யார்கேட்டு என் மண்ணில் கால்பதித்தாய்
- Details
- Category: நெடுந்தீவகன்
-
05 Mar 2012
- Hits: 6923
என்மண்குழந்தை லக்சினியை தின்றவரே
பேய்களே
பிணந்தின்னிக் கூட்டமே
வன்னிவரை தின்றடங்கா கூட்டே
யார் ஆட்சியானாலும் கால்கழுவி
வாலாட்டி எலும்பெறிய கவ்விப்போ இரணியரே
யார் கேட்டு எம்மண்ணை சூழ்ந்து கொண்டாய்
தரவையில் மேயும் பசுக்களும்
அன்னைகடலினில் கிடக்கும் செல்வமும்
வெறும் கல்லினைப்பிளந்த கழனிகளும்
கற்பகதருவும் தென்னைகளும்
முல்லையும் மிசிட்டையும் குறிஞ்சாவும்
கல்வியில் சிறக்கும் சந்ததியும்
உழைப்பும் உறுதியும் அழியாச்சொத்து
எம்புழுதி எமக்குச் சுகம்
கடல்அலை எமக்குத் தாலாட்டு
கல்வேலி என்ஊர் கலைநுட்பம்
குண்டும் குழியுமாய் தெருக்கள் இருக்கட்டும்
வற்றியகடல் பெருக்கெடுக்க பயணிப்போம்
எப்பொழுது விலகுவீர்
கடல்நீரை வருடிவருகின்ற காற்றை
கதவு யன்னல் திறந்துவிட்டு மூச்சுவிட
எப்பொழுது விடுவீர்
---- நெடுந்தீவகன்------
05/03/2012