புதிய ஜனாதிபதி அரசுக்கட்டமைப்பு, இலங்கை குடிமக்கள்
- Details
- Category: இதழ் 18
-
23 Mar 2015
- Hits: 1120
இலங்கையில் அதன் 7வது ஜனாதிபதித் தேர்தல் பலவிதமான கருத்துக் கணிப்பீடுகளோடும் சாதக பாதக விவாதங்களுடனும் நீயா நானா என்ற போட்டிகளுடனும் ஜனநாயகமா சர்வாதிகாரமா என்ற தலைப்புகளோடும் நடைபெற்று முடிந்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு திருவாளர் மைத்திரிபால சிறிசேனாவிடம் இலங்கைக் குடிமக்களால் (51.28 சதவீதம் வாக்குகளால்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இடதுசாரியத்தை ஏன் பலப்படுத்தவேண்டும்?
- Details
- Category: இதழ் 18
-
18 Mar 2015
- Hits: 1170
சங்கானைக் என் வணக்கம்
எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும்
நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்
இது அன்றைய இடதுசாரிகளின் போராட்ட அறைகூவலுக்கு சங்கானை நிச்சாமம் மக்களின் எழுச்சியினைப் போற்றுகின்ற கவிதைக்குரல். சுபத்திரன் கவிதையின் சூடேறிய வரிகள். சங்கானை சங்காயாய் மாறிக் கொண்டிருக்கின்றது என்று அமிர்தலிங்கம் அன்று பாராளுமன்றத்தில் அபாயச் சங்கொலி எழுப்பி ஒப்பாரி வைக்கும் அளவுக்கு போராட்டத் தீயானது சுவாலைகள் விட்டெரிந்து சமூகக் கொடுமைகளைப் பொசுக்கித் தள்ளிய காலம் ஒன்றிருந்தது.
உரிமைகளை பெற போராடியே தீர வேண்டும்
- Details
- Category: இதழ் 18
-
06 Mar 2015
- Hits: 1442
தேர்தலின் போது மட்டும் அரசியலில் ஈடுபட்டுவிட்டு தேர்தல் முடிந்த பின்னர் வாழாதிருப்பின் மக்களால் எந்த வெற்றியையும் பெற முடியாது எனக் கூறும் முன்னிலை சோஷலிஸ கட்சி 100 நாட்களுக்குள் பாரிய மாற்றத்தை செய்ய முடியாவிட்டாலும், ஆகக் குறைந்த மறுசீரமைப்புகள் சிலதையாவது பெற்றுக் கொள்ள மக்கள் போராட வேண்டுமெனக் கூறுகிறது.
புதுமுகம் வந்தது, புதுயுகம் பிறக்குமா?
- Details
- Category: இதழ் 18
-
13 Mar 2015
- Hits: 1280
ஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் எப்படியான கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் இறங்கினார்கள்? இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் கையாண்ட உபாயங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பது குறித்து ஒரு சிறிய ஆய்வு மாத்திரமே இது.
வடக்கில் இடதுசாரி இயக்கம் ஆரம்பம்
- Details
- Category: இதழ் 18
-
03 Mar 2015
- Hits: 2391
பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கை இருந்தபோது 1927 ம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி நாட்டிலிலுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் வாக்குரிமை உண்டு என பிரகடனப்படுத்தப்பட்டு முதலாவது சட்டசபைத் தேர்தலை பிரித்தானிய அரசு இலங்கையில் நடத்தியது. இலங்கைக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கூறி சிங்கள தமிழ் தலைவர்கள் அத்தேர்தலை பகிஸ்கரிப்பது என்று முடிவு செய்தார்கள்.
தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினை: நாம் என்ன செய்ய வேண்டும்?
- Details
- Category: இதழ் 18
-
12 Mar 2015
- Hits: 1392
இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிந்து, யு.என்.பி தலைமையிலான கூட்டின் வேட்பாளர் மைத்ரி சிறிசேன வெற்றியடைந்துள்ளர். மைத்ரி வடக்குக் கிழக்கு மற்றும் மலையக தமிழ்மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் அமோக ஆதரவினாலேயே வெற்றியடைந்துள்ளார். மைத்ரிக்கு தமிழ் பேசும் மக்கள் (வடக்குக்கிழக்கு மற்றும் முஸ்லீம் மக்கள்) பெருமளவில் வாக்களித்துள்ளமை, மஹிந்தவின் ஆட்சியை கலைப்பதற்காக மட்டுமல்ல - அவர்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை மற்றும் தமக்கான அரசியல் தீர்வை எதிர்பார்த்தே!
ரத்துபஸ்வல - துன்னான - சுன்னாகம்
- Details
- Category: இதழ் 18
-
16 Feb 2015
- Hits: 1328
சுன்னாகம் என்றாலே நினைவுக்கு வருவது அதன் சுத்தமான உவர்ப்பு இன்றிய சுவையான நன்னீராகும். இந்த நன்னீரை வரட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத்துக்காக ஏனைய பிரதேசங்களுக்கு நீர்த்தாங்கி வாகனங்கள் சுன்னாகக் கிணறுகளிலிருந்து நிரப்பி எடுத்துச் செல்வது வழமை.
இடதுசாரி வெற்றி குறித்து முன்னணி
- Details
- Category: இதழ் 18
-
07 Jun 2015
- Hits: 954
இனவாதம் மூலம் 66 ஆண்டுகள் மக்களை பிரித்து ஆண்டவர்களையும், அதை எதிர்த்து நின்ற இனவாதிகளில் இருந்து, இந்தத் தேர்தல் மூலம் புதிய தலைமுறையை அரசியல் மயப்படுத்தியதில் இடதுசாரி முன்னணி வெற்றிக்கான ஆரம்ப காலடியை எடுத்து வைத்திருக்கின்றது.
தமிழ் கூட்டமைப்பின் தொடரும் காட்டிக்கொடுப்புகள்!
- Details
- Category: இதழ் 18
-
14 Feb 2015
- Hits: 1219
வெண்நுரை அலைகள் கரையொதுங்கும் முல்லைக்கடலின் கரைகளில் உறைந்து கல்லாகி உடல்கள் மிதந்தன. ஆதரவு தேடி, அபயம் தேடி தாயின் கை பற்றி பசித்த வயிறுடன் பதுங்குகுழிகளில் தூக்கம் தொலைத்த குழந்தைகளின் கண்கள் மட்டுமே அந்த இருளில் ஒளிரும் ஒரே வெளிச்சமா இருந்தது. வெளியே மகிந்த ராஜபக்சவின் பேரினவாதம் வீசிய குண்டுகளில் தமிழர்களின் வாழ்வும், வளமும் வெடித்துப் பறந்தன.
மருந்துப்பொருள் மாபியாக்களுக்கு எதிராக போராட ஒன்றுபடுவோம்.
- Details
- Category: இதழ் 18
-
07 Jun 2015
- Hits: 754
மருந்துப்பொருள் விற்பனை மாபியாக்களின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும அப்பாவி மக்களை மீட்டெடுக்கின்ற பரந்துபட்ட போராட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்ற அதேவேளை மாணவர் இயக்கங்களும் சுகாதார சேவைத்துறைச் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்எடுத்துச் செல்லவுள்ளன.
“போராட்டம்” ஜனவரி இதழ் (இல:18) வெளிவந்துள்ளது!
- Details
- Category: இதழ் 18
-
11 Feb 2015
- Hits: 1481
இந்த இதழின் உள்ளே...
1. மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்க்காக போராடுவோம்!
2. ரத்துபஸ்வல - துன்னான - சுன்னாகம்
3. உரிமைகளை பெற போராடியே தீர வேண்டும்!.
4. தமிழ் கூட்டமைப்பின் தொடரும் காட்டிக்கொடுப்புகள்!
மக்களது அபிலாசைகளை வென்று எடுப்பதற்காக போராடுவோம்!
- Details
- Category: இதழ் 18
-
07 Jun 2015
- Hits: 902
ஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதியும் அதனைத் தொடர்ந்து ஒரு புதிய அரசும் தெரிவாகியுள்ள போதிலும் ஜனநாயகம் தொடர்பானதும் பொருளாதாரரீதியான மேம்பாடுகள் தொடர்பான மக்களது அபிலாஷைகள் நிறைவேறப்போவதில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றனதென முன்னிலை சோஷலிசக் கட்சி கருதுகின்றது.
ஏகாதிபத்தியமும் பயங்கரவாதமும
- Details
- Category: இதழ் 18
-
07 Feb 2015
- Hits: 762
கருத்துப் படத்தை முதன்மையாகக் கொண்டு பாரிசிலிருந்து வெளியாகும் "சார்லி எப்டோ" வாரச் சஞ்சிகை மீதான தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இந்த படுகொலைச் செயலானது இன - மத வெறியூட்டும் ஏகாதிபத்தியத்தின் தொடரான பிரச்சாரத்துக்கும், அது சார்ந்த அரசியலுக்கும் வலுச் சேர்த்துள்ளது.