மாலபேயில் "டொக்டர்" பட்டம் விற்பனைக்கு!!
- Details
- Category: இதழ் 6
-
25 Jul 2014
- Hits: 1170
இலங்கை ஜனநாயக "சோஷலிஸ குடியரசு" அதி விஷேட வர்த்தமான அறிவித்தல்களை வெளியிடுவதில் கைதேர்ந்ததாக இருக்கின்றது. அதன்படி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் மாலபே பட்டதாரி பட்டம் வழங்கும் கடை என்பது மாலபே பிரதேசத்தில் 'சவுத் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னோலொஜி அன்ட் மெடிசின்' (South Asian Instititute of Tecnology And Medicine) சுருக்கமாகக் கூறுவதாயிருந்தால் SAITM என்ற பெயரில் தனியார் மருத்துவக் கல்லூரியொன்று இங்குவதாக தற்போதைய உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக அந்த விஷேட வர்த்தமானி அறிவித்தலை தலைமேல் வைத்துக் கொண்டு பெருமையடித்துக் கொள்கிறார். மேற்படி நிறுவனம் தொடர்பில் இம்மாதம் 26ம் (October 2013) திகதி மீண்டும் ஒரு அதிவிஷேட வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சிலி - பாசிச அரசியலுக்கு எதிரான போராட்டத்தின் 40வது வருடம்
- Details
- Category: இதழ் 6
-
17 Jul 2014
- Hits: 1286
எம்மிற் பலருக்கு 11 செப்டெம்பர் என்றால் நினைவில் வருவது 11 செப்டெம்பர் 2001 அன்று அல்கையிடா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், உலக முதலாளித்துவத்தினதும், அமெரிக்கப் பொருளாதார ஏகாதிபத்தியத்தினதும் குறியீடாகவிருந்த வோர்ல்ட் ரேட் சென்டர் (World trade center) மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனமான பெந்ரகோன் (Pentagon) மீதும் விமானத்தைச் செலுத்தி அவற்றை தகர்த்தது தான். இத்தாக்குதலில் பெந்ரகோன் (Pentagon) மிகக் குறைந்த பாதிப்புடன் தப்பியது. ஆனால் வேர்ல்ட் இரெட் சென்ட்ர் (World trade center) முற்றாக அழிந்தது. இந்நடவடிக்கையில் மொத்தமாக 2986 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இதைவிட பலமடங்கு அழிவு 40 வருடங்களுக்கு முன், 11 செப்டெம்பர் 1973இல் அமெரிக்க அரசின் ஜனாதிபதியாக இருந்த நிக்ஸனின் தலைமையில் அவரது அரசின் பாதுகாப்பு செயலாளராகவிருந்த ஹென்றிக் கிஸ்ஸிங்கரால் சிலி நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.
அறிவுக்கு வேலை கொடுப்போம்!
- Details
- Category: இதழ் 6
-
11 Mar 2014
- Hits: 992
இன்று சமயங்களுக்கிடையில் மோதல்களும், விவாதங்களும், நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சமயங்களை உலகிற்கு தந்தவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் இவற்றை ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றும் மனிதர்கள் தமது மதத்திற்காக சண்டை பிடிக்கின்றார்கள், மோதிக் கொள்கிறார்கள், கொலை செய்து கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் ஒரு மனிதன் எந்த சமயத்தையும் சாராதிருப்பது எவ்வளவு நல்லது என்று நினைப்பது தவறாக இருக்காது.
அறிவு என்பது என்ன? -மார்க்சிய கல்வி -06
- Details
- Category: இதழ் 6
-
21 Apr 2014
- Hits: 4442
இயற்கைக்கும், உழைப்புக்கும், நுகர்வுக்கும் இடையிலான மனித உறவுகள் பற்றிய எதார்த்தமே அறிவாகும். இயற்கையில் இயற்கையாக வாழ்தல் அறிவல்ல. இயற்கையைச் சார்ந்து வாழும் மிருகங்கள் கொண்டிருக்கக் கூடிய வாழ்தல் முறை, அதன் அறிவின் பாலானதல்ல. மாறாக தன்னுணர்வு இன்றி அவை செயற்படுகின்றது. இயற்கையுடன் இணைந்த தகவுத் தன்மை கொண்டு இயங்குகின்றது. இயற்கையின் சூழலுடன் படிப்படியாக தன் நிலை மறுத்தல் மூலம் தன்னை இசைவாக்கிக் கொள்கின்றது.
சிரிப்பு- கண்ணீர் மற்றும் செயற்படுதல்
- Details
- Category: இதழ் 6
-
31 Oct 2013
- Hits: 862
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் முடிந்துவிட்டன. தேர்தலின் சூடு தணிந்து தேர்தல் முடிவுகள் குறித்து வாத விவாதங்களும் ஓய்ந்து விட்டுள்ளன. என்றாலும் நாங்கள் தொடர்ந்தும் தேர்தலைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் 60 வீதமான வாக்குகளைப் பெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
இனவாதத்தை முன்னிறுத்தி சிந்திப்பது, செயற்படுவது சமூக விரோதமானது
- Details
- Category: இதழ் 6
-
10 Apr 2014
- Hits: 1098
இனரீதியான ஒடுக்குமுறையை, அதே இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இனரீதியாக எதிர்கொள்வது சரியானதா!? இது இனவொடுக்குமுறைக்கு தீர்வைத் தருமா? இனரீதியாக ஒடுக்குபவனின் அரசியல் பொருளாதார நோக்கத்தை ஆராய்ந்து அதற்கு எதிராக போராடுவதற்கு பதில், இனவொடுக்குமுறை வடிவத்தை மட்டும் எதிர்க்கின்ற இனவாத அரசியல் தவறானது. இது அதே இனவாதத்தைப போற்றி தனதாக்குவதுடன், ஒடுக்குபவனின் அரசியல் பொருளாதார நோக்கத்தை பாதுகாக்கின்ற படுபிற்போக்கான அரசியலாகி விடுகின்றது.
மலையக மக்களின் அவல வாழ்வியல்..!
- Details
- Category: இதழ் 6
-
31 Oct 2013
- Hits: 751
எமது நாட்டின் வருமானத்தில் ஏகப்பெரும்பான்மையான வருவாயைப் பெற்றுத்தரும் மலையக மக்கள் இன்றும் தோட்டத் தொழிலாளர்களாகவே நாட்கூலி சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். இவர்களுக்கான கல்வி சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகள் யாவும் மிகத் தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. அவர்களது வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய மக்களது வாழ்க்கைத் தரத்தையும் விட மிகவும் கீழ் மட்டத்திற்கே தள்ளப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்கொள்ளையும் இலங்கையில் கடல்வள அழிவும்
- Details
- Category: இதழ் 6
-
24 Mar 2014
- Hits: 1187
கடந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் 78 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். 78 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதானது யுத்தத்துக்கு பின் வந்த காலத்தில் நடந்த கைதுகளில் மிக அதிகமானதாகும். இலங்கைக்குச் சொந்தமான விசேட பொருளாதார கடல் வலயத்தில், சர்வதேச சட்ட அடிப்படைக்கு முரணாக, நடாத்தப்படும் இந்த கடல்வளக் கொள்ளையானது, தற்போது 2009 இக்கு முன்னிருந்த நிலையை விட அதிகரித்துள்ளது.
"போராட்டம்" இதழ் 06 வெளிவந்து விட்டது
- Details
- Category: இதழ் 6
-
27 Oct 2013
- Hits: 1075
இடதுசாரியத்தின் வெற்றி எப்போது?
வாக்குறுதிகள், வாய்ச்சவாடல்கள் மற்றும் வன்முறைகள் கூடிய இன்னொரு தேர்தலும் முடிந்து விட்டது. வெற்றி பெற்றது யாராக இருந்தாலும் அது நவதாராளமய முதலாளித்துவத்தின் மக்கள் மத்தியில் மேலும் திணிப்பதற்காக அதிகார வர்க்கத்திற்கு இன்னொரு தேர்தல் வெற்றி கிடைத்திருக்கிறது. தங்களை ஏமாற்றுவதற்கு தகுதியானவர்கள் யார் என்பதை மக்களே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். தேர்தல் முடிந்தாலும், அது பற்றிய தேர்தல் முடிவுகளை பகுப்பாய்வு செய்பவர்களின் குரல்கள் கேட்டு இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. மக்கள் அலையொன்றை உருவாக்கி அரசாங்கத்திற்கு அதனை "பூமராங்" ஆக மாற்றுவோம்" என உளறிக் கொட்டியவர்கள் தேர்தல் முடிவுகளைப் பார்த்து வாய்மூடி மௌன விரதம் அனுஸ்டிக்கின்றனர்.