Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

முன்னிலை சோஷலிஸக் கட்சிக்கு வாழ்த்துச் செய்தி

திகதி : 09/04/2012

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அங்குரார்ப்பண மாநாட்டுக்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் வாழ்த்துச் செய்தி.


தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்..!


மகிந்த பாசிச அரசு, இனமத ரீதியாக மக்களைப் பிரித்து வைத்து, ஏகாதிபத்திங்களின் முரண்பாட்டுக்குள் தன்னை புதைத்து, மீளமுடியாதிருக்கும் மிக நெருக்கடியான இந்த காலகட்டத்தில், புரட்சிகரமான 'முன்னிலை சோஷலிஸக் கட்சியின்" தோற்றம் என்பது வரலாற்று  நிகழ்வாகும்..!

ஜே.வி.பி. அமைப்பானது பாட்டாளிவர்க்க நலன் சாராத, வலதுசாரிய சந்தர்ப்பவாதப் பாதையில் சென்று, பேரினவாத கட்சிகளுடன் கூட்டமைத்து, அரசுடன் பங்காளியாக இருந்து, பேரினவாத ஒடுக்குமுறைக்கு உதவியது. தொழிலாளர் வர்க்கப் புரட்சிக்கு எதிராக செயற்பட்டது. இதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட, புரட்சிகரமான சக்திகள் தான் "முன்னிலை சோசலிச கட்சி"யாக தம்மை இன்று பிரகடனம் செய்கின்றனர்.

இனமுரண்பாடு, பிரதான முரண்பாடாக மாறிய நிலையில், சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காத எமது கடந்தகால வரலாறு, மக்களை இன ரீதியாக பிரித்து வைக்கவே உதவியது.

இவற்றினை கவனத்தில் கொண்டு "முன்னிலை சோசலிச கட்சி" தன்னை ஒரு புரட்சிகர மக்கள்  கட்சியாக முன்னிறுத்திப் போராட வாழ்த்துகின்றோம்.
 

•  புரட்சிகரமான ஐக்கிய முன்னணியை உருவாக்குவோம்!


• இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து, வர்க்கப் புரட்சியை  முன்னெடுப்போம்!


• ஏகாதிபத்திய முகாங்களை எதிர்த்து, அவைக்கு எதிராகப் போராடுவோம்!

•இலங்கை மக்களுக்கு எதிரான, கடந்தகாலத்தின் அனைத்து குற்றங்களுக்குமான  நீதியைக் கோருவோம்!


புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் :  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

http://www.ndpfront.com/tamil/http://www.ndpfront.com/sinhala/

http://www.ndpfront.net/english/ -  http://www.tamilcircle.net/

கருத்துமக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்.