எந்த வகை ரத்தமானாலும் மிதிபடுவது சேர்ந்தே நித்தம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 16 February 2016
- Hits: 1169
ஐந்து நிமிடங்களை ஒதுக்கி இதனை முழுவதுமாக வாசியுங்கள்.
சமீபத்தில் அந்த இரத்தம், இந்த இரத்தம் என்று சொல்லி லேபல் ஒட்டிக்கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இலங்கையில் பல்வேறு இன மக்கள் இருப்பதை நாம் அறிவோம். சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலே ஆகிய அனைவரும் இலங்கைக் குடிமக்கள். நாங்கள் அனைவரும் ஒரே கடைக்குத்தான் செல்கின்றோம். ஒரே ஆஸ்பத்திரிக்குத்தான் செல்கின்றோம். ஒரே பஸ்ஸில், ஒரே இரயிலில் செல்கின்றோம். எமது பிள்ளைகள் ஒரே பாடசாலையிலேயே கற்கின்றனர். ஒரே பாடநெறியையே படிக்கின்றாரகள். அரிசி, மா, சீனி, பால்மா போன்றவற்றின் விலைகள் உயரும்போது சிங்களவருக்கு ஒரு விலையிலும், தமிழருக்கு ஒரு விலையிலும், முஸ்லிம்களுக்கு ஒரு விலையிலும், பறங்கியருக்கு ஒரு விலையிலும் மலே இனத்தவருக்கு இன்னொரு விலையிலும் விற்கப்படுவதில்லை. ஆஸ்பத்திரி ஓ.பி.டீ.யில் அலையும்போதும், பாமஸியில் மருந்தை வாங்கும்போதும் அப்படித்தான். பாடசாலையில் வசதிக் கட்டணம் செலுத்தும்போதும், பஸ்ஸில் டிக்கட் வாங்கும்போதும், டிஸ்பென்சரியில் ஊசி போடும்போதும் - இந்த எல்லா இடங்களிலும் நாம் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்று யாரும் கேட்பதில்லை. சற்று சிந்தியுங்கள்.
அரசியல் வியாபாரம் ஒழியட்டும் - மக்கள் நல அரசியல் ஓங்கட்டும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 15 February 2016
- Hits: 5752
ஆங்கிலேயர் ஆட்சியிலும் சரி பின்னர் வந்த சுதந்திர ஆட்சியிலும் சரி இலங்கை அரசியல் என்பது பணம்-பலம்-பொருள் கொண்ட மேற்தட்டு வர்க்க மேலாதிக்கவாத மேட்டுக்குடிகளின் போட்டியும் பங்குச் சண்டையுமாகும். அதன் ஆரம்பம் 1915ல் சிங்கள-முஸ்லீம் கலவரமாகத் தொடங்கி பின்னர் 1949ல் மலையத் தமிழர்களை கொத்தடிமைகளாக்கித் தொடர்ந்து 1956லிருந்து சிங்கள-தமிழ் இனக் கலவரமாக வளர்ச்சி பெற்று இறுதியில் 2009ல் ஒரு பேரழிவை நடாத்தி முடித்து விட்டு மறுபடி ஆரம்பத்திலிருந்து பழைய பாணியில் நடைபோடத் தொடங்கியுள்ளது.
இன்னுமாடா இந்த உலகம் ஐக்கிய நாடுகள் சபையை நம்புது!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 14 February 2016
- Hits: 3301
முதலாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் சங்கம் என்ற அமைப்பை இனி ஒரு போதும் போர் நடக்கக்கூடாது, உலகில் சமாதானம் நிலவவேண்டும் என்று அந்த நாளைய பெருந்தலைகளான பிரித்தானியாவும், பிரான்சும் முன்னுக்கு நின்று 10.01.1920 அன்று தொடங்கினார்கள். (League of Nations, Wikipedia). "ரம்பையின் காதல்" படத்தில் "சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே" என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் சுடுகாட்டில் ஒலிப்பது போல தங்களால் கொல்லப்பட்டவர்களின் மேல் ஏறி மிதித்துக் கொண்டு இந்த கொலனித்துவ கொலைகாரர்கள் "சமாதானம் உலவும் இடமே" என்று உலக நாடுகள் சங்கத்தில் நின்று பாடினார்கள்.
சவுதிக்கும், சபரிமலைக்கும் மாதவிடாய் பெண்கள் என்றால் ஏன் சரியாவதில்லை
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 09 February 2016
- Hits: 3985
சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு பெண்கள் போகக் கூடாது என்று பாரம்பரியம் இருக்கிறதாம். ஏனென்றால் ஐயப்பன் பிரமச்சாரியாம். அதனாலே அவனிற்கு பக்கத்திலே பெண்கள் போகக் கூடாதாம். இந்திய உச்சமன்றம் வரைக்கும் வழக்குப் போய் பத்து வயதிற்கு உட்பட்ட பெண்களும் ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட பெண்களும் போகலாம் என்று வழக்கம் போல் பெண்ணடிமைத்தனத்துடன் காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் மேன்மை தங்கிய நீதிபதிகள். ஏண்டா, ஐயப்பன் என்ன பெண்களிற்கு ஆரம்ப பாடசாலையும், முதியோர் பாடசாலையுமா நடத்துகிறார்?.
சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே?
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 07 February 2016
- Hits: 3112
இலங்கைத் தமிழ்மக்களின் மீதான இன ஒடுக்குமுறையை, தமிழ்மக்களை அழுத்துகின்ற பிரச்சனைகளை இன்று வரை தமிழ்மக்களை ஒடுக்கி வரும் இலங்கையின் இனவெறி அரசுகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று தமிழரின் தலைமைகள் என்று சொல்லிக் கொள்ளும் வலதுசாரி தமிழ்க் கட்சிகள் இன்னமும் இரத்தம் உறையாத ஈர மண்ணில் நின்று கொண்டு நமக்கு சொல்கிறார்கள். இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சிக்கு வருவதற்காக உண்மையான பிரச்சனையான வறுமையை மறைத்து தமிழ்மக்களிற்கு எதிராக இனவாதம் பேசி சிங்களமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி வாக்குகள் பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமருவார்கள்.
தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று மண்டையை மாற்றினாலும் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குப் பொறுக்கும் கொண்டையை மாற்றாத தமிழ்க் கட்சிகள், இலங்கையின் இந்த இனவாதக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்மக்களிற்கு தீர்வு பெற்றுத் தருவோம் என்று கீறல் விழுந்த இசைத்தட்டைப் போல திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் விரோத அரசுகளை காப்பாற்றும் ஐ.நாவின் வழக்கமான நாடகம்
இன்று 07-02-2016 வடக்கிற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் குசைய்ன்; “அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தவறு. அவர்களை வழக்கு விசாரணையின் பின்பே விடுதலை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதற்க்காக மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் விதமாக "சர்வதேச சமுகம் இதனை ஏற்றுக்கொள்வதில்லை" என நியாயம் வேறு கூறிச் சென்றுள்ளார். அதனை ஆமோதித்து வடக்கு முதல்வர் துரிதமாக வழக்குகளை விசாரிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேசத்திற்கு தலையாட்டி சேவகம் செய்வதற்காக தான் முட்டாள் மக்கள், இவர்களை தங்கள் பிரதிநிதிகளாக தெரிந்துள்ளனர் என்பது சம்பந்தன் முதல் விக்கினேஸ்வரன் வரையான நினைப்பு.
தோழர் குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளுக்காக அணிதிரள்வோம்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 07 February 2016
- Hits: 580
மைத்திரி- ரணில் அரசாங்கம், தாம் கடந்த தேர்தல் மூலம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் படிப்படியாக கைவிட்டு வருகிறது என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகின்றது.
அன்றைய அரசாங்கத்தினால், இலங்கை மக்களுக்கு அப்பட்டமாகவே மறுக்கப்பட்டுவந்த நாட்டின் ஜனநாயகத்தினை மீள நிலைநாட்டுவோம் என்பதே ராஜபக்ச ஆட்சி மீது இவர்கள் முன்வைத்த பிரதான கோசமாகும். ஆனால் அரசியலில் பாதிக்கப்பட்டோருக்கு, காணாமலாக்கப்பட்டோருக்கு, அரசியற்கைதிகளுக்கு இவர்களால் எந்த நீதியும் நியாயமும் இன்றுவரை வழங்கப்படவில்லை.
தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றமை சம்பந்தமாக – ஊடக அறிக்கை
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 05 February 2016
- Hits: 931
இம்முறை நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மக்களின் சுதந்திரம் புதைக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திர தினத்தை நினைவு கூறுவது ஒரு புறம் கேலிக்கூத்தாகும். ஆகவே போலி சுதந்திர தினம் தொடர்பில் கடுமையான விமர்சனம் எமக்கு உண்டு. மேலும் தமிழ் மொழி பேசும் மக்கள் எதிர்கொண்டுள்ள தேசிய ஒடுக்குமுறையிலிருந்து அவர்களை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்திற்கு பின்பு சரிந்திருக்கும் வடக்கு மக்களின் வாழ்க்கையை மீளமைப்பதற்கும், அம்மக்கள் மத்தியில் உருவாகியுள்ள சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையை களைவதற்கும் எடுக்க வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. சகல அரசியல் கைதிகளினதும் விடுதலை, காணாமல்போன சகலரினதும் தகவல்களை வெளியிடுதல், மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைத்தல் ஆகியன முக்கிய விடயங்களாக உள்ளன. என்றாலும் அந்த விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கம் ஊமையாகவே இருக்கின்றது.
லண்டன், வெம்பிளியில் பதாகையில் கையெழுத்து போராட்டம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 05 February 2016
- Hits: 679
இலங்கை பிரஜாவுரிமையினை மீள கோரியமைக்காக முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதனை கண்டித்தும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்யுமாறு கோரியும் நாளை சனி 06-02-2016 லண்டனில் உள்ள வெம்பிளி நகர சதுக்கத்தில் பிற்பகல் 2 மணி முதல் பதாகையில் கையெழுத்துப் போராட்டமும் துண்டுப்பிரசுர பிரச்சாரமும் நடைபெறவுள்ளது.
எங்கே சுதந்திரம்? - மக்கள் கூட்டத்திற்கு அழைப்பு
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 02 February 2016
- Hits: 698
பிரித்தானிய காலனித்துவம் 1948ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி தனது நம்பிக்கைக்குரிய உள்நாட்டு ஆளும் வர்க்கம் மற்றும் தமது விசுவாசிகளிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு, இலங்கை மக்களிற்கு சுதந்திரம் வழங்கி விட்டதாக அறிவித்தது. அன்று தொடக்கம் உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள் இன - மத ரீதியாக மக்களை பிரித்து மோத விட்டு - இரத்த ஆற்றை ஓட விட்டவாறு, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தப் போவதாக மக்களை ஏமாற்றி மாறி மாறி ஆட்சிக்கு வருவதும், நாட்டை கொள்ளை அடித்து தாம் செல்வத்தில் திளைப்பதுமாக கதை தொடர்கின்றது.