பாடசாலைகளுக்குள் மதங்களும்
கல்வி என்பது, தமிழ், சிங்கள (ஆங்கில) மொழிப் பாடசாலைகளாக இல்லாமல், மதத்தின் பெயரில் பாடசாலைகளை அமைத்தல், மத அடையாளங்களை பாடசாலை முகப்பில் உருவாக்குவது, மத உடைகளைப் புகுத்துவது, மத வழிபாட்டை கல்விக்கூடங்களில் கொண்டு வருவது… என்பது, இன்று சர்வசாதாரணமாகி வருகின்றது. இதற்கு எதிராக குரல்கள் சமூகத்தில் எழுவதில்லை. எல்லா மத அடிப்படைவாதங்களுக்குமான, விளைநிலமாக இலங்கை இருக்கின்றது. இலங்கை தேர்தல் அரசியல் கட்சிகள் இனம் அல்லது மதம் அல்லது இரண்டும் சார்ந்த, அதிகார மையங்களாக இருக்கின்றது. அரசு மதம் சார்ந்ததாக இருக்கின்றது.
இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக போலி அரசியலும், கண்டனங்களும்
மதத்தின் பெயரில் மனிதர்களைக் கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு வித்திட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம், இலங்கையில் தோன்றுவதற்கு இனவாதம் பேசிய தமிழர்களே காரணமாக இருந்து இருக்கின்றனர்.
புலிகள் முஸ்லிம் மக்கள் மேல் நடத்திய நூற்றுக்கணக்கான வன்முறை (சில விபரங்களை கட்டுரையில் பார்க்க), மறுபக்கத்தில் முஸ்லிம் மக்களை அரசியல்ரீதியாக அரவணைத்துச் செல்ல புலிகள் அல்லாத தமிழ் "முற்போக்கு" தரப்பும் தவறிக்கொண்டு இருந்த சூழலில், அதை எதிர்த்து எழுதிய கட்டுரை.
முஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை?
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.துரைராஜா அவர்கள், நோர்வே பல்கலைக்கழகங்களில் ஒன்றான தொரம்சோ(Tromso) பல்கலைக்கழகத்துடன் கடல்வளத் துறை பீடம் மற்றும் அத் துறைசார்ந்த நிபுணத்துவத்தினை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையினை ஒப்பமிடுவதற்காக 1995 ம் ஆண்டு அழைக்கப்பட்டிருந்தார்.
அப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை மேற்கொண்டிருந்த தமிழ் மாணவர்களால் கருத்தரங்கு ஒன்று அவ்வேளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக் கருத்தரங்கில் அவரிடம் முஸ்லிம் மக்கள் வெளியேற்றுகை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது வருந்தத்தக்கதே என்று தனது பதிலில் குறிப்பிட்டார். அறிவியல்துறை சார்ந்த ஒரு தமிழ் தேசிய ஆதரவாளராக முதல் முதலாக தமிழ் தேசியத்தின் தவறான இப் போக்கு குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டவராக அன்று நெருக்கடியான சூழலிலும் அவர் இருந்தார்.
(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்
வழிபடுவதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வும், மன ஆறுதலும் கிடைக்கின்றது என்று நம்புகின்ற ஒரு மனிதனின் உணர்வை மதிப்பதைக் கடந்து, மதத்தை யாரும் விதந்துரைக்க முடியாது. கடவுள் நம்பிக்கையுள்ள மனிதன் இதைத்தான் வாழ்வியல் நெறியாக கொள்ள வேண்டும். தனிமனித நம்பிக்கையைக் கடந்து, அதைப் பொது நம்பிக்கையாக மாற்றுவது என்பது, மனிதனை ஏமாற்றுகின்ற சுயநலமாக மட்டும் தான் இருக்க முடியும்.
மதம் மூலம் தன்னை அடையாளப்படுத்துவதும், மத அடையாளங்களைக் கொண்ட சமூகத்தில் தன்னை மதமூடாகக் காட்டிக் கொள்வதும், சமூகம் மீதான அத்துமீறல். உன்னுடைய நம்பிக்கை உன்னுடையதே ஓழிய, பிறருக்கு அதைக் காட்சிப்படுத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ, திணிப்பதோ மானிடத்துக்கு எதிரான குற்றமாகும்.
ஒப்பாரி வைக்கும் இஸ்லாமிய இலக்கிய - அரசியல் சிந்தனைமுறை
எங்கிருந்தோ வந்தார்கள், புதிய மார்க்கமும் வந்தது, கூடவே பணமும் வந்தது, பெண்களுக்கு புர்காவும் வந்தது, திடீர் திடீரென மசூதிகள் முளைத்தது. இப்படி, அது வந்தது, இது வந்தது என்று கூறுகின்றதன் மூலம், சூழலுக்கு ஏற்ப தப்பிப் பிழைக்கின்ற இலக்கிய – அரசியல் போக்கே, தங்கள் சமூகம் குறித்த சுயமதிப்பீடாக கட்டமைக்க முனைகின்றனர். இப்படி இன்று கூறுகின்றவர்களின் சமூக நேர்மையென்பது கேள்விக்குரியது. அன்று ஏன் நாங்கள் இதைக் கூறவில்லை என்பதைச் சொல்லுவது தானே, குறைந்தபட்சம் சமூக சார்ந்த நேர்மை. எல்லாவற்றையும் சொந்த சமூகத்துக்குள் பூட்டி, மூடிமறைத்தவர்கள் யார்? ஏன் மூடிமறைத்தனர்?
தமிழர் வெறுப்புணர்வில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம்
இஸ்லாமிய பயங்கரவாதமானது, ஏன் தமிழ் கத்தோலிக்கரை இலக்கு வைத்தது? மனிதாபிமான அணுகுமுறை மூலம் போலி இடதுசாரியமும், வலதுசாரிய ஜனநாயக "முற்போக்குவாதமும்", ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பாதுகாக்க முனைகின்றனர்? இவை வரலாற்று ரீதியான அரசியலாலானது.
1980களில் தோன்றிய இயக்கங்களினதும்;, புலிகளினதும் ஜனநாயக விரோத ஏகாதிபத்திய கைக்கூலி அரசியலென்பது, அதிகாரத்துக்கான மக்கள்விரோத வன்முறையாக மாறியது. தமிழ்மொழி பேசும் மக்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வன்முறைகளில் ஈடுபட்டது.
இஸ்லாமிய மயமாக்கத்தை ஏகாதிபத்திய சரக்காக குறுக்குவது
இன்றைய சமூக அமைப்பின் சிந்தனைமுறையே ஏகாதிபத்திய சிந்தனை முறைதான். அதாவது முதலாளித்துவச் சிந்தனைமுறை தான். இப்படி இருக்க, இஸ்லாம் மட்டும் என்ன விதிவிலக்கா!? இதையா நாங்கள் மறுக்கின்றோம்;!? இப்படி புதிய ஜனநாயகக் கட்சிப் பின்னணியைக் கொண்டவர்கள், புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக்கு எதிரான அரசியல் அவதூறை முன்வைத்திருக்கின்றனர். இதன் மூலம் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை, ஒற்றைப் பரிணாமம் மட்டும் கொண்டதாக நிறுவ முனைகின்றனர்.
அடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை
இலங்கையில் அரசு பாதுகாப்பு காரணமாக, முகத்தை மூடும் உடைகளுக்கு தடை விதித்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசு அனைத்து ஆணாதிக்க அடையாளங்களையும், மத அடிப்படைவாத அடையாளங்களையும் தடைசெய்யவில்லை.
மேற்கில் புர்கா தடை செய்யப்பட்ட போது, அது பெண் மீதான ஒடுக்குமுறையாக முன்னிறுத்தியே அதைத் தடை செய்தது. மேற்கில் தடைக்கு உள்நோக்கம் இருந்தாலும், பெண் விடுதலைக்கான சமூகக் கூறாக இருந்தது. பெண் விடுதலை நோக்கில் அதை ஆதரிக்க வேண்டியும் இருந்தது. பெண் சுதந்திரத்தில் முன்னேறிய மேற்கு சமூகத்தில், புர்கா உடை என்பது மனித சமத்துவத்தில் முன்னேறிய சமூகத்தை கீழ் இழுத்து வீழ்த்தும் அசிங்கமாக இருந்தது.
பயங்கரவாதமும் - கோத்தபாயவின் அரசியல் வருகையும்
தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள கோத்தபாய, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க தன்னாலேயே முடியும் என்கின்றார். இதன் பொருள் இஸ்லாமிய பயங்கரவாதம் அடுத்த தேர்தல் வரை நீடிக்க வேண்டும். அதை வைத்து தேர்தலில் வெல்ல வேண்டும். இது அவரின் தோதல் கனவு.
ஜனாதிபதி மைத்திரியைப் பொறுத்தவரையில் அடுத்த ஜனாதிபதியாகும் கனவில், இஸ்லாமிய பயங்கரவாதத்தை தானே முன்னின்று ஒழித்துக்கட்ட முனைகின்றார். இதற்காக யூ.என்.பி அரசாங்கத்தை தனிமைப்படுத்தி, தானே எல்லாமாக காட்ட முனைகின்றார். யூ.என்.பி தன் பங்குக்கு தானே எல்லாம் என்று காட்ட, பயங்கரவாதம் தேர்தல் அரசியலாகிக் கொண்டு இருக்கின்றது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, ஒழியாமை என்பது பேரினவாத தேர்தல் கட்சிகளின் வெற்றி தோல்விக்குட்பட்ட ஒரு விடையமாக மாறி வருகின்றது. இப்படி வரவுள்ள ஜனாதிபதி தேர்தல் களம், இஸ்லாமிய பயங்கரவாத ஒழிப்பில் தொடங்கி இருக்கின்றது.
இஸ்லாமிய பயங்கரவாதமும், கொசுக்களின் தொல்லையும்
இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடுத்து, இஸ்லாமிய சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்று, தமிழ் இலக்கிய – அரசியல் "முற்போக்குவாதிகளின்" கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. சமூகத்துக்கு கேடானதும், சமூகத்தை மூடுதிரையாக்கி வைத்திருக்க விரும்புகின்ற, சமூக மாற்றத்தை விரும்பாத தனிமனிதத்தனமான போலி சமூக அக்கறை, இப்படித்தான் நடித்துக் காட்ட முடியும்.
இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை அரச படைகள், இஸ்லாமிய சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை இட்டு எந்தக் கருத்துமில்லை. அதை அங்கீகரித்தபடியே இவர்கள், சிந்தனைத் தளத்தில் முஸ்லிம் சமூகம் அடிப்படைவாதத்துடன் கொண்டுள்ள உறவை கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது என்கின்றனர்.