Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

கொழும்பில் அரச இனவாதத்திற்கு எதிராக சமவுரிமை இயக்கத்தால் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல்!

 முஸ்லிம் மக்களுக்கு எதிராக "பொதுபல", "சேனா" போன்ற மதவாத இனவாத அமைப்புகள் அரசாங்க ஆசீர்வாதத்தோடு செயற்படுத்திவரும் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 13-ம் திகதி கொழும்பு தேசிய நூலக மற்றும் சுவடுகள் சேவை சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. 

இக்கலந்துரையாடலை சமவுரிமை இயக்கம் முன்னின்று நடாத்தியுள்ளது. இதில் இன ஐக்கியத்தை முன்னெடுக்கும் நோக்கில் சிங்கள-தமிழ்-முஸ்லிம்- சமூகங்கங்களைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் இடதுசாரிச் சிந்தனைச் செயற்பாட்டாளர்கள், முற்போக்கு எண்ணம் கொண்ட புத்திஜீவிகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள், முஸ்லிம்-புத்தசமயத் தலைவர்கள், பெண்கள் அமைப்புப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் முடிவில் இன-ஐக்கியத்தை அறிவுறுத்தும் வகையிலான சமூக உரையாடல்களை, பின்தங்கிய கிராமப் புறங்களில் இருந்து, ஆரம்பிப்தெனவும், அதற்கான வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டத்தை தயாரிப்பதற்கும், கலந்துரையாடல்களை தொடர்ந்து செய்வதற்குமான குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்து.