அமெரிக்க சிறப்புப்படையினர் சுட்டுக் கொன்று விட்டதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. எப்படி இலங்கையில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்திகள் வெளிவந்தபோது, அவரது ஆதரவாளர்களால் நம்பமுடியாமல் திகைத்துப்போய் இருந்தனரோ, அதேமாதிரி பில்லேடனின் ஆதரவாளர்கள் மத்தியிலும் இது காணப்பட்டது. பின்லேடன் உலகநாடுகளை எல்லாம் மிரட்டிக்கொண்டிருந்தாரோ இல்லையோ, அமெரிக்காவின் கண்களில் தன் விரலைவிட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார் என்பது மிகையாகாது.

Read more ...

அவதாரங்கள் இறக்கிறார்கள், கைதாகிறார்கள்!

அய்யாமுத்து பூசையிலே மனமுருகி நின்றான். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி பக்தி என்ற இன்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, அவனிற்கு முன்னாலே நின்றவர்கள் ஏதோ பெரிதாக கதைத்து அவனது சிந்தனையை குழப்பி விட்டார்கள். வகுப்பறையிலே பெடியன்கள் சத்தம் போட்டால் தமிழ் படிப்பிக்கும் நாகலிங்கம் வாத்தியார் சொல்லும் “காவோலையிலே நாய் ஒண்ணுக்கு அடிக்கிற மாதிரி சளசளக்காதேயுங்கடா” என்பது ஞாபகம் வந்தது. முன்னிற்கு நிக்கிறவர்கள் பூசையையும் கவனிக்காமல் அப்படி என்ன கதைக்கிறான்கள் என்று காதைக் கொடுத்துக் கேட்டான். இப்ப எவ்வளவு போகுது என்று ஒருத்தன் மற்றவனை கேட்டுக் கொண்டு நின்றான். யாழ்ப்பாண முறைப்படி செய்யப்படும் காரம், குணம், மணம் நிறைந்த மிளகாய்த் தூள் போட்ட கறியை ஒவ்வொரு நாளும் போட்டுத் தாக்குவதால் மூலக்கொதி வந்து அல்லல்படும் அய்யாமுத்துவிற்கு இதைக் கேட்டதும் கொதி உச்சந்தலை வரைக்கும் ஏறியது. ஏண்டா இதையெல்லாமாடா அளக்கிறது. அதையும் கதைக்க இடமில்லாமல் கோயிலிலை வைச்சா கதைக்கிறது எண்டு அவங்களைப் பார்த்து கத்தினான். வங்கியிலே வட்டி வீதம் எவ்வளவு போகுது என்டதை கோயிலிலே வைச்சு கேக்கக் கூடாதோ என்று அவங்கள் அய்யாமுத்துவை பார்த்துக் கேட்டார்கள்.

 

Read more ...

எப்போதும் வயல் விளைக்க..!

உச்சி மீது குத்தி வீழ்ந்த சூரியன்
சடலமாய்க் கிடந்து தகிக்கின்றான்
எந்தன் காய்ந்த தலை முகட்டில்.

நேற்றுப் பெய்த அடைமழையால்
எங்கு பார்த்தாலும்
பச்சைப் பசேலென்ற பற்றைக் காடுகள்.
ஆனாலும்..,

Read more ...

அபலை…. (சிறுகதை)

ஐயோ….ஐயோ.. ஏன் இந்த வாழ்க்கை…எனக்கு…     கடவுளே இந்த ஊரிலே வந்து வாழ்வதை விட நான் செத்துத் தொலைச்சிருக்கலாம். கேவலம்….  வெட்கம் விட்டு போய்ச் சரணடைந்தேனே..

அப்பவே களுத்திலிருந்த சயினற்றை அடிச்சு கதையை முடிச்சிருக்க வேணும், மாதினியைப் போல் மித்திரா போல் களத்திலேயே உடனே உயிரைத் துறந்திருக்க வேண்டும். மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எனக்கு வந்திருக்கவே கூடாது. ஒரு முறையல்ல, இருமுறையல்ல, பலமுறைகள் தன் தலையில் அடித்தபடியே கதறிக் கதறிக்  அழுதழுது குளறிக் கொண்டிருக்கிறாள்.

Read more ...

தமிழ் மக்களின் அரசியல் வெற்றிடம்!

“தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று 70-ம் ஆண்டு பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில் (யாழ் கச்சேரியில் இருந்து தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்டிருந்த) தமிழரசுக்கட்சித்தலைவர் செல்வநாயகம் கூறிய வாhத்தைகள் இது. தமிழ்ப் பகுதிகளில், இத் தேர்தலில் அமிர்தலிங்கம், நாகநாதன் போன்ற பெருந்தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டதோடு, தென்னிலங்கையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்த காலம் இது. இதற்கு முந்திய இரு தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் உதவியுடனேயே மாறி மாறி வந்த ஸ்ரீலங்கா, யூ.என்.பி. அரசுகள் ஆட்சியமைத்திருந்தன. இக்காலங்களில் தாங்களே தென்னிலங்கை அரசியலை தீர்மானிக்கும் பிரதான சக்திகள் எனக் கூறிவந்த தமிழரசுக்கட்சிக்கு இத்தேர்தல் முடிவுகள் பெரும் பேரிடியைக் கொடுத்து விட்டது.

 

Read more ...

நிபுணர்குழு அறிக்கை மக்களுக்கு நீதியை பெற்றுத்தருமா?

அமெரிக்கா என்னடா..!   ஐ.நா. என்னடா..!
நான் நினைக்கிறதை செய்பவன். எனக்கு யார்
பற்றியும் கவலை இல்லை..,
என கோத்தபாயாவும்..,
மக்களையும் வெள்ளைக்  கொடியோடு
வந்தவர்களைக் கொன்றொழித்தது யார்?
பிரபாகரனை நாமா இல்லாதாக்கினோம்?
இதை நேர்கொண்டு கண்டது யார்?
நிபுணர் குழுவிற்கு மாலைக்கண்ணா?
அல்லது மஞ்சள் காமாளையா?
என மகிந்தாவும் குமுறுகின்றார்கள்.

Read more ...