பெரியாரின் பெயரில் பெண்களுக்கு நிகழும் அவலம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 17 October 2018
- Hits: 6604
பெரியாரின் பெயரில் ஆணாதிக்கம். பெரியார் பெண்ணை சுய உணர்வுள்ள மனிதனாக முன்னிறுத்தியவர். பெண் ஆணின் அடிமையுமல்ல, ஆணின் காமப் பொருளுமல்ல என்றவர் பெரியார். சுயமரியாதையுள்ள, பகுத்தறிவுள்ள பெண்ணாக (மனிதனாக), தமிழகத்துக்கு அறிமுகம் செய்தவர் பெரியார். இதனால் தான் தமிழகம் பெரியாரின் மண்.
இப்படி அறிமுகம் செய்த பெண்ணை உடலாக, பாலியல் பண்டமாக, ஆபாசப் பொருளாக, ஆணிண் பாலியல் தேவைக்கு ஏற்ற சரக்காக முன்னிறுத்திய ஒரு பொறுக்கி தான் வைரமுத்து. தமிழைக் கொண்டு பெண் குறித்த பெரியாரின் கருத்தை தமிழகமெங்கும் குழிதோண்டி புதைத்ததுடன், பெண்களை இழிவுபடுத்தியவன். பார்ப்பனிய சிந்தனையானது ஒரு பெண்ணை எப்படி பார்க்கின்றதோ, அதை தமிழ் மொழியைக் கொண்டு முன்னிறுத்தியவன் வைரமுத்து.
பெரியாரிஸ்ட்டுக்கள் என்று கூறிக் கொள்ளும் பலரும், தமிழை முன்னிறுத்தி பெரியாரை தோற்கடித்த அந்தப் பார்ப்பனிய ஆணாதிக்கத் தமிழை, "தமிழுக்கு செய்த" தொண்டு என்று போற்றுகின்றனர். தமிழனாக முன்னிறுத்தும் பெரியாரிஸ்டுகளும், இனவெறி பிடித்த தமிழ் பாசிட்டுகளும் கூடி, பெரியாரை அவர் போராடிய மண்ணில் தூக்கி எறிவது நடந்தேறுகின்றது.
எந்தப் பெரியாரை தமிழகத்தில் தோற்கடிக்க பார்ப்பனியம் போராடுகின்றதோ – அதை பெரியாரிஸ்ட்டுகள் என்று கூறிக்கொள்வோர் மூலம் செய்திருக்கின்றது. அதை தமிழ் என்று முழங்கும், இனவெறியர்கள் மூலம் செய்திருக்கின்றது. சின்மயி பெரியார் முன்வைத்த பெண்ணாக மாறி, தமிழகத்தின் போலி ஆணாதிக்க முகத்தை கிழித்தெறியும் பெரியாரியப் பெண்ணாக காட்சியளிக்கின்றார்.
சின்மயியின் தன் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான குரல், போலி பெரியாரிஸ்ட்டுகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும், ஆணாதிக்கவாதிகளும் எதிரானதாக பரிணாமடைந்திருக்கின்றது.
யாழ்ப்பாணிய ஆணாதிக்கப் பன்றிகளுக்கு, சின்மயி சொன்ன மீ.ரூ விதிவிலக்கல்ல
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 15 October 2018
- Hits: 7532
வடக்கில் புரையோடி வரும் இலஞ்சத்தில் பாலியலும் அடங்கும். அதிகாரத்தின் அடையாளமாக பாலியல் மாறி இருக்கின்றது. பெண்கள் கல்வியில் வெற்றி பெற, பாலியலை அனுசரிக்கக் கோருகின்றனர். பெண்ணின் முன்னேற்றம் என்பது ஆணை அனுசரிக்கக் கோருகின்றது. வீட்டுக்கு வெளியில் பெண் வளர்ச்சி என்பது, ஆணின் பாலியல் தேவையை பூர்த்தி செய்தால் சாத்தியம் என்பது அதிகாரத்தின் குரலாக இருக்கின்றது. இதுதான் இன்றைய யாழ்ப்பாணிய ஆணாதிக்க சமூகத்தின் பொது வெட்டு முகம்.
யாழ் மையவாத சமூகத்தை சுற்றி நடக்கும் மீ.ரூக்களை பேசியாக வேண்டும்;. இன்று பேசத் தவறினால், என்றுமே பேச முடியாது. யாழ் மீ.ரூக்கு பின்னணியில் உள்ள ஆணாதிக்கக் போக்கிலிகளைப் பாதுகாக்கவே, பொதுவான கள்ள மௌனம் அரங்கேறுகின்றது. இந்த பின்னணியில், இலக்கியம், ஊடகவியல், அரசியல் .. என்று, அனைத்துத் துறையிலும், மீ.ரூ வுக்கு பஞ்சமில்லை.
இன்று தேசியம், ஊடகவியல், இலக்கியம், அரசியல் .. எங்கும் ஆணாதிக்கமே கொலுவேற்று இருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுக்க, ஆண்கள் சமூகம் மறுக்கின்றது. கலை இலக்கிய எழுத்து உலகில், ஆணாதிக்க அதிகாரமும் - ஆணின் பாலியலுக்கு ஏற்ப பெண்ணை அணுகுவதுமே, கோலோச்சிக் கிடக்கின்றது. பெண்ணியம் பேசும் பெண்கள் இதற்கு அடங்கிக் கிடப்பதைத் தாண்டி, இதை விளங்கிக் கொள்ள முடியாது.
சின்மயி வைரமுத்துக்கு எதிராக சொன்ன மீ ரூ குறித்து
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 11 October 2018
- Hits: 6927
இனவாதத்தை முன்னிறுத்தும் தமிழ் தேசியம் முதல் போலிப் பெரியாரிஸ்ட்டுகள் வரை, சின்மயி, வைரமுத்துவின் சாதி என்ன என்ற அளவுகோலில் இருந்து, சின்மயி மீ ரூவானது தமிழனுக்கு எதிரான "பார்ப்பனச்" சதி என்று கூறி, "சூத்திரனின்" ஆணாதிக்கத்துக்கு வக்காலத்து வாங்குகின்றனர். மற்றொரு தரப்பு 14 வருடத்துக்கு முந்தையது, இன்று இது எப்படி சாத்தியம் என்று கேட்டு, ஆணாதிக்க வக்கிரங்களுக்கு வாலாட்டுகின்றனர். இன்னொரு தரப்பு மீ ரூவை சொல்லக் கூடிய பெண், சம்பவத்தின் பின்னான காலத்தில் குறித்த நபருடன் கொண்டு இருந்த உறவைக் காட்டி, பெண்ணின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கிவிட முனைகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட விடையங்களைக் கொண்டு, "நடத்தை" குறித்த ஆணாதிக்க வக்கிரங்களைக் கொண்டு அளவெடுக்க முனைகின்றனர். தமிழை இழுக்குப்படுத்த "பார்ப்பனச்" சதி என்று கூறி, வைரமுத்துவின் ஆணாதிக்கத் தமிழையே தமிழனின் தமிழாக, ஓட்டுமொத்த பெண்களுக்கு எதிராக நிலைநிறுத்த முனைகின்றனர். கவிஞர்கள் என்று கூறிக்கொள்வோர் – தங்கள் சோரத்தை மூடிமறைக்க வைரமுத்துவுக்கு கவசமிடுகின்றனர்.
இப்படி சமூக வலைத்தளங்களில் ஆணாதிக்கத்தை முன்வைக்கும் தமிழ் இனவாதிகள், போலிப் பெரியாரிஸ்;ட்டுகள், போலித் தலித்திய வாதிகள், போலிப் பெண்ணியவாதிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கவிஞர்கள் …. ஆணாதிக்கத்துக்கு கும்மி அடிக்க, வைரமுத்து தனது வர்க்க – ஆணாதிக்க நிலையில் இருந்து தன்நிலை விளக்கம் கொடுக்கின்றார்.
"அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று" இப்படி தன்னையும், தன்னைப் போன்ற பாலியல் நடத்தை கொண்ட பலரையும் சேர்த்து காப்பாற்றி விட முனைகின்றார்.
மீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 10 October 2018
- Hits: 7641
சில வருடங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் இலங்கை-இந்திய "இலக்கிய -அரசியல்" வெளியில் இரு மீ ரூ - பிரச்சனைகள் கிளப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் மற்றவர் இந்தியாவை சேர்ந்தவர். பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆண்களும் முறையே ஒருவர் இந்தியர் மற்றவர் இலங்கைத் தமிழன்.
இந்த பிரான்ஸ் மீ ரூ-க்கள் சந்திக்கு வந்த வேளையில், இலங்கை-இந்திய "இலக்கிய -அரசியல்" மாற்று சக்திகள் தாங்கள் தான் என மார்தட்டிக் கொண்ட பாரிய குழுவொன்று அந்த இரு ஆண்களுக்காகவும் குரல் கொடுத்தது.
அண்ணாக்களைக் காப்பாற்ற, பெண்கள் இருவர் மீதும் அவதூறுகள் இவர்களால் பரப்பப்பட்டது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்த பெரியாரிசம் கதைக்கும் பெண் மீது படுகேவலமாக பாலியல் அவதூறுகள் கொட்டப்பட்டது. அவதூறுகளை, அப் பெண்ணை பாலியல்ரீதியில் சுரண்ட முற்பட்ட ஆண் எழுத்தாளரே, "soft porn" அல்லது ஆபாசக் கதை வகை எழுத்தாக எழுதி வெளியிட்டார். அவர் எழுதியதை "அவர் பக்க கருத்து" எனும் போர்வையில் அவரின் தொண்டரடிப்பொடிகள் பரப்பினார்கள். அக்காலத்தில், புலிகளுக்கு அடுத்ததாக இந்த எழுத்தாளர் சார்ந்த குழுவிடமே இணையங்கள் பல இருந்தன. Facebook அப்போது தான் அறிமுகமான காலம் என நினைக்கிறன். .......
மேற்படி இரு மீ ரூ-க்கள் சார்ந்து பெண்களுக்காக வெகு சிலரே குரல் கொடுத்தார்கள். இந்தியரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக, அந்தக் காலத்தில் மிகவும் எழுச்சியுடன் இருந்த பெண்கள் சந்திப்பு சார்ந்த பெண்கள், சக்தி சஞ்சிகை, ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர் வெளியீட்டுக் குழு போன்றவர்கள் குரல்கொடுத்தார்கள். பகிரங்க நோட்டீஸ் இவர்களால் வெளியிடப்பட்டது. இந்தியாவை சேர்ந்த பெரியாரிஸம் கதைக்கும் பெண்மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக தனிநபர்கள் பலர் குரல் கொடுத்தார்கள். பெண்ணியம் பேசும் பெண்கள் குழுக்கள் குரல் கொடுத்ததாக எனக்கு நினைவில் இல்லை.
பாரிசில் நடந்த "புதுசு" வெளியீடும் - முன்வைக்க தவறியவையும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 09 October 2018
- Hits: 5856
1980 களில் வெளியான புதுசு சஞ்சிகை - பாரிசில் மகாஜன பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டது. புதுசு சஞ்சிகை வெளியிட்ட நால்வரில் மூவர் – இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
1980 இல் சமூகத்தின் பொது நோக்கில் ஒன்றுபட்டு பயணித்தவர்கள் - இன்று எதிரெதிர் அரசியல் முனைகளில் பயணிக்கின்ற இன்றைய பொதுப் பின்னணியில் - அன்றைய பொது சமூக அக்கறையில் இருந்து விலகி நின்றபடி - மறு வெளியீட்டில் ஒன்றுபட்டு நிற்பது ஏன் என்ற கேள்வி எழுவது இயல்பாகின்றது.
இந்த அடிப்படைக் கேள்விகளுடனேயே - அதற்கான பதில்களையும் எதிர்பார்த்தபடி, வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தேன். 1980 களில் பொது சமூக நோக்குடன் வெளிவந்த புதுசு சஞ்சிகையுடன் எனக்கு இருந்த நெருங்கிய தொடர்பின் அடிப்படையில் - இந்தக் கூட்டம் அதற்கான பதிலை தரவில்லை என்பதே உண்மை.
அதேநேரம் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இந்தச் சஞ்சிகை கொண்டிருந்த வீச்சு - அது கொண்டு இருந்த உள்ளடக்கம் - அது வெளிப்படுத்திய சமூகப் பார்வை எப்படி அந்தக் காலத்தில் சாத்தியமானது என்ற கேள்வியை பொதுவில் எழுப்பியும் இருந்தனர். அதற்கு பாடசாலை என்ற குறுகிய வட்டத்தைத் தாண்டி, பொது உலக நோக்கில் அதை முன்வைக்க முடியவில்லை.
பாடசாலையில் இதற்கான பொதுச்சூழல் இருந்தது குறித்து கூற முடிந்த அதேநேரம், பாடசாலையில் இதை ஊக்குவித்தவர்களின் உலகப் பார்வை குறித்து எதையும் கூற முடியவில்லை. சமூகம் குறித்த பொதுப் பார்வை இன்றி, பாடசாலை சூழல் தானாக கனிவதில்லை. ஆதைச் சொல்வது, இன்றைய மாற்றத்துக்கு அவசியமானது.
யாழ் மையவாதச் சிந்தனையா! "சொர்க்கத்தில் பிசா" சைக் காட்சிப்படுத்துவதை தடுத்தது!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 08 October 2018
- Hits: 5891
"சொர்க்கத்தில் பிசாசு" படம் காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டதற்குப் பின்னால் மக்கள் விரோதமான அதிகாரமானது - ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரானதே. அதே போன்றதே ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராது முன்னிறுத்துகின்ற ஜனநாயகத்தின் குரலும். அதிகாரத்தின் குரல் போன்று, ஜனநாயகத்தின் குரலும் ஒடுக்கும் தரப்பு சார்பில் இருந்து எழுகின்றது.
இந்த வகையான ஜனநாயகமானது உலகை ஆக்கிரமிக்க அமெரிக்கா முன்வைக்கும் ஜனநாயகத்திற்கு நிகரானது. இந்திய பாசிச பார்ப்பனியத்தின் ஜனநாயகத்துக்கு ஒத்தது. இதை நாம் புரியும் வகையில் கூறினால் யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான ஜனநாயகம். அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சாராதா ஜனநாயகம் என்பது, இயல்பில் வெள்ளாளியச் சிந்தனையிலானது.
இது சாராம்சத்தில் புலிகளின் ஜனநாயகத்துக்கு நிகரானது. புலிகள் தங்களுக்கும் - தங்கள் போராட்ட வழிமுறைக்குமான குறுகிய ஜனநாயகத்தை முன்னிறுத்தி – ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை மறுத்ததிற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. ஒரு ஒடுக்குமுறையைக் காட்டி பிற ஓடுக்குமுறைகளால் ஒடுக்கியது போன்று, இங்கு ஜனநாயகம் குறுக்கப்படுகின்றது.
இன்று ஜனநாயகம் பேசுகின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் - புலிகள் உள்ளிட்ட தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் ஜனநாயகத்தை மறுத்தபோது, மக்களுக்காக போராடுவதற்காக என்று கூறி ஜனநாயகத்தைக் கோரியவர்கள் தான். ஆனால் புலிக்கு பின் தொடர்ந்து இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சார்பாக - அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கும் ஜனநாயகத்தை கோரி செயற்படவில்லை. மாறாக புலிகளையும் - மக்களையும் ஒடுக்கிய, ஒடுக்குகின்ற அரசுக்கு சார்பாக ஜனநாயகத்தைப் பேசுகின்றவர்களாகவே இன்று இருக்கின்றனர்.
"சொர்க்கத்தில் பிசாசு" க்கான ஜனநாயகக் குரல் பக்கச் சார்பற்றதா!?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 04 October 2018
- Hits: 6109
"சொர்க்கத்தில் பிசாசு" படம் காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டதற்குப் பின்னால் மக்கள் விரோதமான அதிகாரமானது - ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரானதே. அதே போன்றதே ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராது முன்னிறுத்துகின்ற ஜனநாயகத்தின் குரலும். அதிகாரத்தின் குரல் போன்று, ஜனநாயகத்தின் குரலும் ஓடுக்கும் தரப்புக்கு சார்பில் இருந்து எழுகின்றது.
இந்த வகையான ஜனநாயகமானது உலகை ஆக்கிரமிக்க அமெரிக்கா முன்வைக்கும் ஜனநாயகத்திற்கு நிகரானது. இந்திய பாசிச பார்ப்பனியத்தின் ஜனநாயகத்துக்கு ஒத்தது. இதை நாம் புரியும் வகையில் கூறினால் யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான ஜனநாயகம். அதாவது ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சாராதா ஜனநாயகம் என்பது, இயல்பில் வெள்ளாளியச் சிந்தனையிலானது.
இது சாராம்சத்தில் புலிகளின் ஜனநாயகத்துக்கு நிகரானது. புலிகள் தங்களுக்கும் - தங்கள் போராட்ட வழிமுறைக்குமான குறுகிய ஜனநாயகத்தை முன்னிறுத்தி – ஓடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை மறுத்ததிற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. ஒரு ஓடுக்குமுறையைக் காட்டி பிற ஓடுக்குமுறைகளால் ஓடுக்கியது போன்று, இங்கு ஜனநாயகம் குறுக்கப்படுகின்றது.
DEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 02 October 2018
- Hits: 7711
இங்கு யாழ்ப்பாணத்தில, சில வருடங்களாக யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. சில சிங்கள NGO - முதலாளிகள் மேற்குநாடுகளின் நிதியில் இதை நடத்துகிறார்கள். கடந்தவருடம் கூட இதை பற்றி விரிவாக எழுதியிருந்தேன். இப்போ, நான் இங்கு பதியப்போவது இந்த பட விழாவில் திரையிட மறுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு படத்தைப்பற்றி. புலம்பெயர் நாடுகள் உட்பட இலங்கையில் தம்மை அதிதீவிர ஜனநாயகவாதிகள், எழுத்தாளர்கள், சமுகப் போராளிகள், மார்க்சிசவாதிகள், இடதுசாரிகள் என கூறிக்கொள்வோர் சிலர் DEMONS IN PARADISE என்ற படம், மேற்படி படவிழாவில் திரையிட தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி - அதற்கு எதிராக குரல்கொடுக்கின்றனர். ஆத்திரப்படுகின்றனர். போராட்டத்துக்கு அறிவித்தல் விடுகின்றனர். டெமோன் இன் பரடைஸ் என்ற படத்தின் இயக்குனர் ஜூட் ரத்தினத்தின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக ஆக்ரோஷத்துடன் கூக்குரலிடுகின்றனர்.
ஆனால், இதே நபர்கள் ஆண்டாண்டு காலமாக புலியெதிர்ப்பை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இன மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராகவே செயற்படுபவர்கள். இன்று மேற்படி படத்தை திரையிட வேண்டுமென இவர்கள் கூப்பாடுபோடுவதன் காரணமே, அந்தப் படத்தின் அடித்தளம் - பிரச்சார வீச்சு எல்லாம் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்துக்கான மறுமுனைவுக்கு எதிராக இருப்பதுதான் என்பது எனது கருத்து !
போதநாயகியின் மரணம் தற்கொலையல்ல - ஆணாதிக்கக் கொலை
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 30 September 2018
- Hits: 5923
ஆணாதிக்க சமூகமும் - வக்கிரம் பிடித்த ஆணாதிக்கவாதியும் செய்த கொலையை மூடிமறைக்க – "தேசியத்தின்" கொலையாக திரித்துக் காட்டுவது நடக்கின்றது. ஓடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கிய புலித் தேசியத்தினதும்;, புலிக்குப் பிந்தைய போலித் தேசியத்தினதும் ஒரு பிரதிநிதியாக இருந்த செந்தூரனின் நடத்தையை முன்னிறுத்தி, "தேசியமே" இந்த தற்கொலைக்கு காரணமாகக் காட்டிவிட முனைகின்றனர். இதன் மூலம் இனரீதியாக ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை மறுப்பதற்கு, போதநாயகியை மறுபடியும் கொன்று விடுகின்றனர். இதன் மூலம் ஆணாதிக்கத்தையும் - இனவொடுக்குமுறையையும் பாதுகாக்க முனைகின்றனர். இதற்கு மாறானதே உண்மை.
ஆணாதிக்க வன்முறையானது போதநாயகியை தற்கொலைக்குத் தூண்டி - கொலை செய்திருக்கின்றது. போராடி வாழ வேண்டிய பெண்ணின் துயரமான வாழ்வுக்கு, ஆணாதிக்க சமூகமே பொறுப்பேற்க வேண்டும்;. சமூகத்தில் உள்ள பிற்போக்கான சமூகக் கூறுகளின் துணையுடன் - குரூரமான ஆணாதிக்க நடத்தைகளைக் கொண்டு பெண்ணை ஒடுக்கும் போது - தனிமைப்படுத்தப்படுகின்ற ஒரு பெண்; தற்கொலையை தேர்ந்தெடுக்கின்ற அளவுக்கு, சமூகம் பொறுப்பற்றதாகி இருக்கின்றது.
இது போன்று இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது என்ற உணர்வுடன் - ஆணாதிக்கத்துக்கு எதிராக நாம் போராட வேண்டும். இதுதான் போதநாயகிக்கு கொடுக்கும் கவுரவமாகும். இதற்கு மாறாக இதை "தேசியத்தின்" வக்கிரமாக திரித்துக்காட்டி, ஆணாதிக்கத்தை கண்டுகொள்ளாத சமூகமும், மனித அவலத்தை கொசிப்பாக்கி செய்தியாக்கும் வக்கிரங்களே அரங்கேறுகின்றது.
ஆணாதிக்க வக்கிரத்தையும் - வன்முறையையுமே போதநாயகி எதிர்கொண்டாளே ஓழிய அவன் முன்வைத்த "தேசியம்" சார்ந்த ஒடுக்குமுறையையல்ல. இப்படி இருக்க "தேசியமே" காரணம் என்று, போலி இடதுசாரியமும் - போலிப் பெண்ணியமும் ஓப்பாரி வைப்பது நடக்கின்றது. எதிர் எதிரான போலி "தேசியவாதங்கள்" தங்கள் சொந்த ஆணாதிக்கத்தை மூடிமறைக்க, விதவிதமாக கதைகள் மூலம் வக்கிரமடைய வைக்கின்றனர்.
பொதுப் பணத்திற்கு கணக்குக்காட்ட மறுக்கும் பாடசாலைகள் குறித்து
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 26 September 2018
- Hits: 6723
குறிவைத்து புலம்பெயர்ந்த பழைய மாணவர்களிடம் பணம் வாங்குவது பாடசாலைகளின் குறுகிய நோக்கமாகிவிட்டது. பணத்தை திரட்டித்தரவே பழைய மாணவ சங்கங்கள் என்றளவுக்கு, சங்கங்கள் தரம் தாழ்ந்து வருகின்றது.
பணத்தைக் கொணடு எதையும் வாங்கலாம், கல்வியை ஊட்டலாம் என்ற அபத்தமே, கல்வியைச் சுற்றி அரங்கேறுகின்றது. பணம் கொடுத்து கல்வி பெறலாம் என்ற தனியார் கல்வியை முறைக்கு ஏற்ப, பணம் சார்ந்த செயற்பாடுகள் அரங்கேறுகின்றது. இந்த பின்னணியில் பணமே, கல்வி நடவடிக்கையாகி வருகின்றது. பணத்தை கேள்விகளின்றி தரவேண்டும் - அதைக் கொடுக்க வேண்டும் என்பதே, சமூக நடத்தையாக குறுக்கப்பட்டு வருகின்றது.
இப்படி பெறப்படும் - கொடுக்கப்படும் பணத்துக்கு வெளிப்படையான கணக்கு கிடையாது. கணக்கு வெள்ளை அறிக்கை கோருவது – கல்விக்கு எதிரானது என்ற கூறுமளவுக்கு, பணம் அனைத்துமாகி, பாடசாலையை சுற்றி எடுபிடிகள் உருவாகி வருகின்றனர்.
யார் யார் எவ்வளவு பணம் தந்தார்கள், அது எதற்கு - எப்படி செலவு செய்யப்பட்டது என்று ஒவ்வொரு சதத்துக்கும் வெளிப்படையான கணக்கு கிடையாது. கணக்கை வெளிப்படையாக பொது வெளியில் முன்வைக்க மறுக்கின்றார்கள் என்பதே உண்மை.
இதைவிட பண அறவீடுகள் கல்வி கற்கும் மாணவர்களிடமும் நடக்கின்றது. புதிதாக பாடசாலையில் சேரும் மாணவர்களிடம் பெரிய தொகையாக பணம் கறக்கப்படுகின்றது.
ஆக இப்படி கல்விக்கூடங்கள் பணத்தை கையாளும் ஊழல் நிறுவனங்களாகவும் – மோசடிகள் நிறைந்ததாகவும் மாறி வருகின்றது.
இன்று பாடசாலைகளைப் பொறுத்த வரை, வருடாந்தம் ஒரு சில லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை திரட்டப்படுகின்றது.