சர்வதேச சமூகமும்-ஈழத் தமிழ் சமூகமும்: பெண்விடுதலைக்கான முன்னெடுப்புகள்
2019 ஆண்டின், அனைத்து ஒடுக்கப்படும் பெண்கள் மற்றும் உழைக்கும் பெண்கள் தினம் முடிந்து விட்டது. உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச ஒடுக்கப்படும் பெண்கள் மற்றும் உழைக்கும் பெண்கள்தின ஆர்ப்பாட்ட பேரணிகள் மற்றும் நிகழ்வுகளில் - 1970-களின் பின் இவ்வருடம் பெருமளவில் மக்கள் பங்கெடுத்துள்ளனர். குறிப்பாக வளர்ந்துவரும் புதிய தலைமுறைப் பெண்கள் அதிகளவில் பங்குகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெர்லின் மாநகரில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் நேற்று ஈடுபட்டனர். அத்துடன், பெர்லின் உள்ளூராட்சி அரசு சர்வதேச பெண்கள் தினத்தை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இஸ்தான்புல் நகரில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஆர்ப்பாட்டம் பொலிசாரினால் தடுக்கப்பட்டபோது அங்கு வன்முறை அரச ராணுவத்தினால் அரங்கேற்றப்பட்டது. இஸ்தான்புல் பேரணியில் பங்குகொண்ட சில ஆயிரம் பெண்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதலாளித்துவ கட்டமைப்புக்குள், பெண்கள் பெறக்கூடிய உரிமைகள் அனைத்தும் பெற்றதாக குறிப்பிடப்படும் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்றன. தற்போதுள்ள வலதுசாரிய- கிறிஸ்தவ ஜனநாயக அரசு, சுயமுடிவிலான கருக்கலைப்பு செய்யும் உரிமையை தடைசெய்ய முயன்று வருகிறது. இதற்கு எதிராக நோர்வேயின் தலைநகரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் பல மாநிலங்களில் இடதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்ட் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தில், வரலாறுகாணாத அளவில் பெண்கள் பங்குபற்றியுள்ளனர். தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் கூட தொடர்ச்சியாக சர்வதேச பெண்கள் தினம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
பெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றது
மார்ச் 8 பெண்கள் தினம். தனியுடமையினால் உருவான ஆணாதிக்கச் சமூகத்தை ஒழிக்க, சமூகத்தை சமூகமயமாக்க சர்வதேசிய பெண்ணியவாதிகள் விடுத்த அறைகூவலே மார்ச் 8 ஆகியது. உழைக்கும் பெண்கள் தலைமையில் போராடுவதை குறிக்கின்றது.
உலகமயமாக்கமானது இந்தத் தினத்தை தனியுடமைக்கான பெண்களின் நுகர்வு தினமாகவும், அன்பளிப்புகளை பரிமாறும் சந்தைக்குரிய பெண்கள் தினமாகவும் கட்டமைத்து இருக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இப்படி தான் மார்ச் 8 ஐ அணுகுகின்றனர். ஊடகங்கள் இப்படித் தான் காட்டுகின்றது. பெண்களின் சிந்தனை இப்படித் தான் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது.
ஆணாதிக்கச் தனியுடமை சமூகத்தில் தான், இன்னமும் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். எல்லாச் சிந்தனையும், வாழ்க்கை முறைமைகளும் இதற்குள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி ஒரு பெண் "சுதந்திரம்" பெற்று வாழ்கின்றாள் அல்லது நான் "சுதந்திரமான" பெண் என்பது எல்லாம் பொய்களாலானது. நிலவும் சமூக அமைப்பென்பது ஆணாதிக்கமுடையது மட்டுமின்றி, பெண்ணை அடிமையாக்கிய தனியுடமைச் சமூகமாகவே இருக்கின்றது.
இந்த ஆணாதிக்கச் தனியுடமைச் சமூகத்தில் ஆணின் சமூகப் பொருளாதார வீழ்ச்சி என்பது, பெண்ணை மேலும் அடிமையாக்கும். இதுவே ஆணாதிக்க தனியுடமை சமூக பொருளாதாரக் கட்டமைப்பின் பொது விதியாகும்.
நவதாராளவாதமானது சமூகம் போராடிப் பெற்ற உரிமைகளை படிப்படியாக இன்று பறிக்கும் போது, ஆணாதிக்க சமூகத்தில் வாழும் பெண்;ணுக்கும் அது பொருந்தும்;. பெண் போராடிப் பெற்ற உரிமைகளை இழந்தாக வேண்டும்;. இதுதான் இன்றைய சமூகப் பொருளாதார அமைப்பின் விதி.
சொத்து சிலரிடம் குவிதல் என்பது சொத்துடமை வர்க்கத்தால் மனிதவுரி;மைகளைப் பறிக்கின்ற நிகழ்ச்சி மூலமே சாத்தியம்;. எதிர்ப்பற்ற மனித சமூகம் மூலமே, சொத்துக்கள் குவிய முடியும்;. இந்த பொதுச்சூழலை உருவாக்க, மனிதனின் எதிர்ப்பாற்றலை இல்லாதாக்குவது என்பதே இனறைய சமூக பொருளாதார உள்ளடக்கமாகும். மனிதனின் சமூக ஆளுமைக்கு அடிப்படையான சமூகம் குறித்த பொது அறிவை இல்லாதாக்குவதன் மூலமே, சொத்துக் குவிப்பை எதிர்ப்பு இன்றி அடைய முடியும். இதைத்தான் இன்று ஏகாதிபத்தியங்களும் - நவகாலனிய நாடுகளும் செய்கின்றன.
வெள்ளாளிய சிந்தனையிலான மத வன்முறையும் - வன்முறை குறித்த கண்ணோட்டங்களும்
யுத்தத்தின் பின் ஒடுக்கும் அடையாளங்களாக பௌத்தம் மட்டும் வடகிழக்கில் திடீர்திடீரென முளைக்கவில்லை. மாறாக இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மத அடையாளங்கள் - அங்குமிங்குமாக திடீர் திடீரென தோன்றுவது நடந்தேறுகின்றது. யாழ் சமூக அமைப்பின் சிந்தனைமுறையாக இருக்கும் வெள்ளாளியமானது, சாதிய அடையாளங்களையும் சாதிப் பண்பாடுகளையும், இந்து - கிறிஸ்துவ மத அடையாளங்களையும் சமூகத்தில் திணித்து வருகின்றன.
கோயில்கள் பெருக்கெடுக்கின்றன. சாதிய ஆச்சாரங்கள் கோயில்களில் குடிகொள்கின்றன. பாடசாலைகள் கூட மத அடையாளங்களால் குறுகி வருகின்றது. மக்கள் வறுமையில் வாட, மதங்களோ கொழுத்துக் கொண்டு இருக்கின்றன. கோயிலைச் சுற்றிய பணம் அதிகாரமாக, வன்முறையாக மாறுகின்றது. மனிதனுக்கே உரிய உழைப்பு, உருவாக்கும் சமூக அறங்கள் அழிந்து வருகின்ற பொதுப் பின்னணியில், மதங்கள் தலைமை தாங்குகின்றன. தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைகள் மதமாகவும், மத வெறியாகவும், மத வன்முறையாகவும் மாற்றப்படுகின்றது.
மாட கோபுரங்களாக மாறும் கோயில்;களைக்; கும்பிட மக்களில்லை. கோயில்களின் பின்னால் கொழுத்த கும்பல்களின் தோற்றம், சமூகத்தின் மேலான சமூக அதிகாரமாக மாறியுள்ளது. யுத்தத்தின் பின் அதிகமான புலம்பெயர் நிதி, கோயில்களில் வெறும் கொங்கிரிட் கற்குவியலாக மாறியுள்ளது. இந்தப் பணமானது பாரிய ஊழலை செய்து வளர்ந்த கொழுத்த கும்பலே, மத வெறியையும் - மத வன்முறையையும் செய்வதை கடவுள் நம்பிக்கையாக மாற்றியுள்ளது. இந்து – கிறிஸ்துவ கோயில்கள் வெள்ளாளிய சிந்தனையிலான, சாதிய ஆகம கோயிலாக்கி வருகின்றது. கிறிஸ்துவ கோயில் கூட வெள்ளாளிய சிந்தனையிலான சாதி அடிப்படையிலான சமூக பிரிவுகளையும் - பிளவுகளையும் கொண்டதாக மாறி வருகின்றது.
யுத்தத்தின் பின் தீவிரமாக மதமும், மத அடிப்படைவாதங்களும் சமூகத்தில் புகுத்தப்படுவதன் விளைவே மன்னார் வன்முறை. மன்னார் மோதல் சம்பவம் இனரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை, மத ரீதியாக பிளந்து விடவும், வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்கவும் விரும்பும் தரப்புகளின், ஒடுக்கும் சிந்தனை முறையின் விளைவாகும். இந்துப் பூசாரிகளாலும் இந்து கோயில் நிர்வாகிகளாலும், பாதிரிகளினாலும் திணிக்கப்படும் மத அடிப்படைவாதத்தோடு, ஒடுக்கும் ஆளும் வர்க்கக் கோட்பாடுகளின் விளைவே மன்னார்ச் சம்பவம்.
ஆணாதிக்க யாழ்.சைவ-சனாதன தமிழ்தேசிய பெண்கள் மாநாடும் நானும்
1
இன்று காலை(03.03.2019), யாழ்ப்பாணம் சென்றேன். போகும் வழியில், வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நாதஸ்வர இசைக்கேற்ப மயிலாட்டம், குதிரை ஆட்டம் ஆடும் கலைஞர்கள் நடனமாடி வந்தனர். தெருக்கரையோரம் விடுப்புப் பார்த்தவரை விசாரித்தபோது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேசமகளிர் தினத்தைக் கொண்டாடும் மாநாடு நடக்கவிருப்பதாகவும், அதையொட்டியே இந்த மேளதாளங்களுடனான மகளிர்பேரணி வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் நிற்பதாக கூறினார். நாதஸ்வர வித்வான்கள்
"ஒட்டகத்தைக் கட்டிக்கோ, கெட்டியாக ஒட்டிக்கோ, வட்ட வட்டப் பொட்டுக்காரி...... பத்த வச்சாப் பத்திக்கும், வாய் வெடித்த மொட்டுகாரி.....அதி காலை சேலை சொல்லுமடி மிச்சத்தை"
என்ற தமிழ் பெண்களின் சர்வதேச கீதத்தை உச்சஸ்தாயில் வாசிக்க, குயில் ஆட்ட கலைஞர்களும், குதிரை கலைஞர்களும் துள்ளித்துள்ளி ஆடினார்கள். மகிழ்ச்சி பொங்க, பெருமையாக நூற்றுக்கணக்கான பெண்கள் இசைக்கேற்ப அசைத்துக் கொண்டிருந்தார்கள்.
சனக்கூட்டத்துக்கு இடையில், உற்றுக் கவனித்த போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மணிவண்ணன், குதிரைக் கஜேந்திரன் போன்ற தலைவர்களுக்கு மண்டபத்தின் வாசலுக்கு அதியுச்ச மரியாதையாக அழைத்து வந்தார்கள் சில பெண்கள். கட்சியின் கொடியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றிவைத்தார். பெண்கள் மாநாடு என்றால், அதுவும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மாநாடு என்பதால், அம்மாநாட்டில் பேசப்படும் உரைகளை கேட்கும் ஆர்வத்தில் நானும் உள்ளே நுழைந்தேன்.
மோடியின் பாசிசம் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதைத் தடுக்கவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்
இந்திய பாசிசத்தின் வளர்ச்சியானது, இந்திய மக்கள் மீதான ஒடுக்குமுறையாக மட்டும் குறுகிவிடாது. மாறாக அடுத்த ஜந்தாண்டுகளில் தென்னாசியா முழுவதற்கும் பரவும் அதேநேரம், தன்னை நிலைநிறுத்த ஆக்கிரமிப்பு தன்மை கொண்டதாக மாறும். இதன் முதல் பலி பாகிஸ்தானாகவே இருக்கும். இதுதான் கிட்லரின் பாசிச வரலாறும் கூட.
எப்படி 1930 களில் கிட்லரின் பாசிசம் முழு ஜெர்மனியையும் தன் பின் அணிதிரட்டியவுடன், பிற நாடுகளை ஆக்கிரமித்ததோ, அதே அபாயத்தை அடிப்படையாகக் கொண்டதே இந்திய காவி கார்ப்பரேட் பாசிசவாதமும். உள்நாட்டு நெருக்கடிக்கு தீர்வு காணவும், கார்ப்பரேட் பசிக்கு தீனிபோடவும் அருகில் உள்ள நாடுகளை ஆக்கிரமிப்பது தான், பாசிசத்தின் அடுத்த இலக்காகும். இதை நோக்கி தான் இந்திய காவி கார்ப்பரேட் பாசிசம் தன்னை முன்னிறுத்திக் கொண்டு கொக்கரிக்கின்றது. கார்ப்பரேட் ஊடகங்கள் யுத்த வெறியை முன்வைத்து யுத்தத்தை நடத்தக் கோருகின்றது.
இந்தியாவில் காவி கார்ப்பரேட் பாசிசம் அமைப்பாகி வரும் இன்றைய சூழலில், கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத வண்ணம், கார்ப்பரேட் நலனை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. அதேநேரம் பாசிசத்தை தொடர்வதன் மூலம் கார்ப்பரெட்டை கொழுக்கவைக்கும் அடுத்த ஜந்தாண்டு என்பது, பிற நாடுகளை ஆக்கிரமிப்பதன் மூலம் தான் சாத்தியம். முதலில் பாகிஸ்தானையே இந்து பாசிசம் தனது ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கும்.
இதனாலேயே கார்ப்பிரேட்டின் பாகிஸ்தான் பிரதிநிதியான இம்ரான்கான் இந்தியாவில் நடக்கவுள்ள தேர்தலில், மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் ஆக்கிரமிப்பை அடிப்படையாக கொண்ட பாசிசத்தை தோற்கடிப்பதற்கும், எதிர்காலத்தில் இந்து பாசிசத்திடமிருந்து பாகிஸ்தானை காப்பற்றவும் முனைகின்றார். இதனாலேயே அபிநந்தனை விடுதலை செய்ததன் மூலம், உடனடி யுத்தப் பதற்றங்கள் மூலம் தேர்தலை வெல்லும் காவி பாசிச பயங்கரவாத உத்தியை தோற்கடித்துள்ளார். இந்தியா முன்தள்ளிய பாசிச பயங்கரவாத சதியை முறியடித்துள்ளார்.
காவி கார்ப்பரேட் பாசிசமானது முஸ்லிம் வெறுப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் காவி இந்து கார்ப்பரெட் பாசிசத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த, மீண்டும் மோடி தலைமையிலான பாசிசம் தோற்கடிப்படுவதன் அவசியத்தை பாகிஸ்தான் இனம் கண்டு சரியான ராஜதந்திரத்தைக் கையாண்டுள்ளது. இந்த வகையில் பாசிசத்துக்கு எதிரான வரலாற்று ரீதியான நிகழ்வாக, பாகிஸ்தானின் இராஜதந்திரம் மாறியுள்ளது.
காணமலாக்கப்பட்டவர் போராட்டத்தை காணாமலாக்க முனையும் சமூக விரோதிகள்
ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட முடியாத எந்தப் போராட்டமும் தோற்கடிக்கப்படுவதுடன், வரலாற்றில் இருந்து காணாமலாக்கப்படும். தமிழ் மக்களை ஒடுக்கிய தமிழர்களும், தொடர்ந்து ஒடுக்கும் தமிழர்களின் கைகளில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம் சிக்கியுள்ளதுடன், சின்னாபின்னமாக்கப்படுகின்றது. ஏகாதிபத்திய பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்டு, மனிதவுரிமையை வரையறுக்கும் ஐ.நாவின் மூலம் தீர்வு என்று போலியான புரட்டைக் கொண்டு, போராட்டம் மழுங்கடிக்கப்படுகின்றது.
தங்கள் உறவுகளைத் தேடி போராடுபவர்களின் உணர்வுகளுடன், தமிழ் சமூகம் அணிதிரளத் தயாராகவில்லை. இந்த தமிழ் மக்களை அணிதிரளாது தடுக்கும் தேர்தல் கட்சிகள், தமிழ்மக்களை இதற்காக அணிதிரட்டும் மக்கள் அரசியலை செய்வதில்லை. தேர்தல் கட்சிகள் இந்த போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் இந்தப் போராட்டத்தில் தங்கள் முகத்தைக் காட்டவும் - தங்கள் தலைமையில் நடப்பது போன்று ஊர் உலகத்துக்கு காட்டும் வக்கிரத்தையுமே அரங்கேற்றுகின்றனர். இந்தப் போராட்டத்தை நடத்தும் மனிதர்களின் மனித அறத்தையே காயடிக்கும், சமூக விரோதிகளாக மாறி தம்மை முன்னிறுத்துகின்றனர்.
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமென்பது, தங்கள் உறவுக்கு என்ன நடந்;தது என்பதை விசாரணை செய்யக் கோருகின்றது. இன்னமும் தங்கள் உறவுகள் உயிருடன் இருப்பதாக நம்பும் உளவியலுக்குள்ளாகி மனச்சிதைவுக்குள்ளாகும் மனிதர்களின் மனநிலை மீது, கண்டகண்ட நாய்களெலாம் மூத்திரம் பெய்வதும், அதை விளம்பரம் செய்வதுமே நடக்கின்றது.
யாரெல்லாம் மனிதர்களைக் காணாமாலாக்கினரோ, அவர்கள் இந்தப் போராட்டத்தை தோற்கடிக்கும் வண்ணம் வழிநடத்துகின்றனர். அவர்களை நம்பி நிற்கும் போராட்டமானது, வெற்றி பெற முடியாத சகதிக்குள் முடங்கிப் போக காரணமாகின்றது.
காணாமல் போனவர்கள் யார் – அவர்களை காணாமலாக்கியவர்கள் யார்?
வெனிசுலாவின் அரசுடமை மூலதனத்தைக் குறிவைக்கும் அமெரிக்க "ஜனநாயகம்"
வெனிசுலாவில் ஏழை எளிய மக்களுக்கு செல்வம் பகிரப்படுவதற்கு எதிரான, ஏகாதிபத்தியங்களின் கூச்சல் தான் "ஜனநாயகமாக" காட்டப்படுகின்றது. பணக்காரன் தொடர்ந்து பணக்காரனாக கொழுப்பதற்கு தடையான வெனிசுலாவின் பொருளாதாரக் கொள்கை என்பது, ஜனநாயகத்துக்கு முரணானது என்பதே மூலதனக் கொள்கை. மக்களால் தேர்ந்தெடுத்த தேர்தல் கட்சி ஆட்சி மூலம் தேசியமயமாக்கல் என்பது, ஏகாதிபத்தியங்களால் சகித்துக் கொள்ளப்படுவதில்லை. இதுதான் வெனிசுலா நெருக்கடியாகும்.
ஹியூகோ சாவேஸ் அரசு, 1999 முதல் 2013 வரையான ஆட்சிக் காலத்தில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செலுத்தி வந்த ராயல்ட்டி தொகையை 1 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்த்தியது. இப்படி வெனிசுலாவின் நெருக்கடி ஆரம்பமானது.
கிடைத்த புதிய செல்வத்தில், 66 சதவீதத்தை சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தினர். மின்சார நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் பொதுத்துறையாக்கப்பட்டன. உலகமயக் கொள்கைகளுக்கு முரணாக வெனிசுலா பயணம் தொடங்கியது. பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியை, கியூப ஆசிரியர்களின் உதவியுடன் வழங்கிய து. உலகில் மலிவான கட்டணத்தில் மின்சாரம் வழகியது.
பண்டமாற்று முறையில், எண்ணெய்க்குப் பதிலாக கியூபா மருத்துவர்கள் வெனிசுலா வந்தனர். வெனிசுலா மக்களுக்கு இலவசமாக முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைத்தது. உருகுவேயிடமிருந்து, எண்ணெய்க்குப் பதிலாக மாடுகள் பெறப்பட்டது.
இந்த அரசியல் பின்னணியில் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி, அமெரிக்காவின் ஆசியுடன் திடீர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டது. ஹியூகோ சாவேஸ் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதுடன், சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டுக் கொடுத்த இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கான பணத்தை “ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை” என்ற அமெரிக்க அரசின் துணை அமைப்பு வழங்கியது. அமெரிக்கக் கைக்கூலியான எண்ணெய் நிறுவன முதலாளி, புதிய அதிபராக்கப்பட்டார்.
ஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம். அதன் அடிப்படை என்ன ?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 26 February 2019
- Hits: 6570
தமிழ் மொழியை எடுத்துக் கொண்டால் அதற்கு, மண் தோன்றிக் கல் தோன்றாக் காலத்திலிருந்தே கலை - இலக்கிய வரலாறு உள்ளதென கூறப்படுகிறது. ஆனாலும், "பல்லாயிர " வரலாற்றுக்கு வெளியில் அம் மொழிக்கு Aesthetic -அழகியல் பற்றிய தத்துவப் பார்வை-ஆய்வுமுறை இருந்ததா என்றால் ....... எனக்குப் பதில் தெரியாது.
வளர்ச்சியடைந்த மொழிகள் எல்லாவற்றினதும் கலை -இலக்கிய உருவாக்கமென்பது, பெரும்பாலும் ஐரோப்பிய கலை -இலக்கிய கோட்பாடுகளின் அடிப்படையையே இன்று அடித்தளமாகக் கொண்டவை.
ஆதலால், இன்றய தமிழின் Aesthetic -அழகியல் பற்றிய கோட்ப்பாடுகளும் ஐரோப்பிய மெய்யியல் சார்ந்தவையாகவே கருதுகிறேன்.
Aesthetic (-அழகியல் ) என்ற ஆங்கில வார்த்தையின் தாய் வார்த்தை கிரேக்க மொழியிலான aesthetica என்பதாகும். இதன் அர்த்தம், புலன்களினூடு வெளிப்படும் அறிவு என மொழிபெயர்க்கலாம்.
கலை -இலக்கியம் உருவாக்கப்படும் எந்த மொழியாக இருப்பினும், அம் மொழி பேசப்படும் -உபயோகிக்கப்படும் சமூகம் சார்ந்த ஆதிக்க சிந்தையே - அச் சமுகத்தில் உருவாகும் கலை -இலக்கியத்தின் உள்ளடக்கத்தை, அழகியலை தீர்மானிக்கிறது. ஆதிக்க சிந்தனையின் அடித்தளமானது அரசியல்-பொருளாதாரத்தின் வெளிப்பாடு-உற்பத்திப்பொருள்.
காணாமலாக்கப்பட்ட முகிலனும் - பாசிசமும்
1987 ஆம் ஆண்டு மார்ச் 28ம் திகதி மாலை 6.30 மணியளவில் நான் (இரயாகரன்) காணாமலாக்கப்பட்டேன். வெளியுலகில் எனக்கு என்ன நடந்தது என்பது, பொது மக்களுக்கு தெரியாது. 80 நாட்களின் பின் நானாக தப்பிய பின் தான், புலிகளால் கடத்திச் செல்லப்பட்டதும், அவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்ய இருந்த செய்தி பொது மக்களுக்கு தெரிய வந்தது. ஆம் புலிகள் மக்களின் ஜனநாயகத்தைக் கண்டு அஞ்சினர். தங்கள் நடத்தைகள் மூலம் மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கி, சமூகத்தை சிறுகச்சிறுக பாசிசமாக்கிக் கொண்டு இருந்த காலத்திலேயே நான் காணாமலாக்கப்பட்டேன். மக்களை அறிவூட்டக்கூடிய, மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய, ஜனநாயகத்தினை கையாளக்கூடிய நபர்களை காணாமலாக்கி கடத்திச் செல்வதும், இனந்தெரியாத நபர்களின் போர்வையில் கொன்று விடுவதே புலிப் பாசிசத்தின் அரசியல் தெரிவாக இருந்தது.
புலிகள் தவிர்ந்த பிற இயக்கங்களும் 1986 முன் இதைத் தான் செய்தன. 1986 பின் பிற இயக்கங்களை அழித்த பின், தாம் அல்லாத அனைவரையும் புலிகள் கொன்றனர் அல்லது காணாமலாக்கினர். இதன் மூலம் ஜனநாயகம் மறுக்கப்பட்ட சமூகமாக, சமூகமே படிப்படியாக பாசிசமாகியது. ஜெர்மனியில் கிட்லரின் ஆட்சியின் கீழ் சமூகம் எப்படி பாசிசமாகியதோ, அதேபோன்று புலிப்பாசிசமே தமிழ் சமூகத்தின் பொது மொழியானது.
இன்று இலங்கை அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடத்தும் போராட்டம், இறுதியுத்தத்திலும் - புலிகளின் அமைப்பில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பானதே. இதைவிட காணாமலாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, வெவ்வேறு வரலாற்றுக் காலத்திற்கும், பல அரசியல் பின்புலமும் கொண்டு காணப்படுகினறது. பல அடுக்குகள் கொண்ட இலங்கைப் பாசிசமானது, இயக்கங்கள் - அரசு என்ற இரண்டு எதிர் முகாம்களில் கோலோச்சியிருந்தது. தமிழ் - சிங்கள – முஸ்லிம் இன மத வாதம் மூலம் மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்கும் பாசிசமாக இயங்கியது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைகளை மறுக்கவும், சிலர் கொழுக்கவும் முடிந்தது. இதுதான் இலங்கையின் பாசிச வரலாறு.
பாசிச காவிப் பயங்கரவாதம் மீதான தனிநபர் பயங்கரவாதமே, காஸ்மீர் தாக்குதல்
பாலஸ்தீனத்தை 1948 இல் இஸ்ரேல் ஆக்கிரமித்ததுக்கு நிகரானதே, 1948 இல் காஸ்மீர் மீதான இந்திய ஆக்கிரமிப்பு. 1948 இல் இந்தியாவால் காஸ்மீர் ஆக்கிரமிக்கப்பட்ட நாளில் இருந்து, காஸ்மீர் மக்களின் போராட்டமும் தொடர்ந்து நடந்து வருகின்றது.
காஸ்மீர் மக்கள் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக, தங்களது தேசத்தின் சுதந்திரத்துக்கான ஒரு விடுதலைப் போராட்டத்தையே அன்று முதல் இன்று வரை நடத்துகின்றனர். அதேநேரம் இந்தியாவும் – பாகிஸ்தானும் தமக்கிடையில் காஸ்மீரை பங்குபோட்டுக் கொண்டு, நாட்டை பிரித்து வைத்திருக்கின்றனர். இதன் மூலம் இந்து - முஸ்லீம் என்ற மத அடிப்படைவாதத்தை சொந்த நாட்டுக்குள் தூண்டி விடவும், மக்களிடையே பிரிவினைவாதத்தை திணிக்கவும், இந்தியா - பாகிஸ்தான் மக்களை பிரித்து வைத்திருக்கவும், காஸ்மீர் மக்கள் மேலான அரசின் காவிப் பயங்கரவாதமானது ஏவிவிடப்படுகின்றது.