உண்மைகளை ஒத்துக்கொள்ளாமல் எம்மால் உரிமைகளை வென்றெடுக்க முடியாது
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 02 February 2016
- Hits: 5838
இலங்கையில் பெரும்பான்மை இனத்தினராகிய சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை இனத்தினரான தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சனை என்று கூறிக் கொண்டு இலங்கையின் அரசியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்சித் தலைமைகளும் அவர்களது பின்னணி சக்திகளும் தங்களின் ஒரே நோக்கமான பொருளாதாரச் சுரண்டல்களை (பணம் குவிப்பதை) ஒழுங்காக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்திலும் அதனைத் தொடர்வதற்கான பாதையில்தான் இன்று நாட்டின் அரசியல் முன்னெடுப்புகள் காணப்படுகின்றன.
இந்த உண்மைகளைச் சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டு இலங்கையில் ஒரு நீதி நியாயமுள்ள - சகலருக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கும் ஒரு சமூக - அரசியல் ஒழுங்குக்கான போராட்ட நடவடிக்கைகளில் நாளும் பொழுதும் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டங்களை இன-மத-பால்-பிராந்திய பாகுபாடுகளைக் கடந்து "எல்லோரும் இந்நாட்டு மக்களே" என்ற உணர்வுடனும் - உறுதிப்பாடுடனும் - நம்பிக்கையுடனும் நாடு பூராவும் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டின் "இருண்ட காலம்" குறித்து "நல்லாட்சி" அரசு
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 31 January 2016
- Hits: 2956
நாட்டின் "இருண்ட காலம்" குறித்த புதிய விளக்கத்தை 2016 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்வைத்திருக்கின்றது. முன்பு இருண்டகாலமாக, மகிந்த அரசின் ஜனநாயக விரோத ஆட்சிக்காலத்தையும், அதன் ஊழல்களையும் காட்டியே முகமாற்ற ஆட்சியைக் கோரியது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு இருண்டகாலம் பற்றி காட்டியதற்கு முரணாக, நாட்டின் கடந்தகால பொருளாதாரக் கொள்கையை இருண்டகாலமாக இன்று அறிவித்திருக்கின்றது. அதே நாட்டின் பொருளாதாரத்தை தீவிரமான தூய தனியார்மயமாக்கல் மூலம் ஒளியேற்றப் போவதாக அறிவித்திருக்கின்றது.
நம் அன்னையர் அழும் கண்ணீர் ஒரு நாள் மகிந்தாவை எரிக்கும்!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 31 January 2016
- Hits: 3043
தவப்புதல்வன் கொடுஞ்சிறை போகிறான். தந்தையவன் கண்ணீர் சிந்துகிறான்.
"இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப, நாய் நரிகள் பேய் கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்"
என்று பட்டினத்தார் பாடியது போல வாழும் ஒரு தந்தை அழுதால் நாமும் சேர்ந்து அழுவோம். இங்கு அழுபவன் ஒரு தந்தை அல்ல, அவன் ஒரு மனிதனே அல்ல. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலையாளி. பச்சைக் குழந்தைகள் மேல் எரிநெருப்புக் குண்டுகள் வீசிக் கொன்றவன். சுற்றிக் கொலைகாரர்கள் சூழ்ந்து நின்ற போதும் நடக்கப் போவது என்ன என்று தெரியாமல் கையில் இருந்த பிஸ்கட்டை கடித்து தின்ற குழந்தை பாலச்சந்திரனை கொல்லச் சொன்ன கொலைகாரன்.
"ஒளிமயமான" நாட்டைப் பற்றி "நல்லாட்சி" அரசு
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 31 January 2016
- Hits: 3042
தேர்தலை நடத்துவதும், வாக்குப்போட வைப்பதுவும், அமைதியான ஆட்சிமாற்றத்தை நடத்துவதும், சட்டத்தின் ஆட்சியை நடத்துவதும் இதைத்தான் "ஜனநாயகம்" என்கின்றனர். இதற்கு அமைவான முகமாற்றத்தையே நாட்டின் "நல்லாட்சி" என்று கூறியவர்கள் தொடங்கி முகமாற்றம் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தரும் என்று நம்பி வாக்களித்தவர்கள் வரை, காலாகாலமாக ஏமாற்றப்படுவதும் இறுதியில் மக்கள் தங்கள் உரிமைகளை இழப்பதும் தொடருகின்றது.
அரசு "நல்லாட்சி" என்று கருதுவது, தனியார் பொருளாதாரக் கொள்கையைத்தான். அதாவது சமூகம் சார்ந்த பொருளாதாரக் கொள்கையல்ல, மாறாக தனியார் பொருளாதாரக் கொள்கையை அரசு முன்வைக்கின்றது. செல்வத்தை குவித்து வைத்துள்ளவர்கள் தங்கள் செல்வத்தை பெருக்கும் வண்ணம், நாட்டின் சமூகப் பொருளாதாரத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்தும், அதைச் சட்டரீதியானதாக சட்டத்தின் ஆட்சியாக மாற்றுவதே, அரசின் கொள்கை மட்டுமல்ல நடைமுறையாகவும் இருக்கின்றது.
வைரமுத்து அண்ணாந்து விட்ட கொட்டாவி எல்லாம் ஈழ காவியமாக வரப்போகிறது
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 30 January 2016
- Hits: 3884
"பண்ணென்பார் பாவமென்பார் பண்பு மரபென்றிடுவார்
கண்ணைச் செருகிக் கவியென்பார் - அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு"
புதுமைப்பித்தனின் நக்கல் இது. வைரமுத்து அண்ணாந்து கொட்டாவி விட்டதெல்லாம் தமிழ் சினிமாப் பாட்டாச்சு. தமிழ்ச் சினிமா என்கின்ற மூன்றாந்தர கேலிக்கூத்தும் அதன் பாடல்களும் எப்படி வேண்டுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதில் நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இலங்கையின் வடமாகாணசபை வைரமுத்துவை பொங்கல் விழாவிற்கு எதற்காக கூப்பிட வேண்டும்?. வைரமுத்து உணர்ச்சிவசப்பட்டு "நான் ஈழ காவியம் பாடியே தீருவேன்" என்று ஒற்றைக்காலில் நிற்கிறாரே; இலங்கைத்தமிழர்கள் பட்ட கஸ்டம் எல்லாம் போதாதா? இவரின் காவியத்தையும் காது கிழியக் கேட்க வேண்டுமா? அவர் ஜிப்பாவில் கையைச் சொருகிக் கொண்டு, கண்ணைச் செருகிக் கொண்டு சொல்வதையெல்லாம் கவிதை என்று கேட்க வேண்டுமா?
யாழ் மேலாதிக்க சிந்தனையின் பிரதி தான் "லண்டன்காரர்"
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 29 January 2016
- Hits: 2926
"மனித குலத்தின் வரலாறு முழுவதுமே வர்க்கப் போராட்டங்களின் வரலாறே" என்றார் கார்ல்மார்க்ஸ். இதற்கு முரணாகவே சேனனின் "லண்டன்காரர்" நாவல், லண்டன் கலவரத்தை வர்க்கம் கடந்த கலகமாகக் காட்ட முற்படுகின்றது. "விளிம்புகளின்" கலகமாம்! இந்த நாவல் கலவரத்துக்கு காரணமான வர்க்க உறவுகளை காண மறுப்பதில் இருந்து பாத்திரங்களை இயங்கியலற்ற தனிமனித இயந்திரமாக காட்டுகின்றது. அதாவது கதையில் வரும் மனிதர்களை வர்க்கமற்றவராகவும், நிகழ்வுகளை வர்க்க அமைப்பிற்கு சம்மந்தமில்லாத மனித ("விளிம்புகளின்") நடத்தையாகவும் காட்டுகின்றதும், அதனையே லண்டன் கலவரமாக காட்டுகின்ற அரசியல் பின்னால் இருப்பது யாழ் மேலாதிக்க சிந்தனை முறைதான். யாழ் மேலாதிக்க சமூகம் எப்படி லண்டன் கலவரத்தை பார்க்கின்றதோ, அதை அப்படியே "லண்டன்காரன்" நாவல் மூலம் தரிசிக்க முடியும். கட்சியில் சேர்ந்தால் சரி என்று கருதும், யாழ் மேலாதிக்க வெள்ளாளத்தன "மார்க்சியம்", இப்படித்தான் சமூகத்தை பார்ப்பதுடன் காட்டவும் செய்கின்றதுக்கு "லண்டன்காரர்" நாவல் உதாரணமாக இருக்கின்றது.
சமஉரிமை மறுப்பவர்களின் சமஷ்டிக் கோரிக்கை
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 26 January 2016
- Hits: 5981
இலங்கை ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் இருந்தபோது தமிழர்களாகிய நாம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டோம். இலங்கை சுதந்திரம் அடைந்த பின் "சமஷ்டி" கேட்டோம். மாவட்ட சபையை வென்றெடுத்தோம். "தமிழீழம்" வேண்டி ஆயுதப் போராட்டம் நடாத்தினோம். மாகாண சபையை வென்றெடுத்தோம். இன்று இலங்கையில் ஒரு புதிய அரசியல் நிர்ணயச் சட்டம் வரைவதற்கான ஆரவாரங்கள் தொடங்கியதனைத் தொடர்ந்து "பழையபடி வேதாளம் முருங்க மரம்" ஏறின கதையாக "சமஷ்டி" சந்தைக்கு வந்துள்ளது.
இன்றைய இந்த நிலைமை, கடந்த 68 வருட தமிழ் அரசியலில் அணுவளவேனும் மாற்றம் ஏற்படவில்லை என்பதனையும் - பாமர பாட்டாளித் தமிழ்ப் பேசும் மக்களின் அபிலாசைகளை தமிழ் அரசியல் அணிகள் கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளவில்லை என்பதனையும் வெகு துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கிறது.
காணாமல் போன அம்மா....
இது வெறும் கதையல்ல. என் வாழ்வின் நடந்த உண்மைச் சம்பவம்.
அந்த நாளை இப்ப நினைத்தாலும் என் இதயம் இப்போதும் இரத்தம் சொட்டுகிறது. வாழ்க்கையிலே மறக்க முடியாத ஒரு வரலாற்றுத் துரோகம் செய்து விட்டேன் என்ற குற்றவுணர்வு என்னை நெடுகலும் வாட்டி வதைக்கின்றது. மறக்க வேண்டும் மறக்க வேண்டும் என்ற போதெல்லாம் இந்த நினைவு ஏதோ ஒரு வடிவில் வந்து என்னைக் கட்டிப் போட்டுவிடுகின்றது.
குழந்தைத்தனமாகவும் ஒரு விளையாட்டுப் பிள்ளை போலும் இருந்து விட்டேனே என்றெண்ணி என்னை நானே நொந்து எனக்குள்ளே கூனிக்குறுகிப் போகிறேன்.
உங்கள் பதவி ஆசைகளிற்கு மக்களை பலியிடாதீர்கள், தமிழ்த்தலைமைகளே!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 25 January 2016
- Hits: 3267
அன்று நட்சத்திரங்களும் கூட வேறு மாதிரியே இருந்தன என்று மறைந்த பாடகன் டேவிட் போவி பாடினான். எம் தமிழ்மக்களைப் பொறுத்தவரை ஒரு நாள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளுமே வேதனை தருவதாக, காணாமல் போன தம் உயிரின் உயிர்களை நினைத்து உள்ளம் சிதைய உருகும் நாட்களாகவே இருக்கின்றன. இரவுகளில் கேட்கும் சிறு சத்தங்கள் தம் மக்களின் காலடிச் சுவடுகளோ என்னும் நினைப்பில் அழுத களைத்த விழிகள் மூடினாலும் மனதுகள் விழித்திருக்க நித்திரையின்றி கழிகின்றன இராத்திரிகள்.
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்
என்று தன்னை சிறகிலிட்டு காப்பாற்றிய தாயை நினைத்து கண்ணீர் சிந்தி தீ இட்டான் பட்டினத்தான். ஆனால் நமது தாய்மார்கள் முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்து பெற்ற குழந்தைகளை கடத்தி காணாமல் போகச் செய்து அவர்களின் தாய்மாரை உயிருடன் தீ மூட்டுகிறது இலங்கை அரசு.
இந்து பயங்கரவாதம் செய்த கொலை ரோகித்தின் மரணம்!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 24 January 2016
- Hits: 3154
பிராமண குலக்கொழுந்துகள் தவிர்ந்த மற்ற மனிதர்கள் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்று மனு என்ற இந்துமதப் பயங்கரவாதி அந்த நாளில் மனுதர்ம சாஸ்திரம் என்னும் பயங்கரவாத அறிக்கையில் எழுதினான். இந்த பார்ப்பனப் பயங்கரவாதம் தான் இன்று வரையும் இந்தியாவின் கொள்கையாக இருக்கிறது. அதனால் தான் இன்றைய பார்ப்பன பண்டார பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த ஏழை மாணவர்களை பலி கொடுக்கிறார்கள். ரோகித் வெமுலாவை பலி எடுத்து விட்ட பிறகும் கூட எந்தவிதமான கூச்சமும் இன்றி அவனை தேசத்துரோகி, தீவிரவாதி என்று இந்த பார்ப்பன நாய்கள் இடும் ஊளைகள் மனித குலத்தையே வெட்கி தலை குனிய வைக்கிறது.