ஜெயமோகனும் - ஈழத்து இலக்கியமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
கலை-இலக்கியத்தில் மக்களின் வாழ்வியல் சாரத்தை மறுப்பதில் இருந்துதான், ஜெயமோகனும் - "ஈழத்து இலக்கிய" ஜாம்பவான்களும் கொடுக்கு கட்டிக்கொண்டு நிற்கின்றனர். நடக்கும் வாதப் பிரதிவாதங்களின் அரசியலென்பது, ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருக்கின்றது. மக்களின் வாழ்வியலை ஒடுக்குகின்ற சமூகப் பொருளாதார சாரத்தை கொண்டாட்டமாக கொண்டாடும், கலை இலக்கியத்தையே ஜெயமோகனும், "ஈழத்து இலக்கிய"வாதிகளும் படைப்பாக்குகின்றனர்.
ஈழத்துக் கலை - இலக்கியவாதிகளின் எந்தப் படைப்பும், எந்தப் படைப்பாளியும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த விடுதலைக்கான சிந்தனையின் அடிப்படையில் செயற்படுவதைக் காண முடியாது. ஒடுக்கும் இந்தச் சமூக அமைப்பின் உள்ளான அக முரண்பாடுகளை சார்ந்து நின்று தான், கும்மி அடிக்க முடிகின்றது. நானும் நீயும் ஒன்று என்று கூறுமளவுக்கு, ஈழத்து கலை இலக்கிய போக்கில் ஜெயமோகனும் பயணிக்கின்றார்.
இந்தியாவில் பார்ப்பனிய பாசிச மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களும் - இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றுக்கொண்டு இருக்கும் காலத்தில் தான், ஜெயமோகன் போன்ற பார்ப்பனிய இலக்கியவாதிகளின் கூத்தும் கும்மாளமும் அரங்கேறுகின்றது. இந்தியாவில் பார்ப்;பனிய இலக்கிய பிரதிநிதியாக இருக்கக்கூடிய ஜெயமோகன் போன்றவர்கள், கலை கலைக்காக என்று வாதிடக் கூடிய கூட்டத்தின் பிரதிநிதியே. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த இலக்கியத்தின் பிரதிநிதிகளல்ல. ஈழத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்கும் இலக்கியமாக சீரழிந்துவிட்ட இலக்கிய சூழலில், தங்களையொத்த ஜெயமோகனின் அங்கீகாரத்துக்கான முரண்பாடு தான் - ஈழத்தில் எதிரும் புதிருமான கருத்துகளும்;, விவாதங்களுமாக அரங்கேறுகின்றது.
இந்த விவாதம் ஈழத்து ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியம் குறித்தான அக்கறையில் இருந்தோ, அதை முன்னிறுத்தியோ ஜெயமோகனுக்கு எதிராக யாரும் தங்களை முன்னிறுத்தவில்;லை. ஈழத்து இலக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களின் கலை - இலக்கியமாக இல்லை என்பது உண்மை.
ஈழத் தமிழ் இலக்கிய ஆதீனங்களும் - ஒடுக்கப்பட்ட-ஒதுக்கப்பட்ட இலக்கியமும்
இது ஒரு சிறு குறிப்பு மட்டுமே. விரிவாக பல ஆயிரம் பக்கங்கள் எழுதப்பட வேண்டிய விடையங்களை ஒரு வரியில் இங்கு பதிந்துள்ளேன். மேலும், இது இலக்கியம் பற்றிய கட்டுரை அல்ல. அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
1.
இந்திய எழுத்தாளர் ஜெயமோகன், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை பூச்சி மருந்தடித்து, இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறிய வீடியோ பிரபலமாகியுள்ளது. இதனால் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
விவாதங்களில் ஜெயமோகன், இந்திய - பார்ப்பன மேலாதிக்கத்தை இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் மீது நிறுவுவதற்காக முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஜெயமோகன் புலம்பெயர்ந்த மற்றும் இலங்கை வாழ் எழுத்தாளர்களை வரிசைப்படுத்தி "ஒரு" பாரம்பரியத்தை முன்மொழிகிறார். அத்துடன், இலங்கையில் இலக்கிய ஆய்வுமுறை மற்றும் விமர்சனப் பாரம்பரியம் இருந்ததில்லை என்பது போன்ற கருத்தையும் முன்வைக்கிறார். இவரது இந்த கருத்துக்கள், உண்மையிலேயே அவரது இந்திய மேலாதிக்க பார்ப்பன கண்ணோட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதில், எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
"நினைவழியா வடுக்கள்" நூலும் - சாதிய சமூகமும்
இலங்கைத் தமிழர்கள் எழுதியுள்ள நூல்களில் "நினைவழியா வடுக்கள்" என்ற சிவா சின்னப்பொடியின் நூல் தனித்துவமிக்கது. ஈழத்து சாதிய அனுபவத்தை பதிவாக்கியுள்ள முதல் நூல். 1960களில் நிலவிய சாதியக் கொடூரத்தின் சுய அனுபவத்தையும், பிற மனிதர்கள் சந்தித்த அவலங்களையும் இந்த நூல் தன்னுள் உள்ளடக்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் சாதிய வாழ்க்கையையும், அதன் போராட்டத்தையும் தத்ரூபமாக இந்த நூலில் தரிசிக்க முடியும்.
இந்த நூலை சாதிய சமூகமான தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தனதும், தனது தாய் தந்தையரின் சாதிய கொடூரங்களையும் மூடிமறைக்க இந்த நூலை இருட்டடிப்பு செய்யும். மறுபக்கத்தில் கடந்தகாலத்தில் சாதியத்தைக் கட்டிப்பாதுகாத்த தமிழ் தேசிய இயக்கங்களின் அரசியலுடன் பயணித்த சிவா சின்னப்பொடியின் கடந்தகாலம், இந்த நூலின் முக்கியத்துவத்தை மறுதலித்துவிடுவதற்கான புறநிலையான மற்றொரு சூழலும் காணப்படுகின்றது. "தமிழ் தேசியம்" சார்ந்து சாதிய இயக்கங்களுடன் இணைந்துகொண்ட சிவா சின்னப்பொடியின் பயணம் மீதான விமர்சனத்தைக் கடந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதமாக இந்த நூல் மிளிர்கின்றது என்பது மிகையல்ல.
'பரியேறும் பெருமாள்' சினிமா மீதான ஒரு பார்வை
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 15 November 2018
- Hits: 7036
சாதி சமூகம் என்பது, ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டமாக எதிர்மறையில் பிரித்து விடுகின்றது. சாதிக்கொரு வாழ்வியலாக, மனிதர்களைப் பிறப்பில் இருந்தே பிரித்து விடுகின்றது. இதைக் கண்காணிப்பதும், அதன்படி ஒழுகுவதும் வாழ்க்கை முறையாகவும், சாதிப் பெருமையாகவும் பீற்றப்படுகின்றது.
இந்த சாதிய அடிப்படையில் ஓடுக்குவது – ஓடுக்கப்படுவது என்பது, சாதிக்குச் சாதி இடம்மாறிக் கொண்டு இயங்குகின்றது. அதாவது சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்பவன், இன்னுமொரு நிலையில் சாதி ஓடுக்குமுறையாளனாக இருக்கின்றான். தான் ஒடுக்குவதற்கு ஓரு சாதி கீழ் இல்லாத நிலையில் உள்ள சாதியும், தனக்கு மேல் இருந்து ஓடுக்க ஒரு சாதி இல்லாத சாதிகள் தவிர, அனைத்தும் ஓடுக்கப்படவும், ( சாதிப் படிநிலையில் ஆக அடியில் வைக்கப்பட்டவனும், ஆக மேல்நிலையில் உள்ளதாக தன்னை கருதுபவனும்) அதேநேரம் ஓடுக்கும் சாதிய வடிவங்களாகவே, இந்திய சாதிய சமூக அமைப்புமுறை இருக்கின்றது. சாதிய ஓடுக்குமுறை வடிவமானது, சாதிய படிநிலைக்கு ஏற்ப, பண்பு ரீதியாகவும் அளவு ரீதியாகவும் மாறுபடுகின்றது.
நவதாராளவாதத்தில் ஒடுக்கும் சாதி வடிவில் மேல்நிலையில் உள்ள சாதிகள், இடை நிலையில் உள்ள சாதிகள் போல், நேரடியான வன்முறையில் ஈடுபடுவதில்;லை. ஓடுக்குவதில் மேல்நிலையில் இருக்கும் சாதி ஓடுக்குமுறை என்பது நவதாராளவாத வடிவத்தைக் கொண்டதாக, தன்னைத்தான் தகவமைத்து கொண்டு வருகின்றது. "நாங்கள் சாதி பார்ப்பதில்லை, எங்கே சாதி இருக்கின்றது" என்று கூறும் - கேட்கும் குரல்கள், நவதாராளவாத சாதிய வடிவத்துக்குள் சாதியை நிலைநிறுத்தும், மேல்நிலைச் சாதிய நவீன வடிவங்களாகியுள்ளது. சாதியை வன்முறை வடிவில் குறுக்கிவிடுகின்ற பொதுப் புத்தி, நவதாராளவாத சாதியத்தை காண முடியாததாக மாற்றுகின்றது.
இந்த வகையில் ஓடுக்கும் சாதியப் படிநிலையில் மேலுள்ள நவதாராளவாத சாதி ஓடுக்குமுறையை 'பரியேறும் பெருமாள்' சினிமா காட்சிப்படுத்தவில்லை. மாறாக சாதிய வன்முறையில் ஈடுபடும் இடைநிலைச் சாதிகளையே, சாதியாக, சாதிய ஒடுக்குமுறையாக காட்டியிருக்கின்றது. அதாவது சாதியை வன்முறை வடிவமாக மட்டும், காட்டி இருக்கின்றது. சாதியத்தின் ஒரு சிறிய கூறு தான் சாதிய வன்முறை. வன்முறை மூலம் சாதியை விளங்கிக் கொள்ளுதல் - விளக்குதல் என்பது, நவதாராளவாத சாதியை பாதுகாத்தல் தான். சாதியென்பது பார்ப்பனியச் சிந்தனையாகவும் - வாழ்வியலாகவும் இருக்க, இதில் ஓரு கூறுதான் சாதிய வன்முறை. 'பரியேறும் பெருமாள்' சாதிய வன்முறையை, சாதியாக காட்டி இருக்கின்றது.
தேர்தல் "ஜனநாயகம்" தனக்கான சவக்குழியை தானே வெட்டுகின்றது
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 05 November 2018
- Hits: 6614
கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை விலை பேசப்;படுதல் என்பது, இலங்கைக்கு மட்டுமான விதியல்ல. "ஜனநாயகம்" என்பது "பெரும்பான்மை"யை நிறுவுவதே என்ற பொருளாகிவிட்ட பின், அதை எப்படியும் பெற்றாலும் சரி என்பதே "ஜனநாயகமாகி" விட்டது. இங்கு கொள்கை, கோட்பாடு, அறம்… எதுவும், பெரும்பான்மை ஜனநாயகத்திற்கு அவசியமற்றது. தனிநபரின் நடத்தைக்கு என்று எந்த விலக்கும் கிடையாது.
தேசிய முதலாளித்துவத்தை முன்னிறுத்தி உருவான பாராளுமன்றம் சாக்கடையாக, கள்ளர் குகையாக, பன்றித் தொழுவமாக, பிரபுக்களின் அடிமைமடமாக இருந்த நிலைமையானது, நவதாராளவாத முதலாளித்துவத்தில் பாசிசத் தன்மை கொண்டதாக - தனக்குதானே புதைகுழியை தோண்டுகின்ற அளவுக்கு முதிர்ந்து வருகின்றது. ஜனநாயகம் என்பது, தனக்கான சொந்த சவக்குழியாக மாறி இருக்கின்றது. ஆக
1. இன்று ஆட்சி பிடிக்க மக்கள் கொள்கை அவசியமில்லை. அதிகாரத்தை பெறுவதற்கான பெரும்பான்மை உறுப்பினர்கள் தான் தேவை. மக்களை தமக்கு வாக்களிக்க வைக்க இனவாதம், மதவாதம், சாதிவாதம், நிறவாதம்.., போதும். இதுவே இன்று கட்சிகளின் கொள்கையாகிவிட்டது. இனம், மதம், சாதி, நிறத்தைச் சொல்லி வென்றாலும், அதன் மூலம் மக்களுக்கு எதையும் கொடுக்க முடியாது. மாறாக இனம், மதம், சாதி, நிறத்தைக் கொண்டு ஓடுக்குவதை பார்த்து மகிழ்ச்சி அடையக் கோருவதுடன், தங்கள் அதிகாரப் பலம் மூலம் தாம் அல்லாத மக்களை ஒடுக்கி சூறையாடக் கோருவதை மட்டுமே தான் முன்வைக்க முடிகின்றது. இதுதான் இன்றைய தேர்தல் முறையாகிவிட்டது.
ஜனநாயகம் - சர்வாதிகாரம் குறித்து, அரசியல் தடுமாற்றங்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 01 November 2018
- Hits: 6628
மக்களை ஒடுக்கியாள்பவர்கள், தாங்கள் உருவாக்கிய சிவில் சட்ட அமைப்பில் நம்பிக்கையற்றவர்களாக, சிவில் சட்டத்தை பொருட்டாக மதிக்காதவர்களாக, சிவில் சட்டம் தமக்கு பொருந்தாது என்று நம்புகின்றவர்களாக இருக்கின்ற போது, சதிகள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் தேர்தல் ஜனநாயகமும், அது உருவாக்கும் ஜனநாயக வடிவங்களைக் கூட, தம் அதிகாரத்துக்கு எதிரானதாக பார்க்கின்றனர். இதனால் ஆட்சியை சட்டவிரோதமாக கைப்பற்றுகின்றனர்.
மகிந்த – மைத்திரி தரப்பு தங்கள் கட்சியின் ஆதரவை பெரும்பான்மையிலிருந்து விலக்கியவர்கள், ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவக் கோரவில்லை. மாறாக தமக்கு பெரும்பான்மை இல்லையென்பதாலேயே சட்டவிரோதமாக ஆட்சியைக் கவிழ்த்து, சட்டவிரோதமான ஒரு ஆட்சியை அமைத்திருக்கின்றனர்.
தேர்தல் "ஜனநாயகத்துக்கு" மக்களை வழிகாட்டி, பாராளுமன்ற ஜனநாயகமே புனிதமானது என்று கூறியவர்கள் தான், பாராளுமன்றத்திற்கு வெளியில் சர்வாதிகார ஆட்சி அதிகாரம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றனர். ஜனாதிபதியுடன் சேர்ந்து கூட்டாக தாங்கள் நடத்திய இந்த சதிக்கு - பாராளுமன்றம் மூலம் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, பணத்தையும்;, பதவிகளையும் பரிசாக கொடுப்பது தொடங்கியிருக்கின்றது. இதன் மூலம் பெரும்பான்மையை விலைக்கு வாங்கிப் பெற்று, தங்கள் ஆட்சியே "ஜனநாயக"மானது என்று, சிவில் சட்டம் நடைமுறைகள் மூலம் நிலைநாட்ட முனைகின்றனர்.
மீ.ரூ ஓடுக்கும் வர்க்கத்தின் குரலா!? - மீ.ரூ பகுதி 2
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 30 October 2018
- Hits: 6697
மீ.ரூ இயக்கமானது ஆபிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த தரனா பார்கெ என்பவரால் 2006 இல் தொடங்கப்பட்டது. 2017இல் ஹாலிவுட் நடிகையான அலிஸா மிலானோ சமூக வலைத்தளம் மூலம் தனக்கு நடந்த பாலியல் கொடுமையை மீ.ரூவாக்கிய பின்பு, உலகம் தழுவியளவில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஒரு சில பெண்கள் தமக்கு நடந்ததை மீ.ரூவாக்கி வருகின்றனர். அலையலையாக வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு காலகட்டத்தில் மி.ரூ மேலோங்கி வருகின்றது. தமிழகத்தில் மீ.ரூ சின்மயி மூலம் மேலெழுந்திருக்கின்றது.
இந்த நிலையில் மீ.ரூவானது வர்க்க ரீதியான மேற்தட்டுப் பெண்களிடத்தில் இருந்து வெளி வருகின்றது. அதேநேரம் சமூக வலைத்தளங்கள் மூலம், பொது சமூக நீதியைக் கோருகின்ற வரம்புக்குள் நடக்கின்றது. இதனால் இந்தக் காரணங்களைச்; சொல்லி ஆணாதிக்கத்தை ஆதரிக்கும் போலி இடதுசாரியம், பெண்களுக்கு எதிராக புளுத்து வருகின்றது.
மேற்தட்டு பெண்களின் மீ.ரூ போராட்டத்தினால் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும், பிற சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒடுக்கப்படும் பெண்களுக்கும் என்ன லாபம் என்று கேட்பதன் மூலம், பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தை பாதுகாக்க முனைகின்றனர். அதேநேரம் மேற்தட்டுப் பெண்களின் மீ.ரூ போராட்டமானது, பெண்விடுதலைக்கு சம்மந்தமில்லாத ஓன்று என்று கூறி மீ.ரூவை எதிர்ப்பதன் மூலம், ஆணாதிக்கத்தை ஆதரிக்கின்றனர்.
மக்களை ஏமாற்ற - புதிதுபுதிதாக தோன்றும் வெள்ளாளியக் கட்சிகள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 25 October 2018
- Hits: 6588
பணம் - பதவி - அதிகாரத்தையே தங்கள் கட்சிக் கொள்கையாகவும், அதையே குறிக்கோளாகவும் கொண்ட தனிநபர்களை அடிப்படையாகக் கொண்டதே, இன்றைய தேர்தல் கட்சிகள். நவதாராளவாதத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்சிகள், தனிநபர்களுக்கு இது விதிவிலக்கல்ல. தேர்தல் ஜனநாயகத்தின் உள்ளடக்கமானது, பணம் - பதவி - அதிகாரமாக சீரழிந்து விட்டது. எந்தப் புதிய கட்சியும், புதிய முகமும், அது பெண்ணாக இருந்தாலும் மக்களை ஏமாற்றும் முகமாற்றத்தை மட்டுமே தர முடியும்.
அரசியல் மாற்றத்தையோ, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுக்கும் மக்கள் திரள் பாதையையோ தரப் போவதில்லை. மக்களை ஏமாற்றும் - ஒடுக்கும் நபர்களை மாற்றுவதன் மூலம், அடுத்த தேர்தல் வரை மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதும், இலங்கையில் முதல் பெண் தலைமைத்துவக் கட்சி என்றும், இந்து சந்நியாசி வேடம் போட்ட வெள்ளாளிய சாமியாரின் தலைமையில் மீண்டும் தமிழ் மக்கள் கூட்டணி என்று எந்த வேசம் போட்டாலும், இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற - ஒடுக்குமுறையாளர்களின் தலைமைகள் தான்.
ஆட்சியின் கடைசி நாள் வரை பழைய கட்சியில் இருந்தவர்கள், ஆட்சிக்கு அடுத்த நாள் புதிய கட்சி. எப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள். மக்களை மொட்டை அடிக்க புதிய வேசங்கள். இப்படி திடீர் திடீரென அரசியலுக்கு கொண்டு வரப்படுவதும், திடீர் திடீரென புதிய கட்சிகள் தோற்றுவிக்கும் பின்னணியில், அந்நிய சக்திகள் இருக்கின்றனர் என்பதே உண்மை. கடந்தகாலம் முழுக்க அந்நிய சக்திகளின் காலில் வீழ்;ந்து கிடந்தார்களே ஒழிய, மக்களைக் கடுகளவு கூட கண்டு கொண்டது கிடையாது. தங்கள் அதிகாரத்தில் செய்யக்கூடிய கடமைகளைக் கூட செய்யாதவர்கள்.
தமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 24 October 2018
- Hits: 7114
நல்ல நாள் பார்த்து, சுப முகூர்த்தத்தில், முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். இக்கட்சியின் ஆரம்ப விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. விக்னேஸ்வரன் அவர்கள் வடமாகாண முதலமைச்சராக பதவியேற்ற போது அவர் ஒரு பொதுவான - ஒரு தமிழ் மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக பிரச்சாரப்படுத்தப்பட்டார். அரசியல் பின்னணி எதுவுமற்ற- அதேவேளை வலதுசாரிய யாழ். சைவ வேளாள சிந்தனையை பின்பற்றுபவராகவும், தானுண்டு - தன் குடும்பமுண்டு என சுயநலமாக இருந்தவரை, கூட்டமைப்பு அரசியலுக்கு கொண்டு வந்தது. ஐந்து ஆண்டுகால பதவியின் அதிகாரம் முடிவதற்கு 12 மணிதியாலங்களுக்கு முன்னரே விக்கினேஸ்வரன் ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். அதற்குப் பெயர் தமிழ் மக்கள் கூட்டணி.
தமிழ் மக்கள் கூட்டணியை ஆரம்பிப்பதற்கு அவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது- ஆதரவாக இருப்பது தமிழ் மக்கள் பேரவை என்று கூறப்படும் அமைப்பாகும். இந்த அமைப்பானது, சில வருடங்களுக்கு முன்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்பட்டு, தமிழ் மக்களின் தேசிய விடுதலையை பெற்றுக் கொள்வதற்கான ஒரு அழுத்தம் கொடுக்கும் முன்னணியாக ஆரம்பிக்கப்பட்டது. இவ் அமைப்பில் இணைந்து கொள்ள நான் அன்று அங்கம் வகித்த இடதுசாரிக் கட்சிகள், மார்க்சிச அடிப்படையிலான முன்னணி அமைப்புகள் கூட சேர்ந்து செயற்பட அழைக்கப்பட்டன. (கோட்பாடுகள், மற்றும் சில கருத்து வித்தியாசங்களால் இடதுசாரிகள் இணையவில்லை)
இதன் பின்னணியில் இலங்கை தமிழ் காங்கிரஸ் - பொன்னம்பலம், குதிரை கஜேந்திரன் போன்றவர்கள் உழைத்தார்கள். அவர்களுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களும் அவசர அவசரமாக ஓடிப் போய் சேர்ந்தார்கள். புளொட் சித்தார்த்தன் பேரவையில் இணையா விட்டாலும், தானும் அதில் அங்கம் வகிப்பது போல காட்டிக் கொண்டார். ஏன், ஈபிடிபி கூட இணைய முயற்சித்ததாக கதைகள் உண்டு.
மீ.ரூவும் (MeToo) ஆணாதிக்கமும் - மீ.ரூ பகுதி 1
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 22 October 2018
- Hits: 6745
ஒரு பெண் மீ.ரூ மூலம் தனக்கு எதிரான பாலியல் வன்முறையை குற்றச்சாட்டாக முன்வைக்கும் போது, அதை எந்த நிபந்தனையின்றியும் ஆதரிக்க வேண்டும். அதற்காக நிபந்தனையின்றி குரல் கொடுக்கவும் வேண்டும். அவளின் பிற கருத்துக்களுக்காக – செயற்பாட்டுக்காக மறுப்பதும், குறித்த பெண்ணின் வர்க்கம், சாதி, நிறம், இனம், மதம் .. போன்ற எந்த குறுகிய அடையாளங்களைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட பெண்ணுக்கு குரல் கொடுக்க மறுப்பது, ஓடுக்கும் ஆணாதிக்க அதிகாரத்துக்கான குரல்களாகவே இருக்க முடியும். இதன் மூலம் பெண்ணைத் தொடர்ந்து தங்கள் பாலியல் அடிமையாக வைத்திருக்க விரும்பும், தனிப்பட்ட ஆண்களின் வெளிப்படையான பொது ஆணாதிக்க மனப்பாங்காக மட்டுமே இருக்க முடியும்.
குறிப்பாக ஆண்கள் பெண்ணுக்காக குரல் கொடுக்க மறுத்து, பெண்ணை கேள்விக்குள்ளாக்குவதே, காலாகாலமாக இந்திய சமூக அமைப்பில் நடந்து வருகின்றது. பெண் மீதான ஆணின் பாலியல் குற்றங்களுக்கு, குறித்த பெண்ணையும் - அவளின் "நடத்தையையும்" காரணமாக கற்பிற்கின்ற கருத்தியல் வாதங்கள் தொடக்கம் நீதிமன்றங்கள் வரை, பெண்ணை குற்றவாளியாகக் காட்டுவதையே தொடர்ந்து செய்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட பெண்கள் மீ.ரூ மூலம் தனக்கு நடந்த பாலியல் கொடுமையை வெளிப்படையாகக் கூறுவதை பொய் என்று நிறுவமுனைவது - குறித்த பெண்ணை குற்றவாளியாக்குவதும் – அவளின் இழி "நடத்தையாக்கி" அதற்கு பட்டத்தை கொடுக்க முனைகின்ற பொதுப் பின்னணிக்கு, ஆணாதிக்க ஊடகங்கள் தலைமை தாங்குவதுடன் - அவள் பற்றி பொது அவதூறுகளைப் பரப்புகின்றன.