மட்டக்களப்பில் மூன்று தமிழ் இளைஞர்கள் TIDயினரால் கைது!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
18 Feb 2013
- Hits: 1931
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரானால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமைக் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கைதுசெய்யப்பட்ட உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.