பேச்சு, கருத்து, எழுத்து சுதந்திரங்களிற்கு விடுக்கும் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
05 Apr 2014
- Hits: 2259
புதிய திசைகள் அமைப்பினது குரல் இணைய செய்திகளின் படி, இனியொரு இணையத்தளம் மீது அதில் பிரசுரமாகிய கட்டுரை ஒன்றின் காரணமாக சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். மக்கள், அரசியலாளர் மற்றும் ஊடகங்கள் மீது அடிப்படை ஜனநாயக சுந்திரங்களான பேச்சு, கருத்து, எழுத்து சுதந்திரங்களிற்கு எதிராக நடாத்தப்படுகின்ற எத்தகைய வன்முறைகளையும் நாம் அனுமதிக்க முடியாது.
மேற்படி செய்தியின் அடிப்படையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்குமாயின், ஊடக ஜனநாயகத்தை மறுக்கின்ற இந்த செயற்பாட்டினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.