ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிராக ஜனாதிபதி
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 23 January 2016
- Hits: 3003
இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.
2016க்குள் 172 புதிய பொலிஸ் நிலையங்கள் - முகமாற்றம் தருகின்ற "நல்லாட்சியின்" தரிசனங்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 20 January 2016
- Hits: 3053
காலங்களை முன் வைத்து ஆரூடம் கூறுகின்ற சாத்திரி போல், முகமாற்றம் மூலம் நல்லாட்சி கிடைக்கும் என்று "ஜனநாயகவாதிகள்" கூற, மக்கள் முகமாற்றத்துக்கு வாக்களித்தனர். இப்படி "நல்லாட்சிக்கு" வாக்களித்தவர்கள், அதை அரசிடம் எதிர்பார்க்கின்றவர்கள், தங்கள் தங்கள் விருப்பங்கள், தேவைகள் பிரச்சனைகளுக் கூடாகவே அணுகுகின்றனர். தங்கள் அனுபவ ரீதியான முடிவுகளில் இருந்தும், ஓப்பீட்டின் அடிப்படையிலும் "நல்லாட்சி"யை ஆதரிப்பதும், விமர்சிப்பதும் நடக்கின்றது. இப்படி அனுபவாதமும், ஓப்பீடும் தருகின்ற முடிவுகள் சரியானதா?.
சாதிய - ஆணாதிக்க கலாச்சாரமே "தமிழனின்" கலாச்சாரம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 19 January 2016
- Hits: 3370
"தமிழன்" என்ற இனமாக தமிழன் தன்னை அடையாளப்படுத்தும் போது சாதி கடந்து அல்ல, சாதியைப் பாதுகாத்துக் கொள்ளவே "தமிழன்" என்ற இன அடையாளம் என்பது எமது கடந்தகால வரலாறாக இருக்கின்றது. இந்த உண்மையின் பின்னால் தமிழனின் கலாச்சாரம், தமிழனின் சிந்தனை அனைத்தும் சாதியமே. சாதிய சமூகம், சாதியப் பண்பாடு கடந்து , கலாச்சாரம் குறித்து "தமிழன்" பேசுவதில்லை.
எம் பச்சை வயல்களை பறிக்க வரும் கொள்ளையர்கள்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 17 January 2016
- Hits: 3268
மூசிப்பனி பெய்த காலையில் செம்மண்ணில் ஆழப் புதைந்த புகையிலைக் கன்றுகளை காற்று அசைத்துச் செல்லும். தூரத்தே பனைமரத்தில் இருந்து பச்சைக்கிளிகள் சிவத்துப் பழுத்த மிளகாய்களை கொத்திச் செல்ல தருணம் பார்க்கும். பெருவரம்பை தொட்டு நிற்கும் வெள்ளத்தை மேவித் தலை தூக்கி நெல்லுக் கதிர்கள் காற்றில் ஆடும். தம் உயிரையே உழைப்பாக கொடுத்த ஆண்களும், பெண்களும் அறுவடை செய்யும் நாள் விரைந்து வர ஆவலோடு பார்த்திருப்பர். இது தான் இலங்கையின் சாதாரண மனிதர்களின் சரித்திரமாக இருந்தது. அரிசி புடைக்கும் போது கொத்த வந்த கோழிகளை காதுத்தோட்டை கழற்றி எறிந்து பெண்கள் கலைத்தார்கள் என்று பழந்தமிழ் பாடல் ஒன்று புளுகுவது போல அவர்களது வாழ்க்கை இருக்கவில்லை. ஆனால் அவர்களால் மூன்றுநேரம் உண்ண முடிந்தது. பனையேறும் தொழிலாளி முதல் பானை வனையும் தொழிலாளி வரை எளிய மனிதர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் கரை சேர்ந்தது
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 17 January 2016
- Hits: 3653
பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் என்னும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராளியின் குரல் இன்று கரை சேர்ந்து விட்டது. பாடல்கள், நாடகங்கள், போராட்டங்கள் என்று அவரது வாழ்வு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றது.
நாடக அரங்கம், குணசேகரன் நாடகங்கள், வடு, தலித்தியம், அரங்கியலும் அரசியலும், நாட்டுப்புற இசைக்கலை, பலி ஆடுகள் போன்ற நூல்களை அவர் தமிழ் வாசிப்புத்தளத்திற்கு விட்டுச் சென்றிருக்கிறார்.
தமிழ்த்தேசியம், இலங்கை அரசு ஆதரவு; ஒரே மேடையில் இரண்டு நாடகங்கள்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 17 January 2016
- Hits: 3271
லண்டன் புறநகர் பகுதியான ஹரோ நகரசபை மேயரான சுரேஸ் கிருஸ்ணா அல்லது லண்டன் பாபா என்பவர் கார்த்திகை மாதத்தில் மாவீரர் நாள் நிகழ்வில் "தமிழ்த்தேசியத்தின் தவப்புதல்வன்" என்னும் நாடகத்தை மேடையேற்றினார். பின்பு கழுத்தில் மணிகள், சங்கிலிகள் தொங்க ரணில் விக்கிரமசிங்காவுடன் சேர்ந்து "நீயும் நானும் ஒண்ணு, அதை தெரியாதவன் வாயில் மண்ணு" என்ற நாடகத்தை ஒரே மாதத்திற்குள் அரங்கேற்றினார்.
பாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 16 January 2016
- Hits: 915
நாளை ஞாயிறு காலை 9 மணிக்கு பாரிஸில் சமவுரிமை இயக்கத்தினர் பொங்கல் விழா கொண்டாட இருக்கின்றனர். உழைப்பில் ஈடுபடும் விவசாயிகள் தமது உழைப்பினையும் அதன் விளைவையும் கொண்டாடுவதே பொங்கல் விழாவாகும். இந்த வருட பொங்கல் விழாவினை மொழி, சமயம், சாதி வேறுபாடுகளை கடந்து இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரையும் ஒன்றிணைத்த கொண்டாட்டமாக கொண்டாட பாரிஸ் சமவுரிமை இயக்கத்தின் கிளை அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.
ஊமைக் காதல்...... (சிறு கதை)
நான் இவ்வளவு காலமும் செய்த வேலைகளிலே, இப்படி ஒரு சந்தோசம், ஒருபோதும்; எங்கும் கிடைத்ததில்லை, அப்படியொரு சந்தோசமான வேலை.
சாதாரண ஒரு குழந்தைப் பராமரிப்புத் துறை தான் எனக்குத் தெரிந்த, பிடித்த தொழில். ஆனால் இந்தப் பராமரிப்புத் தொழிலோடு ஒரு உதவியாசிரியராக ஒரு மூன்றோ நாலோ மணித்தியாலம் வேலை செய்ய முடியுமா என்று கேட்ட போது வியப்பாக இருந்தாலும் மிகவும் ஆனந்தமாகவும் இருந்தது.
எனது நிலையை உணர்ந்த அதிபர் ஜயோ பயப்படாதே......? மூன்றாம் நாலாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு உதவுது தான் உன் வேலை.
சந்தோசமாய் ஏற்றுக் கொண்டேன்.
இறந்த மனிதரைக் கூட இழிவுபடுத்தும் இந்துமத சாதிவெறி!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 12 January 2016
- Hits: 4493
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை நகரத்திற்கு அருகே இருக்கும் திருநாள்கொண்டச்சேரி என்னும் கிராமத்தில் மரணமடைந்த செல்லமுத்து என்னும் இந்துமதத்தினால் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் உடலை அவர்களின் சேரிக்கு பக்கத்தில் இருக்கும் வழுவூர் என்னும் ஊரின் பொதுப்பாதை வழியாக மயானத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது அவர்களைத் தடுத்து அந்த ஊரின் ஆதிக்கசாதி வெறியர்கள் ஊளையிடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஆற்றங் கரையோரமாக நெடுந்தூரம் நடந்து சென்று மரணமடைந்தவர்களை மயானத்திற்கு கொண்டு சென்றிருந்தார்கள். சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பெய்த பெருமழையினால் இந்த பாதையை பாவிக்க முடியாமல் போனதாலேயே அவர்கள் ஊரின் நடுவே செல்லும் பொதுப்பாதையினால் செல்லமுத்து அவர்களின் உடலை எடுத்துச் செல்ல முயன்றார்கள்.
கூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்
கடந்த 7ம் - 8ம் திகதிகளில் தலைநகர் கொழும்பில் உள்ள சினமன் கிரான்ட் விடுதியில் “இலங்கை பொருளாதார மன்றம் 2016” என்னும் தலைப்பில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. உள்நாட்டு ஊடகங்கள் இதற்கு பெரிய முக்கியத்துவம் அளித்திருக்கவில்லை. வெளிநாட்டு ஊடகங்கள் இந்நிகழ்விற்கு அதிமுக்கித்துவம் அளித்திருந்தன. இந்நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் பன்நாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டாளர்கள், 600 வரையான உள்நாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சர்வதேச முதலீட்டாளர், திறந்த சமுதாயம் அமைப்பின் தலைவர் ஜார்ஜ் சோரஸ், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டீகிளிட்ஸ் மற்றும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரும் பிரித்தானிய அரசியல்வாதியுமான நிர்ஜ் தேவா போன்றவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்வினை வழிநடத்திய முக்கிமானவர்கள் ஆவார்.