இலக்கியம், அரசியல் பேசும் இஸ்லாமிய ஆண்கள் மத அடிப்படைவாதிகளே
பெண் என்பவள் இயற்கை விதிப்படி உயிரை அழிப்பவளல்ல. சமூகத்துக்கே உயிர் கொடுப்பவள். இதன் வழி பாத்திமா மஜிதா, ஸர்மிளா செயித், தங்கள் கருத்துகள் மூலம், முஸ்லிம் சமூகத்திற்கு உயிர் கொடுக்க முனைகின்றனர். அந்த கருத்து உயிர் வாழ்வதற்கே போராடுகின்ற பொது அவலத்தைக் காண்கின்றோம். உண்மையில் குண்டு வைத்த பயங்கரவாதியை விட, மத அடிப்படைவாதம் சமூகத்தில் புரையோடிக் கிடப்பதைக் காட்டுகின்றது.
இஸ்லாமிய பயங்கரவாதம் மீதான எமது அரசியல் நேர்மை குறித்து!?
இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில் நடத்திய தாக்குதலின் பின்னணி குறித்து, அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நாங்கள் கதைக்க முற்பட்ட போது, புதிய ஜனநாயகக் கட்சி எங்கள் அரசியல் நேர்மை குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றது. அதாவது "உங்களை மிகக் கேவலமாக வெளிப்படுத்திக் கொண்டீர்கள். உங்கள் அரசியல் நேர்மை பற்றி இருந்த சந்தேகங்கள் தீர்ந்தன." என்கின்றனர். இதற்கு அவர்கள் கட்சியைச் சேர்ந்த பலர் லைக் போட்டு பாராட்டி இருப்பதன் மூலம், தங்கள் இந்தக் கருத்தை உறுதி செய்துள்ளனர். நாங்கள் எங்களை நோக்கியும் உள்ளீடாக ஆராய மறுப்பவர்கள் அல்லர். விமர்சனம் சுயவிமர்சனம் என்ற நெறிமுறை வழி மாற்றங்களை எமக்குள் விளைவித்துக் கொண்டிருப்பவர்கள். அதுவே தான் அரசியல் நேர்மை. அதேநேரம் நாங்கள் எழுப்பிய அரசியல் எப்படி நேர்மையற்றது என்று சொல்ல முடியாத அளவுக்கு, அரசியல்; நேர்மையற்று வக்கற்றுக் கிடப்பது நீங்கள் என்பதே உண்மை.
இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறுவது தவறா!?
இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூறுவது தவறு, இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது, இப்படி மழைக்கு முளைத்த காளான்கள், இடதுசாரியத்தின் பெயரில் உளறுகின்றனர். இந்தியாவில் இந்துப் பயங்கரவாதம் குறித்தும், காவிப் பயங்கரவாதம் குறித்தும், பார்ப்பனிய பயங்கரவாதம் குறித்தும் பேசும் இந்திய இடதுசாரி அரசியலுக்கு முரணாக, இலங்கை இடதுசாரிகள் பயங்கரவாதத்தின் மூலத்தை மறுதளிக்க முனைகின்றனர். பார்ப்பனியம், வெள்ளாளியம் .. என்று, சாதிய சிந்தனையைக் கூறக் கூடாது என்று எப்படி வாதிடப்படுகின்றதோ, அப்படித்தான் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறக் கூடாது என்கின்றனர்.
இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரைக் கொல்லவில்லை
இலங்கை ஆட்சி அதிகாரத்தை கொண்ட பௌத்த பேரினவாதம் மீது, இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவில்லை. சிறுபான்மை இன மதப் பிரிவுகள் மீது, திட்டமிட்ட ஒரு தாக்குதல் நடந்தது என்பதே வெளிப்படையான உண்மை.
பாதிக்கப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட இன மதத்திற்கான குரல்கள் மட்டுமே, அந்த மக்களின் அவலம் குறித்து அக்கறைப்படும் என்பது வெளிப்படையானது. ஆனால் அதற்கான குரல்கள் எதுவும், எதார்த்தத்தில் எழவில்லை என்பதும் உண்மை.
பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாதவர்கள், இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்கள் குறித்து பேசுவதன் மூலம், போலியான மனிதாபிமானத்தையும், ஐக்கியத்தையும் கட்டமைத்து காட்ட முனைகின்றனர்.
இலங்கை இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் இலக்கு எது என்பது குறித்து..!
இலங்கை இஸ்லாமிய பயங்கரவாதமானது, தமிழ் மக்களை இலக்கு வைத்தது என்பது தற்செயலானதல்;ல. சிங்கள – பௌத்த சமூகத்தை குறிவைப்பதை, இஸ்லாமியப் பயங்கரவாதம் தவிர்த்திருக்கின்றது. 1980 க்குப் பிந்தைய இஸ்லாமிய அரசியல் வரலாறு என்பது, பௌத்த பேரினவாதத்துடன் கூட்டு அமைத்துக் கொண்டு தமிழ் மக்களை ஒடுக்கியது தான். மிக திட்டமிட்ட நீண்ட அரசியல் நகர்வின், மற்றொரு பரிணாமமாகவே இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலை புரிந்து கொள்ள முடிகின்றது.
இது வரலாற்று ரீதியானதும் கூட. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முதல் அரசியல் வரை, தமிழ் மக்களை எதிரியாக முன்னிறுத்தியே அரசியலை நடத்தி வந்திருக்கின்றது, நடத்தி வருகின்றது. ஆளும் பௌத்த பேரினவாதத்துடன் கூட்டு அமைத்துக் கொண்ட முஸ்லிம் மத அடிப்படைவாத அரசியல் என்பது, தமிழ் மக்களை ஒடுக்குவது தான். முலையகக் கட்சிகள் போல் பிழைப்புவாதக் கட்சியாகவும், தமிழ் மக்களை எதிரியாக காட்டும் மதவாதக் கட்சியாகவுமே தன்னை நிலைநிறுத்தி வந்திருக்கின்றது.
இஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்
290 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று, இலங்கையில் இஸ்லாமிய மதவெறியாட்டத்தை நடத்தியிருக்கின்றது இப் பயங்கரவாதம். இது தனிப்பட்ட மனிதனின் மதச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்ட, மனித வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒருங்கிணைக்கப்பட்ட மதப் பயங்கரவாதமாகும். பெரும்பான்மை இஸ்லாம் மக்களின் மதவழிபாட்டுக்கு முரணானதும் கூட. இருந்த போதும் பயங்கரவாத வழிமுறை, இஸ்லாம் மார்க்கம் என்று கூறிக்கொள்ளும் ஒரு பிரச்சாரத்தின் பின்னணியில் வைத்து அணுகவேண்டியது அவசியமாக இருக்கின்றது.
இந்த தற்கொலை தாக்குதலானது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பின்னணியில், இலங்கை மற்றும் அன்னிய நாட்டைச் சேர்ந்த மதவெறிக் கும்பலொன்றினால் திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த தாக்குதலானது இலங்கையில் பொதுவான பல்வேறு மதம் சார்ந்த மதவாதங்களில் இருந்தும், தனித்துவமானவை. சர்வதேசரீதியான இஸ்லாமிய பயங்கரவாத பின்னணியைக் கொண்ட, ஓருங்கிணைந்த ஒரு தாக்குதலாகும். உலகெங்கும் நடந்து வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஒரு நீட்சியும் கூட.
இந்த இஸ்லாமிய பயங்கரவாத மதவெறி சக்திகள் இலங்கையில் காலூன்றியதென்பது, இலங்கையில் புரையோடி வரும் இஸ்லாமிய பழமைவாத கண்ணோட்டத்துடன் தொடர்புபட்டது.
இஸ்லாமிய அடிப்படைவாதமென்பது இலங்கையில், முஸ்லிம் - இஸ்லாமிய பின்னணியில் உருவான பல்வேறு கட்சிகளின் வருகைகளுடன் தொடர்புபட்டது. இன்று இலங்கையிலுள்ள முஸ்லிம் - இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்துமே, இஸ்லாமிய மதவெறியை அடிப்படையாகக் கொண்டவையே. இலங்கையில் தேர்தல் கட்சிகள் இனவாத அடிப்படையைக் கொண்ட கட்சிகளாக இருக்கும் சூழலில், முஸ்லிம் சமூகம் விதிவிலக்காக இருக்கின்றது. அதாவது இனம் சார்ந்த கட்சியாக அல்லாமல் இஸ்லாம் சார்ந்த, மதவாதக் கட்சிகளாகவே இருக்கின்றது.
இந்தியத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து!
பகுத்தறிவுவாதிகள், பெரியாரிஸ்ட்டுகள், ஜனநாயகவாதிகள்.., தேர்தல் மூலம் மோடியைத் தோற்கடிக்குமாறு கோருகின்றனர். இந்த வழியைத் தவிர வேறு வழியில் மோடி பாசிசத்தை தோற்கடிக்க முடியாது என்பதே, இத்தகைய முதலாளித்துவ புத்திஐPவிகளின் பொதுக் கண்ணோட்டமாகும். இவாகள் கூறுவது போல் இந்த தேர்தல் மூலம் மோடி பாசிசத்தை தோற்கடிக்க முடியாது போனால், இவர்கள் என்ன சொல்வார்கள்? என்ன செய்வார்கள்? அடுத்த தேர்தல் வரை காத்து இருக்கக் கோருவார்களா!? இவர்கள் கூறுவது போல் வேறு மாற்று கிடையாதல்லவா!
இல்லை, நாங்கள் பாசிசத்தை எதிர்த்து மக்களின் அதிகாரத்துக்காக போராடுவோம் என்று கூறுவார்களெனின், அதைத்தான் இந்த தேர்தலில் மக்களுக்கு சொல்லி இருக்க வேண்டும். அது மட்டுமே பகுத்தறிவாகும். காவிமயமாகியுள்ள பார்ப்பனியத்துக்கு எதிரான உலகக் கண்ணோட்டம். பாசிசத்துக்கு எதிரான மக்களின் ஜனநாயகத்துக்கான குரலாகும். இதற்கு மாறாக முதலாளித்துவ புத்திஜீவிகளின் செயற்பாடுகள் தான், காவி காப்பரேட் பாசிச சிந்தனைமுறையாக, சமூகத்தில் ஊற்றெடுக்கின்றது.
மறுபக்கத்தில் சமூக மாற்றம் மூலம் மக்கள் அதிகாரம் என்பது மக்களின் சிந்தனையாக, நடைமுறையாக உருவாகும் வரை, தேர்தல் முறை இருந்து கொண்டே இருக்கும். மக்கள் வாக்களித்துக் கொண்டு இருப்பார்கள். தேர்தல் மூலம் எந்த சமூக மாற்றமும் நடக்கப்போவதில்லை, வெறும் முகமாற்றம் மட்டுமே சாத்தியம். இப்படி இருக்க தேர்தலை விட்டால் வேறு என்ன தீர்வு என்று கேட்பது பகுத்தறிவல்ல. அறிவுத்துறைக்குரிய நேர்மையுமல்ல. இதுதான் முதலாளித்துவ அறிவுத்துறைக்கேயுரிய வர்க்க நிலைப்பாடாகுமே ஒழிய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைப்பாடல்ல. சினிமாவில் மக்களின் விருப்புக்கும், ரசனைக்கும் படம் எடுக்கின்றோம் என்று கூறி, பெண்ணை பாலியல் உடலாகக் காட்டுகின்ற அதே தர்க்கவாதம் தான்.
மக்களை அரசியல்ரீதியாக விழிப்பூட்டுவதுதான், தேர்தல் குறித்த பகுத்தறிவுவாதமாகும். ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன் வேட்பாளரை தேர்தலில் நிறுத்தி தன் வர்க்கப் போராட்டத்தின் கூறாக தேர்தலைப் பயன்படுத்தாத போது, தான் அல்;லாத ஒடுக்கும் வர்க்கத்திற்கு வாக்களிக்க கோருவதல்ல. பார்ப்பனியமாக இருக்கக்கூடிய ஆணாதிக்கம், மதவாதம், சாதியவாதம்.. போன்ற ஒடுக்குமுறைகளை தங்கள் கட்சிக் கொள்கையாகக் கொண்டுள்ள, ஒப்பீட்டளவில் ஒடுக்குமுறை குறைந்த ஒன்றை தெரிவு செய்யுமாறு கோருவதே, முதலாளித்துவம் கூறும் மாற்றாக இருக்கின்றது. இங்கு மாற்று என்பது போலியானது, மக்களை தவறாக வழிகாட்டி ஏமாற்றுவதுதான் முதலாளித்துவ மாற்று.
தேர்தல்முறை ஆட்சி வடிவமாக இருப்பதும், வாக்களிப்பது என்பது எதார்த்தமாக இருக்கின்றது. யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் சொந்த அனுபவத்தில் இருந்து எடுக்கின்றனர். இல்லையென்றால் இனம், மதம், சாதி, பால், பணம்.. சார்ந்த தூண்டுதல்கள், மூலம் வாக்கைப் போடுகின்றனர். மறுபக்கத்தில் கட்சிகள் அறிவிக்கும் சலுகைகள், சீர்திருத்தங்கள் … மூலம், தங்கள் வாழ்க்கை மாறும் என்று நம்பி வாக்களிக்கின்றனர். இங்கு முதலாளித்துவ அறிவுத்துறை முன்வைக்கும் பாசிச எதிர்ப்புக் கொள்கை அடிப்படையில், மக்கள் வாக்கு போடுவதில்லை.
தென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் (தமிழ்) இடதுசாரி அரசியல்
1980 களில் புலிகள் தொடங்கி இன்றைய கூட்டமைப்பு வரை, தென்னிந்திய திருச்சபையின் அனுசரணை பெற்ற அரசியல் தலையீடு, தமிழ் அரசியல் திசைவழியைத் தீர்மானித்து வந்திருக்கின்;றது. இயக்கங்களின் ஜனநாயக மறுப்புக்கு எதிரான ஜனநாயக அரசியல் திசைவழியை தீர்மானிப்பதிலும் கூட, தீர்க்கமாக தலையிட்டு வந்திருக்கின்றது. இவை அனைத்தும் மேற்கு சார்பு அரசியலை முன்னிறுத்தியதுடன், மேற்கு தலையீடுகள் மூலம் அரசியல் தீர்வு என்னும் நம்பிக்கையை வழிகாட்டியது, வழிகாட்டுகின்றது,
இந்த வகையில் வலது முதல் இடது வரையான, தமிழ் மொழி அரசியலில், தென்னிந்திய திருச்சபையின் அனுசரணை பெற்ற தலையீடுகளும் - வழி நடத்தலும் சமூகத்தை பின்நோக்கி நகர்த்தி வந்திருக்கின்றது. இன்று இலங்கை தமிழ் இடதுசாரியத்துக்குள் புகுந்துள்ளனர்.
தமிழ் மொழியிலான இலங்கை இடதுசாரியமானது, வர்க்கப் புரட்சியை முன்வைக்கும் வர்க்கக் கட்சியாக இல்லாத அதன் வர்க்க அரசியல் வறுமையை பயன்படுத்தி, அதற்குள் ஊடுருவி வருகின்றது. அதாவது புரட்சிகரக் கட்சிக் கொள்கை, புரட்சிகரமான வர்க்க நடைமுறை, புரட்சிகரமான அமைப்பு வடிவத்தைக் கொண்டு இருக்காத தமிழ் சூழலை, தென்னிந்திய திருச்சபையின் பின்னணி கொண்ட தனிநபர்களின் ஆதிக்கத்துக்குள்ளாகி வருகின்றது. கட்சி முதல் கட்சி அல்லாத உதிரிகள் வரை, அதன் செல்வாக்கில் சிக்கி வருகின்றனர். இடதுசாரியம் பேசுவதன் மூலமும், தன்னார்வ நிறுவனங்கள் மூலமான ஆய்வுகள் முதல் தங்களிடத்தில் உள்ள நடைமுறை வளங்களைக் கொண்டும், பொருளாதார பலம் மற்றும் பௌதிக வளங்களை கொண்டும், இடதுசாரியத்தை தன்வசப்படுத்தி வருகின்றது.
இந்த தென்னிந்திய திருச்சபையின் பின்னணியென்பது, அமெரிக்காவின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் அரசியல் பின்னணியையும், அதற்கான பலத்தையும் கொண்டது.
தென்னிந்திய திருச்சபையானது 1947 ஆண்டில் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த லண்டன் மிசனெரி சங்கம், மதுரை அமெரிக்கன் மிசன், மற்றும் யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிசன் சபை… ஒன்றுசேர்ந்து உருவாக்கியது. அதாவது தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புரட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இது இலங்கையில் இரண்டாவது மிகப்பெரிய கிறிஸ்தவ குழுவாகும். பாரிய பணபலப் பின்னணியைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் 187 பாடசாலைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றது.
கல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்
அண்மையில் ஜீ.சி.ஈ (சாதாரண) பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, வடகிழக்கு கல்வித்தரம் குறித்து பலர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த கல்விப் பெறுபேறுகளை கொண்ட மாவட்டங்களாக, வடகிழக்கு இருப்பதே இதற்கு காரணம். ஓப்பீட்டு அடிப்படையில் காரணங்களை முன்வைப்பதும், தீர்வுகள் முன்வைக்கப்பட்டதையும் காணமுடிகின்றது. ஒட்டுமொத்த கல்வி மற்றும் சமூகம் குறித்த பொது உள்ளடக்கத்தை விட்டுவிட்டு, இவை வெளிப்புறத்தைப் பற்றி பேசுகின்றனவாக இருக்கின்றன.
இப்படி கல்வியின் வீழ்ச்சி குறித்து அடிப்படைக் கண்ணோட்டமே, தவறான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கின்றது.
1.கல்வியின் வீழ்ச்சிக்கு சமூகத்தின் பங்கு என்ன என்பதை ஆராய்வது பொதுவாக மறுதளிக்கப்படுகின்றது. மாறாக சமூகத்தைச் சுற்றி இயங்கும் உதிரிச் சம்பவங்களை காரணமாகக் காட்ட முனைகின்றனர்.
2.கல்வியை மாவட்டரீதியாக பகுத்தாய்வு செய்வதென்பது, சொந்த இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்துதான். இது கல்வி வீழ்ச்சி குறித்த புரிதலில், குறைபாட்டைக் கொண்டது. இதன் மூலம் கல்வி சுயநலம் சார்ந்தாக, பணம் சம்பாதிப்பதற்கானதாகிவிட்டதை மூடிமறைக்க முனைகின்றது.
3.மாவட்டரீதியான ஒப்பீடுகள் மூலம் கல்வித்தரத்தை அணுகுவது என்பது, கல்வி குறித்த பொது அடிப்படை நோக்கங்கள் சரியானதாக இருக்கின்றது, சம்பவங்களும், தனி மனிதர்களுமே காரணம் என்று நிறுவ முனைகின்றனர்.
4.ஒருசில துறையில் வெற்றி பெறும் கல்விமுறைமையும் - கற்றல் முறையும், விரல்விட்டு எண்ணக் கூடியவரை உருவாக்குவதை இலக்காகக் கொண்டதே கல்விமுறையாக இருக்கின்றது. இதை அடையும் போட்டிக் கல்வியும் - மனப்பாடமாக்கும் கல்விமுறையையும் அங்கீகரிக்கும் வண்ணமே, ஓப்பீட்டு ரீதியாக அணுகுமுறைகளும் - தீர்வுகளும் முன்வைக்கப்படுகின்றது.
இப்படி இங்கு கல்வி வீழ்ச்சி குறித்து ஆராயும் சிந்தனை முறையே தவறாக இருக்கும் போது, கல்வி பொது வீழ்ச்சியையும், அதன் காரணத்தையும் ஆராய முடியாது. வெறுமனே பிறரைக் குற்றம் சாட்டி, மாணவர்கள் மீதான அதிகாரத்தைக் கோருவதாகவே இருக்கின்றது.
பாலியல் வன்முறை (குற்றம்) மனிதப் பண்பா!?
குற்றங்கள் குறித்து பேசும் போது தனிமனிதனின் சமூகப் பொறுப்பு எவ்வளவுக்கு முக்கியமானதோ, அதேயளவுக்கு சமூகமும் அதற்கு பொறுப்பாகும். குற்றங்களுக்கு சமூகம்; பொறுப்பேற்காது, தனிமனிதனை மட்டும் குற்றவாளியாக காணும் சிந்தனைமுறைமை முதலாளித்துவக் கண்ணோட்டமாகும. தனிமனிதனை குற்றவாளியாக வரையறுக்கும் இந்த முதலாளித்துவ சிந்தனைமுறைமைதான், பெண்கள் மீதான பாலியல் ரீதியான கருத்தியல் வன்முறைகளின் போதான எதிர்வினையாக இருக்கின்றது.
இதனால் குற்றங்கள் குறித்த கண்டனங்கள், குற்றங்களை ஒழிப்பதில்லை. தனியுடமை சிந்தனைமுறையாக இருக்கின்றது. இனம், மதம், சாதி, பால்.. என்று குறுகிய கண்ணோட்டத்தில் சிந்தித்துக் கொண்டும், வாக்குகளைப் போட்டுக் கொண்டும், சமூகத்திற்கு கேடான ஒரு விடையத்துக்கு எதிர்வினையாற்றுவது என்பது, ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பொதுவான மனிதப் பண்பிலிருந்து எழுவதல்ல.
இந்த வகையில் பாலியல் குற்றங்கள் முதல் பாலியல்ரீதியான கருத்தியல் நிந்தனைகளுக்கு எதிரான குரல்கள் எல்லாம் ஆணாதிக்கத்துக்கு எதிரானதாக கருதுவது கூட, ஆணாதிக்கம் தான். ஆணாதிக்க சமூக அமைப்புமுறை என்பது, கட்டற்ற பாலியல் வன்முறையை அனுமதிப்பதில்லை. இந்த ஆணாதிக்க தனியுடமை சமூக அமைப்பு, தனக்கான சட்ட வரைமுறைகளைக் கொண்டு இருக்கின்றது. இதனால் கண்டனங்கள் பெண்ணியல் நோக்கில் இருக்க வேண்டியதில்லை, ஆணாதிக்க நோக்கிலும் கண்டிக்க முடியும். இந்த வகையில் ஆணாதிக்க சட்ட வரம்பு முறைமைகளில் இருந்து வருவது தான், பெரும்பாலான கண்டனங்கள்.
ஆணாதிக்கமானது பெண்ணை பாலியல் "ஒழுக்கத்தின்" அடிப்படையில் "புனித பண்டமாகவோ" அல்லது சந்தைக்கேற்ற "கவர்ச்சி பண்டமாகவோ" முன்னிறுத்திப் பூசிக்கின்றது. இதற்கு தனிமனித வக்கிரங்கள் மூலம் கேடுவரும் போது, ஆணாதிக்கம் கண்டிக்கின்றது. இங்கு இந்த ஆணாதிக்க சிந்தனை கூட, பாலியல் வன்முறையை, மொழிரீதியான பாலியல் வன்முறையை கண்டிக்கின்றது.