வாக்குறுதிகளால் வந்த 'மாற்றம்" - 'மாற்றம்" வழங்கும் ஏமாற்றங்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 30 November 2015
- Hits: 6049
கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றிய போது சர்வாதிகாரத்திற்கு எதிரான பொது வேட்பாளராக நிற்பதற்குத் தானாகவே முன்வந்தவர் அண்மையில் மறைந்த வணக்கத்ததுக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் அவர்கள் ஆகும். "சமூக நீதிக்கான மக்கள் இயக்கம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்காகவும் குரல் கொடுத்தவர் அவர். "ஆறு மாதங்களில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது" என்பது அவரது முதலாவது வாக்குறுதியாக இருந்தது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை உண்டு என்பதும் அவரது கொள்கைகளில் முக்கியமானதாக அமைந்திருந்தது. ஊழல்கள்-மோசடிகள் களையப்படல் வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாகவே இருந்தார்.
போர்க்களங்களில் இருந்து திரும்பாதவர்களின் தாய்மார்களுக்காக...
டேய் தம்பி நீ எங்கேடா போனாய்
ராத்திரியல்லோ வாறனெண்டனி அட
ராத்திரியல்லோ வாறனெண்டனி...
மீனில் ஓரு குழம்பும் இறாலில் ஒரு சொதியும்
ஆக்கி வைச்சுக் காத்திருந்தேன்... உனக்காக
இரவு காத்திருந்து விழித்திருந்தேன்
இரவு பகலாக....
ஏன் பிரிந்தாய் சகோதரனே!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 29 November 2015
- Hits: 3246
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி புகையிரதத்தில் தன் இன்னுயிரை இழந்திருக்கிறான் செந்தூரன். தன் சக மனிதர்கள் கொடுஞ்சிறையில் வாடுவது பொறுக்க முடியாமல் அவனது இளைய மனது, இளகிய மனது இந்த துயர முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் அவனது மரணம் அவனது அன்புப் பெற்றோருக்கும், ஆசைச் சகோதரங்களிற்கும் ஆறிட முடியா துயரினைக் கொடுத்ததே தவிர கடும் இருள் சூழ்ந்த கொடுஞ்சிறைகளில் வாடும் கதியற்றவர்களின் விடுதலைக்கு எந்த விதத்தில் உதவுகிறது என்பது கேள்விக்குறியாக எழுகிறது. தானும், தன் குடும்பமும் என்று அற்பவாழ்வு வாழும் மனிதர்களிடையே தன் சக மனிதர்களிற்காக தன் உயிர் துறந்தவன் வாழ்ந்து போராடி இருப்பானே என்றால் அது எவ்வளவு மாற்றங்களை தந்திருக்கும் என்பது ஏக்கமாக எழுகிறது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத்திற்கு அழைப்பு
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 29 November 2015
- Hits: 2811
இலங்கை கொடுஞ்சிறைகளில் பல வருடக்கணக்காக எந்த நீதி விசாரணைகளுமற்று சர்வதேச மனித உரிமைகளிற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, அனைத்து அரசியல் கைதிகளையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நோர்வேயில் இடம்பெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட கண்டன போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் நோர்வே கிளை ஒழுங்கு செய்திருக்கின்றது.
இப்போதாவது காணாமல்போன சகலரினதும் தகவல்களை வெளியிடு!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 26 November 2015
- Hits: 845
இற்றைக்கு 11 மாதங்களுக்கு முன்பு ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை கவிழ்க்கப்படும்போது எமது நாட்டில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் காணாமல் போயிருந்தனர். தமது பிள்ளை- அல்லது கணவர்- அல்லது மனைவி, தாய், தந்தை பற்றிய தகவல்களைத் தேடி இராணுவ முகாம்களுக்கு அலைந்து திரிந்து கதறியழும் மனிதர்களின், பெண்களின் கண்ணீரால் இந்த வடக்கு தீபகற்பம் நிரைந்து வழியுமளவிற்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.
தேடிச்சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு கிடைத்த பதில்
"அப்படி ஒருவரை நாங்கள் கைது செய்யவில்லை" என்பதுதான்.
காணாமல் போனவர்களின் தகவல்களை உடன் வெளியிடு! யாழில் ஆர்ப்பாட்டம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 28 November 2015
- Hits: 1033
காணாமல் போனவர்களின் தகவல்களை உடன் வெளியிடுமாறு கோரி சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் காலை 9.30 மணியளவில் கொட்டும் மழைக்கும் மத்தியில் ஆர்ப்பாட்ட போராட்டம் ஆரம்பமானது.
கடந்த காலங்களில் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் செய்யப்பட்டோர் ஆகியோரின் தகவல்களை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடத்தப்பட்டுக் காணாமல் போனோரை விடுவிக்கக்கோரி யாழில் சமவுரிமை இயக்கம் போராட்டம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 26 November 2015
- Hits: 1077
“காணாமல் போனவர்களின் தகவல்களை உடன் வெளியிடு”
வட-கிழக்கு உட்பட 5000 இக்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு, அல்லது திட்டமிட்ட முறையில் காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, வைகாசி 2009 இல் முள்ளிவாய்காலில் தமிழ் மக்களின் இரத்தம் ஆறாய் ஓட, கூக்குரல்களுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலருக்கு என்ன நடந்ததென்று அரசைத் தவிர ஒருவருக்கும் தெரியாது. இன்றுவரை. தற்போது எவரும் காணாமற் போகச் செய்யப்பட்டோர், கடத்தப்பட்டோர் பற்றி கதைப்பதும் இல்லை. இவர்களின் குடும்பங்களின் நிலை பற்றி அக்கறை கொள்வதுமில்லை. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாம் தான் எனக் கூறிக் கொள்வோர், மைத்திரி-ரணில் அரசைக் காக்கும் விதத்தில் கள்ள மௌனம் காக்கின்றனர்.
கைதிகளை விடுவிக்க சட்டம் தடையாக இருக்கின்றது என்பது உண்மையா?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 27 November 2015
- Hits: 3220
மக்களின் உரிமைகளுக்கு எதிராக, சட்டம் பற்றி சிங்கள-தமிழ் இனவாத ஆட்சியாளர்களும், எதிர்கட்சித் தலைவர்களும் பேசுவதன் மூலம், தொடர்ந்து மக்களை ஒடுக்குவது நடந்தேறுகின்றது.
இதன் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அரசும், அரசியல்வாதிகளும் முன்னெடுப்பதான பிரமையை ஊட்டி; மக்களுக்கு எதிரான ஆட்சியையே "நல்லாட்சி" என்கின்றனர். அண்மையில் மக்கள் சார்ந்த இரண்டு விடையங்கள் மீது, சட்டத்தையும் பேசும் பொருளாக்கி இருக்கின்றனர்.
தற்கொலை ஒரு போராட்ட வழியல்ல..!
போராட்டம் என்பது அப்பாவி மக்களின் மேலான சகல ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக இந்த அதிகார வர்க்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுவது. அரசு தனதும், தன் சார்ந்த அரசியல்வாதிகள், பெருமுதலாளிகளின் நன்மை கருதியே மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளையும், அழுத்தத்தையும் பிரயோகித்து வருகின்றது. ஒரு தனிமனிதனுடைய இழப்பையோ, துன்பத்தையோ, சாவையோ பற்றி எந்த அதிகாரவர்க்கமோ, அரசியல்வாதிகளோ அக்கறை கொள்ளப் போவதில்லை. ஆனால் அக்கறை கொள்வது போல், கண்ணீர் விடுவது போல் நடிப்பார்கள். ஊடகங்களிலே அனுதாப செய்திகளையும், கண்டனங்களையும் வெளியிட்டு அனுதாபப்படுவது போல் நடிப்பார்கள். அடுத்த தேர்தலுக்கு அரசியல்வாதிகளுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பே இப்படிப்பட்ட நிகழ்வுகள். ஆனால் இதனால் பாதிக்கப்படுவது தனிபட்ட முறையில் எமது குடும்பமும், பிள்ளைகளும், பெற்றோரும்.
பயங்கரவாதம் ஒரு மனநோயா!? சுரண்டும் வர்க்கத்தின் தெரிவா!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 25 November 2015
- Hits: 2996
அமைப்பு ரீதியானதும் - சட்ட ரீதியாகவும் செயற்படும் சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு எதிரான அடக்குமுறை (பயங்கரவாதம்) வடிவம் மூலமும் இயங்குகின்றது. சுரண்டலை நடத்துவதில் சுரண்டும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடாக வெடிக்கும் போது, அது வெளிப்படும் வடிவங்களில் பயங்கரவாதம் ஒரு வடிவமாகும்.